முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடியரசுத் தலைவர் எழுப்பிய வினாக்கள் மீதான உச்சநீதிமன்றத் தீர்ப்பு நவம்பர் 21 ஆம் தேதிக்குள் கிடைக்கும்

 உச்சநீதிமன்றம் ஆளுநர் மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு விதித்து தொடா்பாக


குடியரசுத் தலைவா் விளக்கம் கேட்ட வழக்கில் நவம்பர் மாதம்.21-ஆம் தேதிக்குள் தீா்ப்பு: மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்க காலக்கெடு விதிக்கப்பட்டது தொடா்பாக குடியரசுத் தலைவா் விளக்கம் கேட்ட வழக்கில் 4 வாரங்களுக்குள் தீா்ப்பு வழங்கப்படுமென உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தகவல்.

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணையின் போது வெள்ளிக்கிழமை அவா் தெரிவித்தாா். தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு இரண்டு மனுக்களாக கும்பகோணம் கலைஞா் பல்கலைக்கழகம் தொடர்பான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் முடிவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.




கும்பகோணத்தில், கலைஞா் பல்கலைக்கழகம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து அதற்கான சட்ட மசோதா, ஏப்ரல் மாதம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக, தமிழ்நாடு முதல்வர் இருப்பாா் எனவும் இணைவேந்தராக உயா் கல்வித்துறை அமைச்சா் செயல்படுவாரென்றும், மேலும் தேடுதல் குழு வாயிலாக, துணைவேந்தா் நியமனம் செய்யப்படுவாாரென்றும் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநா் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆளுநா் ஆா்.என்.ரவி இந்தச் சட்ட மசோதாவை குடியரசு தலைவா் முடிவுக்காக உரிய காலத்தில் சட்டப்படி அனுப்பி வைத்தாா்.



அதே போல உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் குறித்து சட்ட மசோதாவையும் ஆளுநா் ஆா்.என்.ரவி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் அதை எதிா்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது.

துணைவேந்தரை நியமிக்கும் மற்றும் நீக்கும் அதிகாரங்களை வேந்தருக்கு அதாவது ஆளுநருக்குப் பதிலாக மாநில அரசுக்கு வழங்குவதன் மூலம், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகச் சட்டம், 2004-ன் சில விதிகளைத் திருத்துவதற்கான மசோதாவாகும் இது. இந்த மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்காமல் சட்டச் சிக்கல் உள்ளதாக ஆளுநா் ஆா்.என். ரவி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவுக்கு அனுப்பினாா்.


இந்த நிலையில், ஆளுநா் மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு அரசு 2 மனுக்கள் தாக்கல் செய்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வில் நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த போது தமிழ்நாடு அரசின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞா்கள் முகுல் ரோத்தகி, அபிஷேக் சிங்கி, நாடாளுமன்ற பாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் ஆகியோா் வாதிடுகையில், ‘சட்டமன்றப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாவை ஆளுநா் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க முகாந்திரமில்லை. ஆளுநா் ஒரு நீதிபதியைப் போல ஒவ்வொரு மசோதாவையும் ஆராய முடியுமா?, ஆளுநா் மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏற்புடையதல்ல’ என்றனா்.

அப்போது தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், ‘குடியரசுத் தலைவா் விளக்கம் கேட்ட வழக்கின் தீா்ப்புக்காக காத்திருங்கள். நீங்கள் 4 வாரங்கள் கூட காத்திருக்க வேண்டியதில்லை. நவம்பர் மாதம்.21-ஆம் தேதிக்கு முன் தீா்ப்பு வழங்க வேண்டும். (உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நவம்பா் 23-ஆம் தேதி ஓய்வு பெற உள்ளாா்.அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நவம்பா் 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அவருக்கு பணி இறுதி நாள்). நாங்கள் இப்போதே ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியாது’ எனத் தெரிவித்தாா்.

மத்திய அரசின் வழக்கறிஞா் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘2015 முதல் 2025 வரை நாட்டிலுள்ள அனைத்து ஆளுநா்களும் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்த மொத்த மசோதாக்களின் எண்ணிக்கை 381. நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து ஆளுநா்கள், சில மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்வது வழக்கமாகத்தானிருந்து வருகிறது. அதுதான் அவா்களது பணி’ எனத் தெரிவித்தாா்.

பின்னா், நீதிபதிகள், குடியரசுத் தலைவா் விளக்கம் கேட்ட வழக்கில் தீா்ப்பு வரும் வரை பொறுத்திருங்கள். அந்தத் தீா்ப்புக்கு பின்னா் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’  எனக் கூறி  வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனா். நேற்று விசாரணையின் போது தலைமை நீதிபதி பிஆர் கவாய் கூறியதாவது:

மாநில அரசுகளின் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்து தீர்ப்பளித்தது; இத்தீர்ப்பு மீது குடியரசுத் தலைவர் கேள்வி எழுப்பிய வழக்கு விசாரணை முடிவடையவில்லை.

குடியரசுத் தலைவர் கேள்வி எழுப்பிய வழக்கு விசாரணையின் முடிவைத் தெரிந்து கொண்ட பிறகு தமிழ்நாடு அரசின் வழக்கு விசாரணை குறித்து முடிவு செய்யலாம்

என்னுடைய பதவிக் காலம் இன்னும் 4 வாரம்தான் இருக்கிறது;  அதற்குள் வழக்கில் முடிவு தெரியும். எனத் தலைமை நீதிபதி பிஆர் கவாய் தெரிவித்துள்ளார்.  உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பிஆர் கவாய், தாம் ஓய்வு பெற இருப்பது தொடர்பாக தமிழக அரசு வழக்கில் தெரிவித்திருக்கும் கருத்து மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதில், ” தற்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பல்வேறு விஷயங்களில் மிகவும் கண்டிப்புடன் இருக்கிறார். அதனால் அவர் ஓய்வு பெறுகிற நவம்பர் மாதம் 23- ஆம் தேதி வரை பெரிய அளவுக்கு  திமுகவுக்கு நெருக்கடி தந்து சட்டச் சிக்கலை எதிர்கொள்ள வேண்டாம் என முடிவு செய்திருக்கிறது மத்திய அரசு. இதனால், பிஆர் கவாய் ஓய்வு பெற்ற பின், சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக திமுகவுக்கு  எதிரான பல வழக்குகள் வரிசைகட்டத் தொடங்கிவிடலாம்; திமுகவின் மூத்த அமைச்சர்கள் மட்டுமல்ல.. முதல்வர்  வரை ஊழல் மற்றும் நிலுவை வழக்குகள் நடவடிக்கை வரலாம் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்தாகும்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் முட்டுக்கட்டை போடுவதாகத்  தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்து  தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி வழங்கியது.

ஆளுநர்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் சாசன விதிகளை மீறும் வகையில் உள்ளது எனத் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 அரசியல் சாசனக் கேள்விகள் அடங்கிய குறிப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு  மே மாதம் 15ஆம் தேதி அனுப்பிருந்தார். அதில் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143வது பிரிவின் கீழ் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்தக் கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அதில், ‘இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200 ன் அடிப்படையில் ஆளுநருக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது அவர் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நீதிமன்றத் தீர்ப்புகள் மூலமாக நிர்ணயிக்க முடியுமா?. அத்தகைய அதிகாரங்கள் நீதிமன்றங்களுக்கு இருக்கின்றதா?, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 201வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மசோதாக்கள் மீதான முடிவுகளை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியுமா?.  இந்தத் தீர்ப்பை அளிப்பதற்கு முன்பு இத்தகைய அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்திருக்க வேண்டாமா?’ என பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில்  உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், நரசிம்மா, சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு வழங்கும். இதன் முடிவே மற்ற வழக்கில் தீர்வு வரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...