முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண் காவல்துறை சார்பு ஆய்வாளர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது மற்றும் மிகைப்படுத்தப்பட்டதென காவல்துறை விளக்கம்

சிவகங்கை மாவட்டம் சோமநாதபுரம் பெண் காவல்துறை சார்பு ஆய்வாளர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது மற்றும் மிகைப்படுத்தப்பட்டதென 


மாவட்ட காவல்துறை சார்பில் விளக்கம்.                பணி மாறுதல் உத்தரவு வந்த பின்னர் சார்பு ஆய்வாளர் மாற்றமாகிச் செல்லவில்லை

விடுதலைச் சிறுத்தை  கட்சி பொறுப்பாளர் கத்தியால் தாக்கியதாக பெண் காவல்துறை சார்பு ஆய்வாளர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் 

அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவு என்ற தகவலும் வருகிறது. 



சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்தில் சோமநாதபுரம் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராகப் பணியாற்றுபவர் பிரணிதா. சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் இரவு அவர் காவல் நிலையத்தில் 5 காவலர்கள் பணியிலிருந்த தாகவும். அப்போது கோவில் நிலத்தில் கட்டுமானம் கட்டுவது தொடர்பாக சர்ச்சை புகார் புகார் மனு தொடர்பாக விசாரணைக்கு சிலர் மட்டுமே வந்திருந்ததாகவும் 

அவர்களுக்கு ஆதரவாக சிபாரிசுக்கு பிண்ணனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிவகங்கை வடக்கு மாவட்டச் செயலாளரான இளைய கௌதமன் என்ற நபர் மற்றும் அவருடன் சிலரும்  சோமநாதபுரம்  காவல் நிலையத்திற்கு வந்து அவர்கள் சார்பு ஆய்வாளர் பிரணிதாவிடம் புகார் மனு தொடர்பாக கேட்டதாகவும், அதற்கு அவர் ,"நான் தற்போது இந்த மனுவை விசாரணை செய்ய முடியாது, உயர் அலுவலர்கள் தான் விசாரிப்பார்கள்" எனக் கூறியதாகவும். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சோமநாதபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சோமநாதபுரத்தில் சமுதாய நலக் கூடம் கட்டுவது தொடர்பாக இரண்டு தரப்பினரிடையே பிரச்சனைகள் இருந்து வருகிற நிலையில். அதற்கு தனது தரப்பினருக்கு ஆதரவாக சார்பு ஆய்வாளர் செயல்பட வேண்டுமென அவரை வலியுறுத்தி "ஏன். எங்களை அலைக்கழிக்கிறீர்கள் என அதிகாரமாக ஆத்திரப்பட்ட வி.சி.க மாவட்டச் செயலாளர் இளைய கௌதமன் என்பவர் தன்னை ஆபாசமாகப் பேசித் தாக்கியதாக செய்தியாளர்களிடம் காவல்துறை சார்பு ஆய்வாளர் பிரணிதா தெரிவித்த நிலையில். அரசினர் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து பலரும் பலவிதமாக கருத்துப் பரிமாற்றம் செய்த நிலையில்,




அமமுகவின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்ட அறிக்கையில் சிவகங்கையில் பெண் எஸ்.ஐ.,யை தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை விபரம் வருமாறு:

சிவகங்கை மாவட்டம், சோமநாதபுரம் காவல் நிலையத்திற்குள், அத்துமீறி நுழைந்த வி.சி.,யை சேர்ந்த சிலர், அங்கிருந்த பெண் எஸ்.ஐ., மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு, காவல் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி வரும் பணியில் ஈடுபட்டுள்ள தன் மகளுக்கு, காவல் நிலையத்திலேயே பாதுகாப்பில்லை எனக் கூறி கதறி அழும் எஸ்.ஐ.,யின் தாய்க்கு, காவல் துறை என்ன பதில் சொல்லப் போகிறது?

தன்னைகா கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதாக, பெண் போலீஸ் உயரதிகாரி ஒருவர் அளித்த புகார் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், காவல் நிலையத்திற்குள் பெண் எஸ்.ஐ.,க்கு நடந்திருக்கும் தாக்குதல், பெண் காவலர்களுக்கு பாதுகாப்பில்லை என்பதையே தெளிவுபடுத்துகிறது.

பெண் எஸ்.ஐ.,யை தாக்கிய வி.சி.,யினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறையில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பை, முதல்வர் ஸ்டாலின் உறுதிப்படுத்த வேண்டும்.



இவ்வாறு அவர் கூறியிருந்தார்.  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சோமநாதபுரம் காவல் நிலையத்துக்குள் புகுந்து வி.சி.க மாவட்டச் செயலாளர் பெண் எஸ்.ஐ மீது தாக்குதல் நடந்ததா? இல்லையா? பணி மாறுதலைத் தவிர்க்க எஸ்.ஐ நாடகமாடுவதாக காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் குற்றச்சாட்டு இதில் நடந்த நிகழ்வுகள் குறித்து பலரும் பலவிதமாக விமர்சனம் வைக்கும் நிலையில். இது குறித்து உண்மை நிலையை மக்கள் அறிய வேண்டும் சிவகங்கை மாவட்டம் சோமநாதபுரம் எஸ்ஐயாக பணியாற்றி வந்தவர் பிரணிதா. அங்கிருந்து சிவகங்கைக்கு பணியிட மாறுதல் ஆன நிலையில்  இரவு காவல் நிலையத்தில் ஆவணங்கள் எடுத்து வர போயிருந்த போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் இளைய கவுதமன் அவரது ஆட்களுடன் அங்கு வந்ததாகவும். இது அணைத்து விபரமும் உண்மையா என காணவேண்டும். காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராகப் பணியாற்றி வரும் பிரணிதா பணி மாறாமல் இருக்கும் நிலையில் இரவு அங்கு பிரச்னை தொடர்பாக  வந்திருந்த ஒரு நபர் சார்பு ஆய்வாளர் பிரணிதாவிடம் வாக்குவாதம் செய்ததாகவும், பின் அது தகராறு என மாறி சார்பு ஆய்வாளர் தாக்கப் பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக புகார் எழும் நிலையில். காவல் துறையினர் விசாரிக்கின்றனர்

இந்த நிலையில் 

சார்பு ஆய்வாளர், பிரணிதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வி.சி.கட்சியின் நிர்வாகி இளைய கௌதமன் என்பவர் காவல் நிலையத்தில் ஒரு தரப்பில் புகார் தொடர்பாக ஆதரவு அளிக்க வந்த நிலையில் என்னை மிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். என்னை கீழே தள்ளிவிட்டு சட்டையைக் கழட்டி விடுவேன். போஸ்டர் ஒட்டி விடுவேன். உனக்கு எதிராகப் போராட்டம் நடத்து வேன் என்றார். இதில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன்" எனக் கூறியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்ந்த பலர் வெவ்வேறு பகுதிகளில் தங்களை சூப்பர் தலைவர்கள் போல நினைத்துக் கொண்டு பல இடங்களில் கட்டப் பஞ்சாயத்துகள் செய்து வருவதாக வரும் தகவலில் உண்மை உண்டு. ஆனால் இங்கு அப்படி நடந்ததா என காணவேண்டும் இதில் ஏன் இவர் பெயர் வருகிறது மேலும் நாட்டில் பல அரசியல் கட்சிகள் உள்ளன அதில் ஆண்ட மற்றும் ஆளுகின்ற கட்சிகள் இருந்தபோதும், அவர்கள் செய்யத் துணியாதவைகள் இவர்கள் செய்வதால் தான் பல இடங்களில் பிரச்சினை ஏற்படுகிறது. என்பதே அரசியல் கட்சிகள் மத்தியில் பேச்சாகும்.  கல்லல் காளையார் கோவில் செல்லும் சாலையிலுள்ள சாத்தரசம்பட்டி தான் சார்பு ஆய்வாளர் சொந்த ஊராகும், இவருக்கும் முதல் நிலைக் காவலரான உள்ள கென்னடி என்ற நபருக்கும் திருமணம் நடந்ததாகவும் இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளதாகவும். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் பல பஞ்சாயத்துகள் நடந்த நிலையில். கப்பலில் பணி செய்து வரும் பொறியாளர் இவர்கள் குடும்ப நண்பர் அவருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளருக்கும் ஏற்கனவே சில  பிரச்சினைகள் இருந்து வந்ததாகவும் பேசப்படுகிற நிலையில் தான் இந்த பிரச்சினையில் இப்போது இந்த நிலை வந்துள்ளது என மக்கள் மத்தியில் பலரும் பேசும் நிலை உள்ளது மேலும் சிவகங்கை மாவட்டக் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட பத்திரிக்கை செய்தியில் 

தலைப்பு :வீடியோ பரவி வருவது தொடர்பாக சோமநாதபுரம் காவல்நிலையம், அமராவதி புதூரைச்சேர்ந்த திரு.இளையகௌதமன் (அரசியல் பிரமுகர்) உட்பட சிலர் காவல் நிலையத்திற்குள் புகுந்து தன்னைத் தாக்கியதாக WSI திருமதி. பிரணிதா கூறும் குற்றச்சாட்டு தொடர்பான விளக்கம். - 1/SB/SVG/Press Release/2025, : 07.02.2025

இளையகௌதமன் உட்பட சிலர் சோமநாதபுரம் காவல் நிலையத்தில் தன்னைத் தாக்கியதாக WSI திருமதி. பிரணிதா கூறும் குற்றச்சாட்டு தொடர்பாக ஒரு செய்தி பரவி வருகிறது.

இது தொடர்பாக, சார்பு ஆய்வாளர் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், நிலையத்தின் சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு, மேலும் நிலையத்தில் இருந்த காவல்துறையினர் மற்றும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில், சார்பு ஆய்வாளர் தாக்கப்பட்டதாக கூறிய குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது மற்றும் மிகைப்படுத்தப்பட்டது என தெரிய வருகிறது.

கடந்த 05.05.2025 அன்று மாலை, அமராவதிபுதூர் கிராமத்தில் உள்ள கோயில் நிலத் தகராறு தொடர்பாக இரு பிரிவினர் சோமநாதபுரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக வந்திருந்தனர். அது குறித்து SI.திரு.முத்துகிருஷ்ணன் என்பவர் விசாரணை மேற்கொண்டார்.

அந்த நேரத்தில், வாகன சோதனைக்குப் பிறகு WSI திருமதி. பிரணிதா நிலையத்திற்கு வந்து, மேற்படி SI.திரு.முத்துகிருஷ்ணனின் விசாரணையில் தலையிட்டார். விசாரணைக்கு வந்திருந்த ஒரு பிரிவினர் ஆட்சேபனை தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து, மேலும் WSI.திருமதி.பிரணிதாவிற்கும், கிராமத்தினருடன் வந்திருந்த அமராவதிபுதூரைச்சேர்ந்த திரு.இளையகௌதமன் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் அதனைத்தொடர்ந்து, விசாரணைக்கு வந்திருந்த கிராமத்தினர் கலைந்து சென்றனர். சார்பு ஆய்வாளர் ஒரு தனியார் மருத்துவமனையிலும், தொடர்ந்து காரைக்குடி அரசு மருத்துவமனையிலும் 10 பேர் அவரைத் தாக்கியதாகக் கூறி சிகிச்சைக்கு சேர்ந்தார். அங்கிருந்த மருத்துவர் அவரைப் பரிசோதித்து, அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், உள்நோயாளியாக அனுமதிக்கத் தேவையில்லை என்றும் கூறினார். இருப்பினும், அவர் மறுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அதே நேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் மூலமாக பத்திரிக்கைகளுக்கு இது தொடர்பான செய்தியை தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது மற்றும் மிகைப்படுத்தப்பட்டது என்பது தெரியவருகிறது.

முன்னதாக, இந்த WSI.திருமதி.பிரணிதா மீது பொதுமக்களின் சார்பாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பலமுறை எச்சரிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில், கடந்த 18.11.2024ம் தேதி நிர்வாக குற்றச்சாட்டு காரணமாக, அவர் சோமநாதபுரம் காவல் நிலையத்திலிருந்து சிவகங்கை நகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இருப்பினும், அவர் தனது பணிமாறுதல் செய்யப்பட்ட காவல் நிலையத்திற்கு பணிக்கு அறிக்கை செய்யாமல் 30.11.2024 முதல் 16.1.2025 வரை 48 நாட்கள் மருத்துவ விடுப்பில் இருந்தவர், தொடர்ந்து சோமநாதபுரம் காவல் நிலையத்திலேயே பணிபுரிந்து வருகிறார்.

பெண்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பெறப்படும் புகார்கள் மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது மற்றும் மிகைப்படுத்தப்பட்டது என்பது மீண்டும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் விரிவான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. என் காவல்துறையினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...