சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்களிருந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ஸ் வில் மோர் பாதுகாப்பாக பூமிக்கு
இந்திய நேரத்தில் அதிகாலை 3.30 மணிக்கு பயணித்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், புளோரிடா மாகாணத்திற்கு அருகில், கடலில் இறங்கிய நிலையில் மிதந்த
விண்கலத்திலிருந்து வெளியே வந்த சுனிதா வில்லியம்ஸ் சிரித்தபடி கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் சக அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் இந்திய நேரப்படி நேற்று காலை 10.35 மணிக்கு, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டு, 17 மணிநேரப் பயணத்தில் பூமியை அடைந்தனர்.
ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் வளிமண்டல ஆபத்தான மறுநுழைவைக் கடந்து பூமியை நோக்கிப் பயணித்து. பல்வேறு கட்டங்களாக பாராசூட்கள் விரிக்கப்பட்டு, வேகம் குறைக்கப்பட்டு, நீரிலிறங்கிய நிலையில் மிதந்தது. இந்த நான்கு விண்வெளி வீரர்களும் அமெரிக்க நேரப்படி இரவு 11:19 மணிக்கு ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தின் எலிங்டன் ஃபீல்டுக்கு வந்தனர்.
அவர்களுக்கு விண்வெளிப் பயணத்திற்குப் பின் மருத்துவப் பரிசோதனைகளும், பயிற்சிகளும் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. அவர்கள் வந்த விண்கலம் ஸ்பிளாஷ்டவுன் (splashdown) என்ற செயல்முறையின் மூலம் கடல் பகுதியில் இறங்கும் போது கடலில் உள்ள தண்ணீர் மிகப்பெரும் அளவில் தெறிக்கும் என்பதால், அந்த செயல்முறையை 'ஸ்பிளாஷ்டவுன்' என்கின்றனர்.
சற்றுத் தொலைவில் படகுகளில் காத்திருந்த மீட்புக் குழுவினர் நான்கு விண்வெளி வீரர்களையும் பத்திரமாக மீட்டனர். டிராகன் விண்கலம் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்த போது சற்று நேரத்துக்கு கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.வழக்கமான நடைமுறையாகும்.விண்கலத்தைச் சுற்றி 1927 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தது. டிராகன் விண்கலத்தின் வெப்பத்தடுப்பு ஓடுகள் உள்ளே இருந்த விண்வெளி வீரர்களைப் பாதுகாத்தன சிறிது நேரத்துக்குப் பிறகு தகவல் தொடர்பு மீட்கப்பட்டு கடலில்
இறங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. தன்னிச்சையாக விண்கலம் பூமியை நோக்கி 27,000 கிலோமீட்டர் வேகத்தில் வந்த விண்கலத்தின் வேகத்தைக் குறைக்கும் பாரசூட்கள் விரிந்தன. நாசாவின் கேமராக் கண்களில் தெளிவாகப் படம்பிடிக்கப்பட்டன. பின்னர் படிப்படியாக வேகம் குறைக்கப்பட்டு கடலில் வந்து விழுந்த விண்கலத்தை, நாசாவின் மீட்புப் படகுகள் பத்திரமாக கப்பலுக்கு எடுத்து வந்தது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் திட்டமிட்டதற்கு மாறாக பல மாதங்கள் தங்கியிருக்க நேரிட்ட சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்ஸ்மோரும் அங்கு பல சாதனைகளைப் படைத்தனர்.
இந்த விண்வெளிப் பயணத்தின் போது அவர்கள் 900 மணி நேரம் ஆராய்ச்சிகளைச் செய்திருக்கின்றனர். நாசாவின் விண்வெளி செயல்பாட்டு இயக்குநரகத்தின் ஜோயல் மொண்டல்பானோ இந்தத் தகவலைக் கூறுகிறார். சுனிதா, புட்ச் ஆகியோர் விண்வெளி நிலையத்தில் பணியாற்றிய காலத்தில் 150 பரிசோதனைகளை மேற்கொண்டதாகவும் கூறுகிறார்.
நாசா விண்வெளி வீரர்கள் செய்திருக்கும் பணி "தேசத்திற்கு நன்மை பயக்கும்" என்றும், செவ்வாய் கிரகத்தில் மனிதரைத் தரையிறக்கும் இலக்கை நாசா அடையும் வாய்ப்பு அதிகரிக்கிறது என்றும் கூறுகிறார். தற்போது வெற்றிகரமாக மற்றுமொரு நீண்ட விண்வெளிப் பயணத்தை நிறைவு செய்து, பூமிக்கு திரும்பியுள்ள இருவருக்கும் உலகெங்கிலும் வாழ்த்துகளும், வரவேற்புகளும் குவிகிறது.
சுனிதா லின் வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது அமெரிக்க விண்வெளி வீரர். கல்பனா சாவ்லாவுக்கு அடுத்தபடியாக, சர்வதேச விண்வெளி நிலையத்தின் 'எக்ஸ்பெடிஷன் -14' குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாசா சேர்த்தது.
1965-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் பிறந்த சுனிதாவின் தந்தை குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத்தை பூர்வீகமாகக் கொண்ட தீபக் பாண்டியா 1958-ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார்.
சுனிதாவின் தாயார் போனி பாண்டியா. ஸ்லோவேனியா வம்சாவளியை சேர்ந்த போனிக்கு 3வது மகளாக 1965 ல் பிறந்தார் சுனிதா வில்லியம்ஸ்.
அமெரிக்காவின் நீதம் எனுமிடத்தில் பள்ளிக் கல்வியையும், புளோரிடாவில் பொறியியல் படிப்பையும் முடித்த பிறகு
அமெரிக்க கடற்படையில் விமானியாக சேர்ந்த சுனிதாவை 1998 ல் நாசா அழைத்துக் கொண்டது.
சுமார் 30 ஆண்டுகள் நாசா நடத்திய பல சோதனைகளில் சுனிதா வில்லியம்ஸ் சாதனைகள் படைத்தார்.
விண்வெளிக்கு சென்ற சுனிதா விண்ணில் அதிக நேரம் விண்நடை மேற்கொண்டு சாதனை புரிந்தார்.
விண்வெளியில் பல சோதனைகளை பதற்றமின்றி சிரித்தபடி கையாண்டார்சுனிதாவின் கணவர் மைக்கேல் வில்லியம்ஸ். அவர் ஒரு விமானி. தற்போது அவர் காவல்துறையில் பணியாற்றுகிறார்.
1998-ஆம் ஆண்டு நாசா சுனிதாவை விண்வெளி வீரராகத் தேர்வு செய்தது. சுனிதா அமெரிக்க கடற்படை அகாடமியில் முதுகலைப் பட்டம் பெற்ற திறமையான போர் விமானிமாவார்.ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் கேப்ஸ்யூல் என்பது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட மற்றும் செயல்படுத்தப்படும் ஒரு விண்வெளி வாகனம். இது பல நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) சரக்குகள் மற்றும் விண்வெளி வீரர்களை கொண்டு செல்லும் பணிகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. டிராகன் கேப்ஸ்யூல் இரண்டு பதிப்புகளில் உள்ளது: கார்கோ டிராகன் (Cargo Dragon) மற்றும் க்ரூ டிராகன் (Crew Dragon). கார்கோ டிராகன் சரக்குகளை மட்டும் கொண்டு செல்ல வடிவமைக்கப்பட்டது, அதே நேரத்தில் க்ரூ டிராகன் விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக விண்வெளிக்கு கொண்டு செல்வதற்கும், பூமிக்கு திரும்புவதற்கும் உதவுகிறது.
டிராகன் கேப்ஸ்யூல் முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்டது, மேலும் தனியார் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட முதல் விண்வெளி வாகனம் என்ற பெருமையைப் பெற்றது. 2020 ஆம் ஆண்டில், க்ரூ டிராகன் முதல் முறையாக விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு சென்றது, இது விண்வெளி பயணத்தில் ஒரு புதிய யுகத்தின் தொடக்கத்தைக் குறித்தது. இந்த வாகனம் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது செலவை குறைக்கிறது மற்றும் விண்வெளி பயணங்களை மிகவும் சாத்தியமானதாக்குகிறது.
டிராகன் கேப்ஸ்யூல் அதன் மேம்பட்ட தொழில்நுட்பம், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நம்பகத்தன்மைக்காக பாராட்டப்படுகிறது. இது விண்வெளி ஆராய்ச்சி மற்றும் வணிக விண்வெளி பயணங்களின் எதிர்காலத்திற்கு ஒரு முக்கியமான பங்களிப்பை வழங்குகிறது. விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம் உண்டுன்னு சொன்னது யாரு ? அதற்கு ஸ்பேஸ் எக்ஸ் என்பது பேரு! நாம் பார்க்கும் விண்மீன்கள், கோள்கள் மற்றும் சூரியனுக்கும், சந்திரனுக்கும், விண்வெளி வீரர்கள் பார்த்த சூரியன் மற்றும் நிலவுக்கும் வித்தியாசம் அதிகம் தான். விண்வெளியில் மக்கள் கால்பதிக்க ஸ்பேஸ் எக்ஸ் மூலம் காலம் விரைவில் கை கூடுகிறது
கருத்துகள்