முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மஹா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் பூஜை மற்றும் காலகாலமாக நடக்கும் குலதெய்வ வழிபாடு

மஹா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும்  பூஜை செய்ய வேண்டும். சிவபஞ்சாயதனம் கைக்கொண்டவர்கள் இரவில் பூஜையைத் தரித்து நற்பலன் பெற வேண்டும்.


சிவராத்திரி  மாசி மாதம். அமரபட்சம் பதினான்காம் இரவில்  பிறப்பு இல்லாதவனை திருக்கோவில்களில் நான்கு கால இரவில் அபிஷேக  ஆராதனைகள், ஜெப ஹோமம், வேத தேவார, திருவாசக பாராயணமென இரவு முழுவதும் கண்விழித்து  வணங்கும் விழா




வீடுகளில் பச்சை வாழையில் அவல், பாசிப்பயறு, தட்டைப்பயறு, பச்சரிசி, கருப்பட்டிப்பாகு, வெல்லப்பாகு சேர்த்து பால் பழத்துடன் பல்லயமிட்டு  வணங்கும் விழா. கிராமப்புற ஆலயங்களில் --  ஐயனார், கருப்பர், பேச்சி, ராக்காயி, சடைச்சி, மயாவதாரன், மந்தைச்சாமி,  பந்தி பரிவார  தெய்வங்கள்  அனைவருக்கும் இதேபோல் அந்தந்த ஆலயத்தின் அவரவர்  குல வழக்கப்படி 



பல்லயம்  பொங்கல்  புத்தரிசி கரும்பு  புதுமஞ்சள்  பிரசாதம்  என இப்படித் தான்  மறுநாள்  கிராமப்புற ஆலயங்களில்  பால்குடமும் காவடியும். அபிஷேகமும் மகேஸ்வர பூசை அன்னதானம், என குலதெய்வங்கள் கொண்டாடப்படுகின்றன.(மூன்றாவது  நாள் கிராம மக்கள்  ஒன்று கூடி வயல் காடுகளில்  வேட்டைக்கு பாரி வேட்டை எனப் பெயரிட்ட காலகால வரலாறு தற்போது உள்ள வனச்சட்டங்கள் தடுக்கும் நிலையில் கடந்த காலத்தில் சென்று  முயல் உடும்பு  போன்றவற்றை  வேட்டையாடி 





குடிப்படி பங்கிட்டு முன்னோர்களுக்கு  வீட்டில் படையலிட்டு உண்ட  வரலாறு  நாமறிந்த வரை உண்டு ஆனால் நமது அடுத்த தலைமுறைக்கு இந்த வரலாறு தெரியாது. ஒவ்வொரு  குடிக்கும் குடிப் பட்டை எனும் பனையோலையில் பதனீர் வகை அருந்தப் பயன்படும் பச்சை ஓலையில் பட்டைசெய்து அதில் வேட்டை மாமிசம் வைத்துக் கொடுக்கும் வழக்கம்) கிராமங்கள் தோறும் சம்பளம், அம்பலம்,உம்பலம், பண்டாரம் மரியாதைப்படி 
நடக்கும்                                                  -விளம்பரம்-
                             -
விளம்பரம்-

(ஒரு அந்தணர்  குடும்பத்தினருக்கு இந்த பாரி வேட்டைப்பட்டை வழக்கப்படி வழங்காதது ஏன் என ஒரு பிராமணர் குடும்பத்தில் உள்ள மாமி கிராமத்தில்  சண்டையிட்டது நாமறிந்த என் சிந்தனை  வயப்பட்டது) அது ஒரு கிராமத்து மரியாதை 

 நம் பண்பாடு அப்படித்தானே   விழாக்கள் வானியல் வாழ்வியலோடு சம்பந்தப்பட்டதே. அனைவரையும் அறனோடு அரவணைத்த சமூகம்.  இனம் பிரிவு மொழி கடந்த ராணுவம் போலத்தான் நம்மோடு கைசேர்த்து காலம் வரை வாழும் வாழ்வியலே வேண்டும் அதுவே நம்முடைய கலாச்சாரம். 

இந்த விழா சைவமா ?  வைணவமா ? காணாபத்யமா? சமணமா? பௌத்தமா சாக்கியமா ? கௌமாரமா? சக்தியா? ஆசீவகமா ?  ஊரிலும் ஊருக்கு  வெளியில் கண்மாயில் எல்லையில் வீரர்களாக படைஞர்கள் யானை குதிரை மந்தை மாடுகள்  பூதம் அரிவாள்  கத்தி கைத்தடி வளைத்தடி களரி படைக்கள ஆயுதங்கள் தாங்கி நிற்கும் நம் முன்னோர் சிங்கமுத்து ஐய்யன், பட்டவன் முண்டன்,தூண்டிக் கருப்பன், பதினெட்டாம் படிக்கருப்பன், புலிமேல் முனிவர்  முன்னோடி பேச்சி ராக்காயி பாண்டி முனி --இத்தனையும் நினைத்து  வழிபடும் விழா நடைமுறை 


எழுத்தில் உண்டா? வழி வழி வந்த வரலாறு தாத்தா பேரனுக்கு சொல்லி அவன் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் மரபு வழி வரலாறு போல 

ஆமாம் . திருமூலர் திருமந்திரமும்  இப்படித்தான்  சொல்கிறது:- "சக்கரமாக. தானவர் சட்டர் சதிரர் இருவர்கள் ஆன இம் மூவரோடு ஆற்றவர் ஆதிகள் ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமுஞ் சேனையுஞ் செய்   சிவசக்கரந்தானே...(988)



ஊர்காவலர் ஐயனார் நகர் காவலர் வைரவர் திறமை சதுரப்பாடுடைய  காப்பாளர்கள் ஆற்றலமைந்த சிவகணங்கள் வழிநடத்தும் தளபதிகள் பதினைவர் சேனைகள் என  நம் படைபட்டாளம் நாதம் பிந்து பீஜ அட்சரங்கள் அவர்களின்  இருப்பிடங்கள் முறைகள் என விரியும் ஆலய தெய்வம்



ஐம்பத்தி ஆறு. இருபத்தோரு பந்தி அறுபத்திநான்கு கலைகள். யாருக்குத் தெரியும்  அவர்களாக சொன்னால் தான். எப்படியோ! உடுக்கை அடித்து சாமி அழைத்துப் பார்த்தால் வாரிசு வழியாக இறங்கி வரும் தெய்வங்கள், முன்னோர் ஆன்மாவாய்  கருமருந்து படைவாணம் (பழம் பீரங்கி மருந்து) இப்போது இல்லை தான்  சாராயம்  கருவாடு நீர்கொழும்பு சாயவேட்டி, காதோலை கருகமணி,  எப்போதும்  உண்டு தானே!

மதுரை புது மண்டபம் தான் இவர்கள் வரலாற்றுப் புகழிடம், சமயக் குரவோர் நால்வர் பாடல் பெற்ற பாண்டிய நாட்டில் 18 சிவ ஸ்தலங்கள் சோழநாட்டின் திருப்பராய்துறை  உள்ளிட்ட ஸ்தலங்களில் மேலும் 

ஆயிரம்  ஆண்டுகளுக்கு  முற்பட்ட சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்தின் நிர்வாக வழி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார்  கல்ழெழுத்துடன் அடியேன் சிவராத்திரியின் போது இரவு நான்கு யாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. அந்த நான்கு யாமங்களிலும் சிவலிங்கத்துக்கு விசேடமாக அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அந்த யாமப் பூசைகளின் போது எவையெவற்றால் வழிபடவேண்டும் என்பதை புனித நூல்கள் எடுத்துக் கூறுகின்றன. .  முதல் யாமம் எனும் இந்த முதல் கால பூஜை, படைக்கும் தேவன் "பிரம்மா" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்.


இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமியம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.




இரண்டாம் யாம பூஜை என்பது  இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் "விஷ்ணு". சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்தக் காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்        மூன்றாம் யாம பூஜை என்பது இந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாளைப் பூஜிப்பதாகும். இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள் அன்னம்" நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது.




இந்த காலத்திற்குரிய சிறப்பென்றால் இதை லிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்தக் காலம். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.

நான்காம் யாமமானது இந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது.




குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு மற்றும் பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது. மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை இருந்து சிவபெரு மானை வழிபட்டு அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைவோமாக! ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.
திருவாசகம்-சிவபுராணம்

"வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க                                  பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க        புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க                          கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க                                 சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க !                   



அயல்நாட்டு மக்கள் மத்தியில் ஈஷா மையம் சார்பில் ஜக்கி வாசுதேவ் நடத்தும் நிகழ்வுகள் நமது ஆன்மீக கலாச்சாரத்திற்கான நிகழ்வல்ல என்பது நன்றாகவே அறியும் நிலையில்



மேலும் அவர் இந்த ஆண்டு தனது வாரிசாக மகளை அறிமுகம் செய்து அரசியலில் வாரிசு போல டிரஸ்ட்க்கு அவரது வாரிசு அறிமுகம் செய்து புகுத்திய நிகழ்வை கண்டது இந்த ஆண்டு அடுத்த ஆண்டு அவர் இவரது பணியைத் தொடருவார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...