முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சவுக்கு யூ டியூப் மீடியா சங்கர் தாயார் வழக்கு விசாரணையை CBCID க்கு மாற்றி DGP உத்தரவு

தனியார் யூட்யூபர் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுகள் கலந்த நீரை ஊற்றிய சர்ச்சை தொடர்பான விசாரணையை CBCID க்கு மாற்றி DGP உத்தரவிட்டுள்ளார். 

பிரபல யூட்யூபரான சவுக்கு சங்கர், திமுக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளையும் ஊழல் புகார்களையும் சவுக்கு மீடியாவில் முன்வைத்தார். பலவிதமான வழக்குகளில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் வழங்கிய உத்தரவு மூலம் ஜாமீனில் வெளி வந்த நிலையில் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள சவுக்கு சங்கரின் வீட்டிற்கு நேற்று  சென்ற சிலர், வீட்டின் கதவை உடைத்து சூறையாடி சாக்கடை கழிவுகளை வீட்டிற்குள் வீசினர். மேலும், அங்கு தனியாக இருந்த சவுக்கு சங்கரின் தாயாரையும் சூழ்ந்துகொண்டு வாக்கு வாதம் செய்தனர். நேற்று காலை 9.30 மணி முதல், துப்புறவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் சவுக்கு சங்கரும் அவரது தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது சராமரியாக தாக்குதல் நடத்திய நிலையில். 



அவர் வெளியே கிளம்பிய 5 நிமிடத்தில் வந்த அந்தக் கும்பல், வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து, படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடையையும் மலத்தையும் கொட்டிமுளனர்.    என்ன நடந்தது என்று அவரது தாயாருக்கு போன் செய்த போது அந்த போனை வாங்கி வீடியோ காலில் வந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.  



காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக அவர் தகவல் தெரிவித்துள்ளார்.   ஒரே ஒரு உதவி ஆய்வாளரும் ஒரு காவலரும் மட்டுமே வந்துள்ளனர்.    9.30 மணி முதல் இது வரை வரை போராட்டம் நடத்தியவர்கள் அந்த இடத்தை விட்டு அகலவில்லை.    

அந்த இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர் எனத் தகவல்கள் வந்த நிலையில் 

யாருடைய தூண்டுதலில் இந்தத் தாக்குதல் நடைபெறுகிறது என்பதை சொல்ல வேண்டியதில்லை என சவுக்கு சங்கர் தெரிவித்தார்.



தமிழ்நாடு அரசியல் கட்சிகள் இந்த சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. விசிக தலைவரான திருமாவளவன், "சவுக்கு சங்கரின் வீட்டில் நுழைந்து அவரது தாயாரை அச்சுறுத்தியதுடன், மனிதக் கழிவு உள்ளிட்ட சாக்கடை கழிவுகளைக் கொட்டியுள்ள குரூரச் செயல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது, தூய்மைப் பணியாளர்களைச் சவுக்கு சங்கர் இழிவுப்படுத்திப் பேசியதால்தான், அதன் எதிர்வினையாக இது நடந்திருக்கலாமென சொல்லப்படுகிறது




எனினும், இது அநாகரித்தின் உச்சம். அருவருப்பான இந்த நடவடிக்கைகளை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. திமுக அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதாகவே இந்த இழிசெயல் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசு இதில் தொடர்புடையவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். அதேபோல் அதிமுக சார்பில் எடப்பாடி கே. பழனிச்சாமி அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இதே கருத்தை வலியுறுத்தும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக

அவரது தாயார் கமலா கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  விசாரணையை CBCID க்கு மாற்றி, DGP உத்தரவு பிறப்பித்துள்ளார். சவுக்கு சங்கர் காவல் ஆணையரகத்தை குற்றம்சாட்டிய நிலையில்,

வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.ஊடகப் பணியிலிருந்து விலகுவதாக சவுக்கு சங்கர் தனது சவுக்கு மீடியாவில் வீடியோ வெளியிட்டுள்ளார். தனது தாயின் உயிரை பணயம் வைத்து ஊடகம் நடத்த விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.தற்போது காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருக்கும் செல்வம் என்ற செல்வப் பெருந்தகை மற்றும் காவல் துறை சார்ந்த ஒரு உயர் அலுவலர் மீதும் படுகொலை செய்யப்பட்ட  பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர்


ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டிய நிலையில் இந்த விவகாரம் பெரிதாகியுள்ளது.   ஏற்கனவே இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் எழுதியிருந்த  கடிதத்தில், "செல்வப்பெருந்தகை என்ற நபர் 2008 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தார். மேலும் அவர் புரட்சி பாரதம், புதிய தமிழகம் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளிலும் இருந்திருக்கிறார். ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. மேலும், இவர் வட தமிழகத்தில் ரியல் எஸ்டேட் புரோக்கர் பிசினஸ் உள்ளிட்டவற்றில் ரெளடி கும்பல்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.



ரெளடிக் கும்பல் தலைவர் நாகேந்திரன் ஆயுள் தண்டனையில் வேலூர் சிறையில் இருக்கிறார். அவரின் மகன் அஸ்வத்தாமன் தான் தமிழக இளைஞர் காங்கிரஸின் முதன்மைச் செயலாளர். இவர், நாகேந்திரனுக்கும், செல்வப்பெருந்தகைக்கும் நிறைய வேலைசெய்திருக்கிறார். அஸ்வந்த்தாமனுக்கு பதவி கொடுத்தது செல்வப்பெருந்தகைதான். மேலும் இவர் கொலை மிரட்டல் விடுவது, தொழிலதிபர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவது என பல மோசடியான செயல்களில் ஈடுபட்டிருக்கிறார். அதில் வரும் பணத்தை செல்வப்பெருந்தகையுடன் பங்கு பிரித்துள்ளார். இதுபோன்ற கும்பலின் உதவியுடன் செல்வப்பெருந்தகை இந்தக் கொலை சம்பவத்துக்குத் திட்டம் தீட்டியிருக்கிறார்.


தற்போது தமிழ்நாடு மக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பலரின் கேள்வி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகை ஏன் இன்னும் கைதுசெய்யப்படவில்லை? என்பது தான் ஏனெனில், ஆளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் என்பதால் காவல்துறை அவரை கைது செய்து விசாரணை நடத்தத் தயக்கம் காட்டுகிறது. எனவே, செல்வப்பெருந்தகையை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.   அப்படி நீக்கினால் தான் தமிழ்நாடு மக்கள் மத்தியில் காங்கிரஸின் மதிப்பு நீடிக்கும்" என தெரிவித்துள்ளார்.ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கில் செல்வம் சம்பந்தப்பட்டிருப்பதால், 
புதிய தமிழகம் கட்சியிலிருந்து அவரை  நீக்கியதற்காக புதிய தமிழகம் கட்சியின் அலுவலகத்தை ரௌடிகளை வைத்து சூறையாடினார். ஆரம்ப நாட்களில் புரசைவாக்கம் ரங்கநாதன் அடியாட்கள் ஆக செயல்பட்ட காலத்தில் இவரது பெயர் செல்வம் பின்னர் செல்வப்பெருந்தகை ஆனது ஒரு தனிப்பட்ட பெரிய கதை 
இதன் தொடர்ச்சியாக கஸ்தூரிரங்கன் சாலையில் உள்ள டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமியின் வீட்டில் கழிவுநீரையும் சாக்கடையையும் ஊற்றியவர் தான் செல்வப்பெருந்தகை என்பது கடந்த கால வரலாறு.


இந்த கடிதம் தமிழ்நாடு அரசியலில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில் கடிதம் தொடர்பாக அப்போது கருத்துத் தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை" என தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் செல்வபெருந்தகை கருத்து சொல்வதை தவிர்த்து இருந்தாலும், அரசியல் ரீதியாக இந்த குற்றச்சாட்டு தற்போது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில நிர்வாகி நேரடியாக ராகுல் காந்திக்கும் காங்கிரஸ் தலைவராக உள்ள மல்லிகார்ஜுன் கார்க்கேவுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதால், அங்கு செல்வப்பெருந்தகை பதில் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசியல் ரீதியாக செல்வப் பெருந்தகைக்கு இந்த விவகாரம் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகும். செல்வம் என்ற செல்வப் பெருந்தகை யின் கடந்த கால கந்தலான வாழ்க்கை வரலாறு ஒரு Flash back மிகவும் மோசமானது அது குறித்து விரைவில் ஒரு பார்வை இதில் பொது நீதி யாதெனில்:- நீதி தவறாத ஜாம்பவான்கள் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சி வரலாற்றில் ஒரு கரும்புள்ளி என்பதே அக் கட்சியினர் மத்தியில் நடக்கும் விவாதம் 
One ball. Two wicket.
சவுக்கு விவகாரம் செல்வம் என்ற
செல்வ பெருந்தகை உள்ள 
காங்கிரஸ் கூட்டணி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...