ஸ்ரீ சனீஸ்வர பகவான் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் 3-ஆம் பாதத்திலிருந்து, மீன ராசி பூரட்டாதி 4-ஆம் பாதத்திற்கு நாளை இரவு பெயர்ச்சியாகிறார்
சிறப்புச் செய்தியாளர்:- ரெங்கநாதன் திருப்பதி கணிதப் பஞ்சாங்கத்தில் குரோதி வருஷம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி சர்வ அமாவாசை, அதற்கு சரியான ஆங்கில ஆண்டு 2025 மார்ச் மாதம் 29 ஆம் தேதி நாளை இரவு 9.44 மணிக்கு அவரது சொந்த வீடான கும்ப ராசியிலுள்ள பூரட்டாதி நட்சத்திரம் 3-ஆம் பாதத்திலிருந்து, மீனத்திலுள்ள பூரட்டாதி 4-ஆம் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார்.
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி இந்தக் கிரகப்பெயர்ச்சி கணிக்கப்பட்டுள்ளது. சனி பகவான் தனது 3-ஆம் பார்வையால் கால புருஷ 2-ஆம் இடமான ரிஷப ராசியையும், 7-ஆம் பார்வையால் கால புருஷ 6-ஆம் இடமான கன்னி ராசியையும், 10-ஆம் பார்வையால் கால புருஷ 9-ஆம் இடமான தனுசு ராசியையும் பார்க்கிறார்.
கிரகங்களில் சனி கிரஹ பெயர்ச்சியைப் பற்றிய எதிர்பார்ப்பு எப்போதும் அதிகமாகவே இருக்கும். ஒரு ராசியில் அதில் வருஷம் நின்று ஜீவனத்தை நிர்ணயிப்பவர் என்பதால் சனிப்பெயர்ச்சிக்கு முக்கியத்துவமுள்ளது.
தற்போது கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குச் செல்லும் சனி பகவான் நமக்கு நல்லது செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும். நிச்சயம் வேண்டினால் நல்லதே நடக்கும். சனிப்பெயர்ச்சி விழா கொண்டாடும் நிலையில், சனீஸ்வர பகவானுக்கு உரிய பரிகார ஸ்தலமாகத் திகழும் பாண்டிச்சேரி யூனியன் திருநள்ளாறு மற்றும் தமிழ்நாடு தேனி மாவட்டத்தில் சின்னமனூர் அருகில் குச்சனூர் சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கம் அருகில் பெருச்சிக்கோவில் (விரிச்சியூர்) ஒற்றை சனீஸ்வர பகவான் ஆலயங்களில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வது மிகவும் சிறப்பானது.
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயம் பாண்டிச்சேரி யூனியன் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு- கொம்யூன் திருநள்ளாறு, வரலாறு குறித்துக் காணலாம் காரைக்கால் அருகில் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் நவக்கிரஹ கோவில்களில் ஒன்று தர்ப்பை அடர்ந்து வளர்ந்த காரணத்தால், இந்தப் பகுதிக்கு தர்ப்பாரண்யம் எப் பெயர் . பின்னர், நகவிடங்கபுரம் எனும் பெயர். இங்கு அமர்ந்திருக்கும் ஈசனின் திருப்பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர். அம்பிகை பிராணேஸ்வரி. நளமகாராஜனை, சனிபகவானின் பார்வையிலிருந்து விடுவித்து, மறுபடியும் வளமான வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்திய ஸ்தலம் இது நள்ளாறு என அழைக்க சுயம்புவாக தர்ப்பைவனத்தில் தோன்றியதால் ஈசன் தர்ப்பைத் தழும்புகளுடன் காட்சி தருகிறார். இந்தக் கோவிலானது 9ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது.
பின்னர் விஜயநகர நாயக்கப் பேரரசர்கள், இக்கோவிலை விரிவுபடுத்தினார்கள். சிவபெருமானின் பாடல் பெற்ற ஸ்தலங்களில் சம்பந்தர், சுந்தரர், அப்பர் பெருமான், மற்றும் அருணகிரிநாதர் ஆகியோர் ஸதலத்தில் சுவாமிகளைப் பாடியுள்ளனர். இந்த ஸதலத்தில் நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம் உள்ளிட்ட அஷ்டதீர்த்தங்கள் உள்ளன. மஹாவிஷ்ணு, ஸ்ரீ பிரம்மா, இந்திரன், அஷ்டதிக்கு பாலகர்கள், அகஸ்தியர், அர்ஜுனன், நளன் உள்ளிட்ட பலரும் வழிபட்ட ஈசனிவர். சப்தவிடங்கத் தலங்களில் திருநள்ளாறும் ஒன்று.தேவர்களை மறுத்து, நிடத நாட்டு மன்னன் நளன் சக்கரவர்த்தியை கரம் பிடித்தாள், சேதி நாட்டு இளவரசி தமயந்தி. அதனால் கோபமான தேவர்கள், சனிபகவானின் வழியாக நளனை கடுமையாகவே சோதித்தனர்.
செல்வத்தை இழந்து, இறுதியில் தமயந்தியையும் பிரிந்து, சேவகனாக மாறிய சக்கரவர்த்தி நளன் பின்னர், சகல தோஷங்களும் நீங்க வேண்டி, தான் இழந்த இராஜ்ஜியம், மற்றும் குடும்பம் மீண்டும் கிடைக்க வேண்டி, கலியுகத்தில் இறுதியாக திருநள்ளாற்றில் உள்ள ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி, சனீஸ்வரனிடம் சரணடைந்தார். இந்த ஷேத்திரத்தில் வழிபாடு செய்ததன் மூலம், தான் இழந்த ராஜ்ஜியம், மற்றும் குடும்பம், மன சந்தோஷம் அனைத்தும் தர்ப்பாரண்யேஸ்வரர் அருளால் கிடைக்கப் பெற்றார். எனவே, இந்தக்கோவிலின் மூலமூர்த்தியாக விளங்கும் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர்க்கு, நளேஸ்வரர் என்ற பெயரும் வந்தது. அதேபோன்று, நள தீர்த்தம் இந்த ஷேத்திரத்தில் உள்ளது. இதில் பக்தர்கள் நீராடி வழிபடுவதற்கு ஏற்றவாறு அமையப் பெற்றது. இவ்வாறு மூர்த்தி, ஸதளம், தீர்த்தம் ஆகிய மூன்றும் நளச்சக்கரவர்த்தியின் பெயரைத் தாங்கியது.
அதாவது நளனைப் பின்தொடர்ந்த சனீஸ்வர பகவான், கோவிலினுடைய ராஜகோபுரத்தின் இடதுபுறத்தில், காக வாகனத்தில் நின்ற கோலத்தில் அபயஹஸ்தம் என்று சொல்லக்கூடிய அனுக்கிரக திருமுகத்தோடு, கிழக்கு முகம் நோக்கி தனி சன்னதி, தனி விமானம் கொண்டு அருள் பாலித்து வருகிறார். நள மஹாராஜா விடுதலை பெற்று திருப்பணிகள் செய்து முடித்து, திருக்கோயில் அமைத்து இறைவனைப் பூசித்தார். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல்ல எண்ணத்தினால், நளன் இறைவனிடத்தில் வரங்களை வேண்டினார். இங்கு என்னைப்போல் சனி பகவானை வந்து வணங்கும் பக்தர்களுக்கு சனிபகவான் அருள் செய்து, துன்பம் போக்கி, நலம் பல செய்திடல் வேண்டுமென வரம் கேட்டார். இரண்டாவதாக இந்த ஸ்தலத்தில் சனிபகவான் அனுக்கிரஹ பார்வை உடையவராக இங்கு இருப்பவர்களுக்கு நன்மையளிக்க வேண்டும் என்றார். மூன்றாவதாக, இந்த பகுதிக்கு இன்று முதல் மூர்த்தி, தீர்த்தம், திருத்தலம் ஆகிய மூன்றும் என் பெயரில் விளங்கிட வேண்டும் என வரங்களை வேண்டினார். . -விளம்பரம்-
-விளம்பரம்- இதை எம்பெருமான் ஈசனும், சனி பகவானும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டு அவ்வாறே அருளினர். அந்த வகையில், இங்கு நளனுக்கு விமோசனம் அளித்தபடியால், இறைவனுக்கு நளலேஸ்வரர் என்ற பெயரும், திருக்குளத்திற்கு நளத்தீர்த்தம் என்ற பெயரும், இவ்வூருக்கு திருநள்ளார் என்ற பெயரும், புராணச் சிறப்பும், வரலாற்றுச் சிறப்பும் பெற்ற ஸ்தலமாகும் .மற்ற கிரகங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பாக, பகவான் என்ற பதத்தோடு அவருடைய திருநாமம் அமைய பெற்றிருக்கிறது. வேறு கிரகங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பாக, ஈஸ்வர பட்டத்தை சனீஸ்வர பகவானுக்கு வழங்கி, ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர் அருளால் சனீஸ்வர பகவானாக இவ்வாலயத்தில் அபயம் தரும் சாந்த மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். பொதுவாக ஒருவருடைய வாழ்நாள் என்பது 120 ஆண்டுகளாக கணக்கிடப்பட்டு உள்ளது. அந்த வகையில், ஒவ்வொரு 30 வருடத்திற்கும் சனீஸ்வர பகவானுடைய ஏழரை சனியின் காலம் தனி மானிட வாழ்வை மாற்றுகிறது. இவைகள் மங்கு சனி, பொங்கு சனி, தங்கு சனி, மரண சனி இவ்வாறாக நான்கு சுற்றுகளை உடையதாக, நான்கு முப்பது ஆண்டுகளாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் ஏழரை சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி உள்ள காலங்களிலும் ஜாதக ரீதியாக 19 ஆண்டுகள் சனி திசை.அதில், சனி புக்தி நான்கு ஆண்டுகள் நடைபெறுகின்ற பக்தர்கள், இவ்வாறு பல வேண்டுதல்கள் நிமித்தமாகவும், ஜாதகர்கள் நளதீர்த்தம் சென்று, ஆத்ம பிரதக்ஷணம் வலமாகச் சுற்றி வணங்கி, குளத்தின் நடுவே இருக்கும் நளன், தமயந்தி சிலைகளை வணங்க வேண்டும். -விளம்பரம்-
நல்லெண்ணெய் தேய்த்து, வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்து நின்று 9 முறை மூழ்க வேண்டும். குளித்து, வேறு ஆடை அணிந்த பிறகு, திருக்கோயிலினுள் இருக்கும் ஸ்வர்ண கணபதி, முருகர் சன்னதியை வணங்கி, ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரரையும், அடுத்து தியாகேசரையும் வணங்கிய பின், பிராணேஸ்வரி அம்மனை வணங்கிய பின்னரே, இங்கிருக்கும் சனிபகவானைத் தரிசிக்க வேண்டுமென்பது ஐதீகம்.எள் தீபம் ஏற்றுவது தொடங்கி, அவரவர் வசதிக்கு ஏற்ப பூஜைகளைச் செய்து சனிபகவானுக்கான பரிகாரங்களைச் செய்து கொள்ளலாம். சனிபகவானை சனிக்கிழமை மட்டுமின்றி, வாரத்தின் எல்லா நாட்களிலும் வரும் சனிஹோரை நேரத்தில் வழிபடலாம். இதனாலும் கூடுதல் பலன்கள் கிட்டும் என்பது கணித ஜேதிடர் வாக்கு.கடுமையான சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பிலிருந்து விடுபட, சனிபகவானை பிரார்த்தித்து, சனிக்கிழமைதோறும் ஒருவேளை உபவாசம் இருத்தல் நல்லது. சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, கறுப்பு வஸ்திரம், வடைமாலை சாத்தி, எள்ளுச் சாதம் நெய்வேத்தியம் செய்யலாம்.எள்ளால் ஆன இனிப்புப் பலகாரங்களைப் பெருமாளுக்கும், சனிபகவானுக்கும் படைக்கலாம். சனிபகவானின் அருளினைப் பெற ஆஞ்சநேயர், கணபதியை வணங்கலாம். சனிபகவான் நீதிமான், நியாயவான் என்று போற்றப் பெறுபவர்.நமக்குரிய கடமைகளைத் தவறாமல் செய்து, ஈஸ்வரனை வழிபட்டு வந்தால் அதிக பாதிப்பின்றி நற்பலன்களை பெற்று வாழலாம். இத்தகைய பல்வேறு சிறப்புகளை உடைய இந்தக் கோயிலுக்கு, பல்வேறு மாநிலங்களிலிருந்தும், பல நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்” இந்த நிலையில் கடந்த வாரம் ஆலயம் சார்பில் பாண்டிச்சேரி அரசு அறிவிக்கை வெளியிடப்பட்டது. கோவிலின் நிர்வாகத்திற்காக அரசர்கள் நிவந்தமாக பசுக்களைத் தந்து, அவற்றை மேய்த்து வழிநடத்த இடையர் குலத்திலிருந்து ஒருவரை நியமனம் செய்த படி அப்பசுகளை மேய்த்து பாலைப் பெற்று கோவிலுக்குத் தர வேண்டிய பங்கினைத் தர வேண்டும். இதனால் அவர்கள் வாழ்வும், நிர்வாகமும் சீராய் நடைபெறும். இத்தலத்திலும் ஆயர் ஒருவர் இப்பொறுப்பிலிருந்தார். கணக்கர் பசுவின் பாலைப் பெற்று தன் வீட்டுக்குத் தந்து கோவிலுக்குப் பொய்க்கணக்கு எழுதி வந்ததனால் இறைவன் கணக்கரை சூலம் எய்திக் கொன்றதுடன் இடையருக்கு இறைவன் காட்சி தந்தார். இறைவனிடமிருந்து எரியப்பட்ட சூலம் கணக்கரைக் கொல்ல வந்த போது, நந்தியும், பலிபீடமும் விலகிக் கொண்டன. அதனால் இந்த ஸ்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சற்று ஒதுங்கிய நிலையில் உள்ளது.கோயிலின் தென்புறமாக இடையனார் கோயில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தில் இடையன், அவன் மனைவியுடன் உள்ளார். இவர்களுடன் கணக்கன் சிலையும் அமைந்துள்ளது. வரலாற்றுத் தகவலிது. .
தற்போது கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குச் செல்லும் சனி பகவான் நமக்கு நல்லது செய்வாரா? என்ற என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும். நிச்சயம் வேண்டுங்கள் நல்லதே நடக்கும். மந்திரம் ஜெயம் :- "நீலாஞ்சனசமாபாஸம் ரவிபுத்திரம் யமாக்ரஜம்.
ச்சாயாமார்த்தண்டஸம்பூதம் தம் நமாமி ஶநைஶ்சரம்
நீலாஞ்ஜந ஸமபாஶம் ரவிபுத்ரம் யமগ்ரஜம்
சாயா மார்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஷைஶ்சரம்"
கருத்துகள்