முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏழு மாநிலங்களின் பிரதிநிதிகள் கூட்டம்

மத்திய அரசின் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து


தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருங்கிணைக்கும் ஏழு மாநிலங்களின் பிரதிநிதிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில்  நடைபெற்றது. தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் பகவந்த் சிங் மான், கேரளா மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட முதல்வர்களும் காணொளி மூலம் ஒடிசா மாநில முன்னாள் முதல்வர் உள்ளிட்ட 7 மாநிலங்களைச் சேர்ந்த 29 அரசியல் கட்சித் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.   




பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் பல்வேறு மொழிகள், இனங்கள், வழிபாட்டு நம்பிக்கைகள், பண்பாடு, உடைகள், உணவுகள் என பழக்க வழக்கங்களைக் கொண்டுள்ளன. இத்தகைய மாநிலங்கள் சுயாட்சியுடன் செயல்பட்டால் தான் உண்மையான கூட்டாட்சி உருவாக முடியும்" எனக் கூறினார்.



தொடர்ந்து தொகுதி மறுசீரமைப்பு குறித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்பது நம்மைப் போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கும் 

பல்வேறு சமூகநலத் திட்டங்கள் மூலமாக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள், மக்களவைத் தொகுதி எண்ணிக்கையில் பிரநிதித்துவத்தை இழக்க நேரிடும். எனவே இதனை கடுமையாக எதிர்க்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்" என்றார்.



"மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை ஏற்க முடியாது" எனக் கூறிய மு.க.ஸ்டாலின், இது வெறும் எண்ணிக்கையைப் பற்றியது மட்டுமல்ல, அதிகாரம் மற்றும் எதிர்கால நலன்களை உள்ளடக்கியதாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.


''தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க அனுமதித்தால் சொந்த நாட்டில் அரசியல் அதிகாரம் இழந்த குடிமக்களாக மாறும் அபாயம் ஏற்படும். எனவே இந்த விவகாரத்தை சாதாரணமாகக் கடந்து போகக் கூடாது'' என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தமிழ்நாடு எட்டு இடங்களை இழக்கும் எனக் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இந்தக் கூட்டம் அவசியம். அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைளை மேற்கொள்ளும் ஒரு குழுவை முன்மொழிகிறேன்" என்றார்.   தொகுதி மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் கேரளா மற்றும் தென்மாநிலங்கள் வெகுவாக பாதிக்கப்படும்" என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.


பன்முகத்தன்மையே இந்தியாவின் பலமாக உள்ளதாகக் கூறிய கேரளா மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன், "எண்ணிக்கை மட்டுமல்ல, இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விஷயம். மாநில அரசுகளுடன் அவசியமான உரையாடலை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதில் தென்மாநிலங்கள் முக்கிய பங்கு வகித்தன. நாட்டின் நலனுக்காக இவை செயல்படுத்தப்பட்டன. இதற்கான தண்டனையாக தொகுதி மறுசீரமைப்பு உள்ளது" எனக் குறிப்பிட்டார்.  தெலங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, "பா.ஜ.க நம்மைப் பேசவே விடுவதில்லை. அவர்கள் நினைப்பதை முடிவாக எடுக்கிறார்கள். கட்சி வேறுபாடுகளைக் கடந்து போராட வேண்டும். டெல்லியில் இதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்க வேண்டும்" என்றார்.


"தமிழ்நாடு, பஞ்சாப் மாநிலம் மட்டுமல்லாமல் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்திய அனைத்து மாநிலங்களும் தொகுதி மறுசீரமைப்பால் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும்" என பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் குறிப்பிட்டார். ஒடிஷா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக், காணொலிக் காட்சியில் தனது கருத்துகளைப் பகிர்ந்தார்.


அவர் கூறுகையில், "மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான முக்கியமான கூட்டமாக இது உள்ளது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு அநீதி ஏற்படுத்துவதாக தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது" என்றார். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யக் கூடாது எனவும் தனது பேச்சில் அவர் குறிப்பிட்டார்.  இந்த நிலையில் 



தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும். இதை நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோதி அறிவிக்க வேண்டும்.




வெளிப்படையான முறையில் தொகுதி மறுசீரமைப்பை செயல்படுதத் வேண்டும்.

1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அப்படியே தொடர வேண்டும்.

தெலங்கானா முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று கூட்டு நடவடிக்கைக் குழுவின் அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பங்கேற்ற மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தமிழ்நாடு மகளிர் சுயஉதவிக் குழுவினர் தயாரித்த பொருட்கள் உள்ள பரிசுப்பெட்டிகள் வழங்கப்பட்டன. அதில்

தமிழ்நாட்டின் பிரபல பொருட்களாயன பத்தமடை பாய், கோவில்பட்டி கடலை மிட்டாய், ஈரோடு மஞ்சள், ஊட்டி வர்க்கி, தோடர் சால்வை, காஞ்சிபுரம் பட்டு, கொடைக்கானல் பூண்டு, கன்னியாகுமரி  கிராம்பு உள்ளிட்ட 8 வகைப் பொருட்கள் அதில் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின்  சார்பில் கருப்புக் கொடி ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை பனையூரில் உள்ள தனது வீட்டின் முன்பு மாநிலத்தின் பாஜக தலைவர் அண்ணாமலை கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், " கேரளா முதல்வர், தெலங்கானா முதலமைச்சர், கர்நாடக துணை முதல்வர் என அழைத்து இவர்களின் கற்பனைக்காக, ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்" என விமர்சித்தார். ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளையும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தும், அந்தக்கட்சிகள் பங்கேற்கவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...