முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காவல்துறை சித்ரவதை படுகொலை குறித்து உயர் நீதிமன்றம் கடுமையான வினாக்கள் எழுப்பிய நிலையில் சிபிசிஐடி விசாரணை

எந்த வழக்கிலும் காவல் துறை அடித்து விசாரிப்பது என்கிற போக்கும் உடனே நீதி வேண்டும் என்கிற போக்கும் மாற வேண்டும் ; நமது எதிரியாகவே இருந்தாலும் அடித்து விசாரிப்பதை ஆதரிக்கக் கூடாது.




 போலீஸ் சித்திரவதையில் செய்யாத  குற்றத்தை செய்ததாக ஒத்துக் கொள்ள வைப்பது கொடூரமானது.

இறந்து போனதாகக் கருதப்பட்ட பாண்டியம்மாள் உயிரோடு வந்த கதை நாம் அறிந்தது தான்.இதே காவல் நிலையத்தில் கடந்த காலத்தில் வெள்ளைக் கண்ணு மகன் ஜெகன் என்ற நபர் இதேபோல் கொல்லப்பட்ட சம்பவம் மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்திய வரலாறு உண்டு"மக்களிடம் ஆத்திரமாகவும், கோபத்துடனும் நடந்துகொள்ளும் இந்த காவல்துறை தான், ஆற்றுமணல், தாதுமணல், கிரானைட் கொள்ளையர்களிடமும், கார்ப்பரேட்டுகளிடமும் அமைதி காத்து வருகின்றனர். அதிகார திமிரும், தவறு செய்தாலும் தப்பித்துக் கொள்ள முடியும் என்ற தைரியமும்தான் காவல்துறையின் குற்ற நடவடிக்கைகள் பெருகக் காரணம்."- என தமிழர் வாழ்வுரிமைக் கட்சி கேள்விதிருப்புவனம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் கொலை : சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து உரிய தண்டனை கிடைக்க  தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! 


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இது காவல்துறை நடத்திய படுகொலையாகும். 

ஒரே மாதிரியான குற்றத்திற்கு, பொதுமக்களுக்கு ஒரு தண்டனையும், காவல்துறைக்கு ஒரு தண்டனையும் வழங்கப்படுவதனால் தான், இதுபோன்ற மனித நேயமற்ற கொடூரச் செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. 

காவல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்படுபவர்களின் கை, கால்களை உடைத்துவிட்டு ‘பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டனர்’ என்ற காவல்துறையின் கதைகளும், அதை அங்கீகரிக்கும் நீதித்துறையின் செயலுமே, காவல்துறையின் மரணங்களுக்கு அடித்தளமாக உள்ளது. 



இந்தியாவில் 90 விழுக்காடு மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவது காவல்துறையினரே. அத்துறையிடம் அதிகாரம் குவிக்கப்படுவதன் விளைவைத்தான், காவல்துறை மரணங்கள் அரங்கேறி வருகிறது. 

மக்களிடம் ஆத்திரமாகவும், கோபத்துடனும் நடந்துகொள்ளும் இந்த காவல்துறை தான், ஆற்றுமணல், தாதுமணல், கிரானைட் கொள்ளையர்களிடமும், கார்ப்பரேட்டுகளிடமும் அமைதி காத்து வருகின்றனர். 



வரம்பு மீறிய அதிகாரத்தால், தாங்கள் மக்களுக்கு பதில்சொல்ல கடமைப்பட்டவர்கள் அல்ல என்ற அதிகார திமிரும், தவறு செய்தாலும் தப்பித்துக் கொள்ள முடியும் என்ற தைரியமும்தான் காவல்துறையின் குற்ற நடவடிக்கைகள் பெருகக் காரணம்.


விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதற்கான விதிகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நிலையில், அவற்றை மதிக்காத காவல்துறையினர் அஜித்குமாரை கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்திருப்பது கடும் கண்டத்துக்குரியது. 

எனவே, இவ்வழக்கில் தொடர்புடைய காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ராஜேஷ் குமார், சார்பு ஆய்வாளர் சிவப்பிரகாஷ் பெயர் வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்ட நிலையில் புகார் தாரர் குறித்து சரியான விபரங்களை காவல்துறை வெளியிடவில்லை.கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த சில முக்கியமான காவல்நிலைய கொடிய மரணங்கள் குறித்து ஒரு பார்வை:- 



2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 

நகை திருட்டு வழக்கு ஒன்றில் சீர்காழியைச் சேர்ந்த சத்தியவாணன், அப்துல் மஜீத், சூர்யா ஆகியோர் தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதில் சத்தியவாணன் உயிரிழந்தார்.

2022 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 







திருவண்ணாமலை: தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி, சாராய விற்பனையில் ஈடுபடுவதாக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிறையில் மரணம்

2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 

பரமத்தி வேலூர் : பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணிகண்டன் என்பவரை பாலியல் புகார் தொடர்பாக பரமத்தி வேலூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் மயக்கமடைந்து உயிரிழந்தார்.

2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 

இராமநாதபுரம்: முதுகுளத்தூரில், மணிகண்டன் என்ற கல்லூரி மாணவர் காவல் துறையினரின் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு வீடு திரும்பினார். அடுத்த நாள் அதிகாலையில் அவர் உயிரிழந்தார்

2022 ஆம் ஆண்டு 

தருமபுரி: கோட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி நபரான பிரபாகரன், நகை திருட்டு வழக்கில் கைதான நிலையில் சிறையில் மரணம்

2023 ஆம் ஆண்டு 

ஜுலை மாதம் 

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ராஜசேகர் என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் மரணம். நகை திருட்டு வழக்கில் கைதான அவர் காவல்நிலையத்திலேயே உயிரிழப்பு

மதுரை:சீல்நாயக்கன்பட்டியை சேர்ந்த வேடன் என்பவர், சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மரணம்

2025 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 

சிவகங்கை: திருப்புவனம் அருகே நகை திருட்டு புகார் வழக்கு பதிவு இல்லாமல்  தனிப்படை காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் மரணம்

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 

திருநெல்வேலி: ஆமீன் புரத்தைச் சேர்ந்த விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது மயங்கி விழுந்து மரணம்

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 

சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விக்னேஷ் ( வயது 25) என்பவர் உயிரிழந்தார். புரசைவாக்கத்தில் ஆட்டோவில் வந்த விக்னேஷ், சுரேஷ் ஆகிய இருவரும் காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு காவல் நிலையத்தில் காவலில் இருக்கும்போதே விக்னேஷ் மரணமடைந்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 24 காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை தெரிவித்திருந்தது.            தமிழ்நாடு முதல்வர் நடத்திய இன்றய கூட்டத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும்!

மீறி நடந்தால் அதில் ஈடுபட்டவர் ரவுடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், காவலரே ஆனாலும் அதற்கான தண்டனையை விரைவில் பெற்றுத் தந்து நீதி நிலைநாட்டப்படும் ஆட்சியாகத்தான் திமுக அரசு திகழ்ந்து வருகிறது. என்றும் 

"போதைப் பொருள் - கள்ளச்சாராயம் - பெண்கள் பாதுகாப்பு - லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும்” என்பதைச் சட்டம் - ஒழுங்கு குறித்த இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் ஆனால் பல முக்கிய தலைவர்கள் தரப்பில்..யார் அந்த அகிலா? 

திருபுவனம் காவல் நிலையத்தில் வாய்வழியாக புகார் கொடுத்ததன் பேரில் 9 1/2 பவுன் நகை திருடியதாக ஒரு கோவில் காவல் பணியில் இருந்த இளைஞனை                அ டித்துக் கொலை செய்யும் அளவுக்கு காவல்துறை இறங்குகிறது என்றால் அவ்வளவு செல்வாக்கு மிக்க அந்த அகிலா யார்? அவருடைய பின்னணி என்ன?

ஒரு திருட்டு போய்விட்டது அல்லது பிரச்சினை நடந்து விட்டது என்று எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்துவிட்டு காவல் நிலையத்துக்கு பலமுறை அலைந்தாலே என்ன ஏது என்று கண்டுகொள்ளாத காவல்துறை இந்த அளவுக்கு சீரியஸ் ஆக இறங்கி வேலை செய்கிறார்கள் என்றால் அவ்வளவு வலிமையானவர் செல்வாக்கான புகார்தாரர் யார்?CBCID விசாரணை என்ற நிலை மாறி CBI விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் எழுகிறது.

6 காவலர்கள் பணியிடை நீக்கம் என்ற போலி கண் துடைப்பும் வேண்டாம். நிரந்தர பணி நீக்கம் மற்றும் கைதும் தேவை என்பதும்.

மாவட்ட SP-யையும் இந்த வழக்கில் சேர்த்து கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவான நிலையில். அதே போல் தலைமைச் செயலகத்தில் இருந்து கண்காணிப்பாளருக்கு அழுத்தம் கொடுத்த அந்த முக்கிய நபரையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்பதே பலரது விவாதம் 

புகார் கொடுத்த பெண் மணிக்கும் தலைமைச் செயலக VIP க்கும் உள்ள தொடர்பும் வெளிப்படையாகத் தெரியப்படுத்த வேண்டும்.




தவிர அஜித் குமார் எப்படி எல்லாம் சித்திரவதை செய்யப்பட்டார் என்ற மறைக்கப்பட்ட உண்மையும் தெரிய வேண்டும். ஒரே வழி CBI விசாரணைதான்.

தற்போது சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை சார்பாக தீர்ப்பு முடிவு செய்யும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...