முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பட்டுக்கோட்டை ஸ்ரீ நாடியம்மன் ஆலய மண்டகப்படி அழைப்பில் 'ஊரார்' வார்த்தை குறித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திர இந்தியாவிற்கு முந்தைய தஞ்சாவூர் ஆட்சி செய்த மராட்டிய சரபோஜி மன்னர்



வேட்டையாடியபோது ஒரு பெண்ணைக் கண்டதாகவும், அவரைத் தொடர்ந்து சென்ற போது அப்பெண் ஒரு வனத்திலுள்ள புதரில் மாயமான தாகவும் பின்னர் அங்கு இரண்டரையடி உயரத்தில் கற்சிலையைக் கண்டதாகவும், கோட்டை சிவன் கோவில் அந்தணர் குருமார்களை அழைத்து அங்கேயே அம்மனுக்கு ஒரு கோவில் அமைந்ததாகவும் வரலாறு கூறும் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ளது ஸ்ரீநாடியம்மன் கோவில். சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக பழைமையானதாகக் கருதப்படும்

கோவில், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.நாடியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் திருவிழா நடத்தப்படும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியன்று நாடியம்மன் கோவில் திருவிழா நடத்தப்பட்டதற்கான அழைப்பிதழை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை எப்போதும் போல அச்சடித்துள்ளதில், திருவிழா விவரங்கள் என்ற தலைப்பில் தினசரி நடக்கும் நிகழ்வுகளைப் பட்டியலிட்டுள்ளனர். இது HR & CE சட்ட விதிகளின் படி அதற்குப் பக்கத்தில் குறிப்பிட்ட நாளின் விழாவை நடத்தும் மண்டகப்படிதாரர் யார் என்ற விவரம் இடம் பெற்ற நிலையில்.




முதல் நாள் விழா மண்டகப்படி தொடர்பான விவரத்தில், 'ஊரார் - ராஜுக்கள், நாயுடு வகையறா' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இதில், ஊரார் என்பது பட்டுக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பட்டியல் ஜாதி மக்களைக் குறிக்கும் சொல்" என ஒரு சாரார் கூறுகிற நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கே.பி.செல்வராஜ்.என்ற நபர் நடுவிக்கோட்டை ஆதிதிராவிடர் நல சங்கம் என ஒரு அமைப்பு புதிதாக உருவாக்கி அதன் தலைவராக உள்ளார்.

பட்டுக்கோட்டை நகரம் மற்றும் அங்கிருந்து 8 கி.மீ தொலைவிலுள்ள நடுவிக்கோட்டை கிராமத்தில் வசிக்கும் பட்டியல் ஜாதி மக்கள், தங்களின் முக்கியக் கடவுளாக நாடியம்மனை பார்க்கின்றனர் எனவும்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கே.பி.செல்வராஜ் தொடர்ந்த வழக்கின் முக்கிய அம்சமாக, மாற்று ஜாதியினரை அடையாளப்படுத்துவது போல, ஆதிதிராவிடர்களையும் அழைப்பிதழில் குறிப்பிட வேண்டும் என்பதைத் தனது கோரிக்கையாக முன்வைத்திருந்தார். வழக்கு விசாரணையின்போது, இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் பதில் மனுவைத் தாக்கல் செய்ததில், "கிருஷ்ண  தேவராயர் ஆட்சிக்காலத்திலேயே இங்கு ராஜுக்களும் நாயுடு சமூகத்தினரும் வந்துவிட்டனர். அவர்கள் தான் கோவிலுக்கு மற்றும் புணரமைப்பு உள்ளிட்ட நன்கொடைகள் தருகின்றனர்" எனத் தெரிவித்திருந்தார்.



"கோவிலில் உள்ள  பழங்காலம் தொட்டே நடந்துவரும் வழக்கத்தை உடனே எடுத்துவிட முடியாது" எனக் கூறியவர், "அழைப்பிதழில் ஆதிதிராவிடர்களைச் சேர்த்தால் மற்ற ஜாதியினரும் தங்கள் பெயரையும் சேர்க்குமாறு உள்ளே வந்துவிடுவார்கள். இதில் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை" என்று வாதிட்டார்.

அதேநேரம், கோவிலில் நன்கொடையாளர்கள் பட்டியலில் மற்ற மண்டகப்படி மாற்று ஜாதியினர் பெயர்கள் உள்ளதாகவும் கோவில் விழாக் குழுவில் அவர்கள் கிடையாதெனவும் அறநிலையத்துறை செயல் அலுவலர் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதியன்று பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஒரு சமாதானக் கூட்டம்  நடத்தப்பட்டுள்ளதையும் கோவிலின் செயல் அலுவலர் அவரது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


அந்தக் கூட்டத்தில், நாடியம்மன் கோவில் விழா அழைப்பிதழில் 'ஊரார்' என்பதற்குப் பதிலாக 'ஆதிதிராவிடர்கள்' எனக் குறிப்பிட வேண்டும் என்று பட்டியல் ஜாதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதேநேரம், உற்சவ மண்டபத்திலிருந்து நடத்தப்படும் மண்டகப்படிகளில் (கடவுளை ஊர்வலமாக அழைத்துச் செல்லும் போது தனிநபர்களோ அல்லது ஜாதிக் குழுக்களோ தங்களின் இடத்துக்கு வரவழைத்து பூஜை செய்வது) தாங்கள் உரிமை எதையும் கோரவில்லை எனவும் பட்டியல் ஜாதி மக்கள் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்குக் கடிதம் எழுதி ஒப்புதல் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.


"அறநிலையத்துறை ஆணையர் முடிவெடுக்குமாறு கூறி 14 ஆண்டுகள் கடந்துவிட்டன. எந்த முடிவும் எட்டப்படவில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற திருவிழா அழைப்பிதழ் வரையிலும் ஊரார் என்றே குறிப்பிட்டதால் வழக்குத் தொடர்ந்தோம்" எனக் கூறுகிறார் கே.பி.செல்வராஜின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இராபர்ட் சந்திரகுமார் என்றவர்  ஒரு குடும்பம் அல்லது ஜாதிக்கான கோவிலாக இருந்தால் யாரும் கேள்வி எழுப்ப முடியாது. ஆனால் இது அரசு நிர்வாகத்தில் நடத்தக்கூடிய கோவில். இங்கு பாகுபாடு காட்டப்படுவதை ஏற்க முடியாது என நீதிமன்றத்தில் வாதிட்டோம்" என்கிறார்.

ஜாதி ரீதியாகவோ, பாலினரீதியாகவோ, பிறப்பு ரீதியாகவோ யாரையும் பாகுபடுத்தக் கூடாது என அரசமைப்புச் சட்டம் சொல்வதையும் நீதிமன்றத்தில் மேற்கோள் காட்டியதாகக் கூறுகிறார் இராபர்ட் சந்திரகுமார்.  இந்த வழக்கில் HR & CE சட்டப்படி இதை விசாரிக்கும் அதிகாரம் அறநிலையத் துறை ஆணையருக்கு முதலில் வழக்கு தாக்கல் செய்த பிறகு தான் அந்த முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் இருப்பினும் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையின் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரிய கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வு,  பிப்ரவரி 17ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கியதில்.

நாடியம்மன் கோவில் திருவிழா என்பது இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாகக் கொண்டாடப்பட வேண்டும் எனத் தாங்கள் கருதுவதாகக் கூறியுள்ள நீதிபதிகள், "இந்த வரையறைகளின்படி பட்டியல் ஜாதியினரும் இதில் அடங்குவர்" எனத் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து தங்களின் தீர்ப்பில், "கோவில் அழைப்பிதழில் நன்கொடைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட ஜாதிப் பெயர்களைப் பட்டியலிடும் நடைமுறை தேவையற்றது' எனக் கூறியுள்ளனர்.

"திருவிழாவுக்கு பட்டியல் ஜாதி மக்கள் நிதி அளிக்கவில்லை என்ற காரணத்துக்காக அவர்களின் பெயரைத் தவிர்ப்பது ஏற்புடையதாக இல்லை" எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசு பணியாளராக இருக்கும் கோவிலின் நிர்வாக அலுவலர், இதை ஆதரித்துப் பேசுவது வினோதமாக உள்ளதாகத் தீர்ப்பில் நீதிபதிகள் கூறினர்.

இதுபோன்ற நிகழ்வுகள், சமூகத்தில் பட்டியல் ஜாதி மக்களுக்கான அர்த்தமுள்ள பங்கேற்பு, தனி உரிமை மற்றும் சமூக மதிப்பு ஆகியவற்றை மறுப்பதாகக் கூறியுள்ள நீதிபதிகள், இது அவர்களை இக்கட்டான நிலைக்குத் தள்ளுவதாகவும் கூறியுள்ளனர். பட்டியல் ஜாதியினர் விழாவில் பங்கேற்பதற்கோ, கடவுளை வழிபடவோ எந்தத் தடையும் இல்லை என அலுவலர்கள் கூறலாம். ஆனால், அவர்களின் பங்கேற்பு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். வெறும் அடையாளமாக இருக்கக் கூடாது" எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், 'திருவிழா அழைப்பிதழில் ஆதிதிராவிடர்கள் பெயரைச் சேர்ப்பது மட்டுமே தீர்வாக இருக்க முடியுமா?' என்று ஆலோசித்த நீதிமன்றம், "அரசு நடத்தும் கோவில் திருவிழாக்களில் தனிப்பட்ட எந்த ஜாதியின் பெயரும் இடம்பெறக்கூடாது" எனக் கூறியுள்ளதாக மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் இராபர்ட் சந்திரகுமார் தெரிவித்தார். இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளதால், இதற்கு மேல் உத்தரவு தேவை எனில்  உச்சநீதிமன்றத்துக்குத் தான் மேல் முறையீடு செய்ய வேண்டும்" .

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மாரியம்மன் காளியம்மன் உள்ளிட்ட கோவில்களில் மாசி பங்குனி மாதங்களில் திருவிழாக்கள் நடப்பது தான் வழக்கம்.

"நீதிமன்றத்தின் தீர்ப்பு, நாடியம்மன் கோவிலுக்கு மட்டும் தான் என்றாலும் அறநிலையத் துறைக்குச் சொந்தமான அனைத்துக் கோவில்களையும் இது கட்டுப்படுத்தும்" என்கிறார் வழக்கறிஞர் ‌மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இராபர்ட் சந்திரகுமார். இருந்தாலும் இதன் முன் வரலாறு:- 1676 ஆம் ஆண்டில்  மராட்டிய சிவாஜியின் சகோதரர் வெங்காஜி தஞ்சாவூரில்  மராத்தியர் ஆட்சியை நிறுவினார். இரண்டாம் சரபோஜி (1798 ஆம் ஆண்டு முதல் 1832 ஆம் ஆண்டு வரை) ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி கவர்னர் ஜெனரல் வெல்லெஸ்லி பிரபுவுடன் 1799- ஆம் ஆண்டில்  செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி தஞ்சாவூர் கோட்டையைத் தவிர மற்ற தஞ்சாவூர் பகுதிகள் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சியின் வசம் கொடுக்கப்பட்டன. இரண்டாம் சிவாஜி (1832 ஆம் ஆண்டு முதல் 1855 ஆம் ஆண்டு வரை) மன்னருக்குப் பிறகு ஆண்வாரிசு இல்லாததால், கிழக்கிந்தியக் கம்பனி ஆங்கிலேயர்கள் வசம் 1856- ஆம் ஆண்டில் தஞ்சாவூர் கோட்டையும் பட்டுக்கோட்டையும் வந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...