இந்திய ஆயுதப்படைகள், மே மாதம் 7-ஆம் தேதி பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்களை
குறிவைத்து தாக்குதல் நடத்தியதில், பஹவல்பூரில் இயங்கிய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் மையம், முரிட்கே பகுதியில் இயங்கி வந்த லஷ்கர்-இ-தொய்பாவின் தீவிரவாதத் தளம் அடங்கும். லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-மொஹமது ஆகியவற்றின் முக்கிய நபர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், குறைந்தது 100 பயங்கரவாதிகள் உயிரிழந்திருப்பார்கள் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். தாக்குதலில், சில முக்கிய பயங்கரவாதிகள் உயிரிழந்தது, அவர்களுக்கான இறுதிச் சடங்களில் அந்த நாட்டின் சார்பாக பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டதிலிருந்து தெரிந்த நிலையில், கொல்லப்பட்டவர்களில் 5 பேர் முக்கியமான பயங்கரவாதிகள் என இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள் மே மாதம் 10 ஆம் தேதி உறுதிப்படுத்தியுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் முடாசர் காதியன் என்பவரது இறுதிச் சடங்கில் பாக்கிஸ்தான் லெப்டினன்ட் ஜெனரல் உட்பட மூத்த பாகிஸ்தான் ராணுவத் தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிர், பாக் பகுதி உள்ள பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ் ஆகியோரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதாகத் தெரிகிறது. ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் நிறுவனர் மவுலானா மசூத் அசாரின் இரண்டு மைத்துனர்களும் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் ஹபீஸ் முகமது ஜமீல். இவர், அந்த அமைப்பின் பிரச்சார நடவடிக்கைகளை நிர்வகித்து வந்துள்ளார். மற்றொருவர், காந்தகாரிலிருந்து காட்மண்ட் வரை 1999 ஐசி-814 விமானக் கடத்தலுக்காக தேடப்படும் முகமது யூசுப் அசார்.
நான்காவது நபர், லஷ்கர் இ தொய்பா தளபதி காலித். பைசலாபாத்தில் நடந்த அவரது இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில்.
ஐந்தாவது நபர், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த முகமது ஹசன் கான். பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் அந்தக் குழுவின் செயல்பாட்டுத் தளபதியின் மகன் என்பதும், ஜம்மு காஷ்மீரில் ஏராளமான தாக்குதல்களை ஒருங்கிணைத்தவர் என்பதும் தெரிகிறது
‹இதில், பஹவல்பூரில் இயங்கி வந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மையம், முரிட்கே பகுதியில் இயங்கி வந்த லஷ்கர்-இ-தொய்பாவின் தளமும் அடங்கும். லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-மொஹமது ஆகியவற்றின் முக்கிய நபர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதில், குறைந்தது 100 பயங்கரவாதிகள் உயிரிழந்திருப்பார்கள் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தநிலையில், கொல்லப்பட்டவர்களில் 5 பேர் முக்கிய பயங்கரவாதிகள் என இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் மே மாதம் 10 ஆம் தேதி உறுதிப்படுத்தியுள்ளனர். .
கருத்துகள்