முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதிய வாகனங்கள் பதிவுக்கு கொண்டு வரத் தேவையில்லை என நீதிமன்றம் உத்தரவுப் படி ஆணையர் சுற்றறிக்கை

தமிழ்நாட்டில்150 வட்டாரப் போக்குவரத்து அலுவலக யூனிட் அலுவலகங்கள் இயங்குகின்றன. இரண்டு சக்கர வாகனங்கள், கார்கள், கனரக வாகனங்கள் தினமும், 8,000 வரை புதிதாக பதிவு செய்யப்படுகின்றன

இவற்றில், சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்கள் மட்டுமே, 3,000 முதல் 4,000 வரை பதிவு செய்யப்படடுகின்றன.

புதிய வாகனங்களைப் பதிவு செய்யும்போது, அந்த வாகனத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்ற நடைமுறை இதுவரை இருக்கிறது.


அதனால், அந்த வாகனத்தின் உரிமையாளரோ அல்லது விற்பனைப் பிரதிநிதியோ, ஆர்.டி.ஓ., அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயமுள்ளது.

தற்போது, மோட்டார் வாகன புதிய சட்டத் திருத்தத்தின்படி, 'சொந்தப் பயன்பாட்டு வாகனங்கள் பதிவின்போது, அவற்றை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வரத் தேவையில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, தமிழகத்தில் இதுவரை அமல்படுத்தப் படாமலேயே இருந்தது.

இது தொடர்பாக, ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில், 'மோட்டார் வாகன புதிய சட்ட திருத்தத்தின் படி, சொந்த பயன்பாட்டுக்கான புதிய வாகனங்களை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வருவதில் விலக்கு அளிக்க வேண்டும்' என, அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


அதனால், சொந்த பயன்பாட்டிற்கான புதிய வாகனங்களை பதிவு செய்ய, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வரத் தேவையில்லை.

இந்த புதிய உத்தரவு டிசம்பர் மாதம் முதல் தேதி அமல்படுத்த வேண்டுமென, அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கும், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை ஆணையர் கஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, போக்குவரத்துத் துறை ஆணையரக அலுவலர்கள் தரப்பில் கூறியதாவது,, "சொந்தப் பயன்பாட்டிற்கான வாகனங்களை பதிவு செய்யும்போது, சம்பந்தப்பட்ட டீலர்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு அவற்றை எடுத்து வருவர். இதற்காக, வாடிக்கையாளர்களிடம் தனியக கட்டணம் (லஞ்சம் சேர்த்து) வசூலிப்பார்கள்.

சொந்தப் பயன்பாட்டு வாகனங்களில், 70 சதவீதம் இருசக்கர வாகனங்களாகவே இருக்கும். புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் படி,  மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட சொந்த பயன்பாட்டு வாகனங்களை இனிமேல் கொண்டு வரத தேவையில்லை.

இருப்பினும், வணிக பயன்பாட்டிற்கான வாகனப் பதிவின்போது, கட்டாயம் அந்த வாகனங்களை ஓட்டி வர வேண்டும். எனக் கூறினர்

“சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளைக்காரர்களை விட அதிகமாகக் லஞ்சம் வாஙகிக் கொள்ளையடிப்பது வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் (RTO) தான்” என 2015 ஆம் ஆண்டு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி  வெளிப்படையாகவே கூறியிருந்தார். அதன் பிறகு பல்வேறு சீர்திருத்தங்களை போக்குவரத்துத் துறையில் கொண்டு வந்து புதிய சட்டங்களை இயற்ற உறுதுணையாக இருந்தார். குறிப்பாக புதிய வாகனங்கள் பதிவு செய்ய RTO அலுவலகங்களுக்கு வாகனங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற சட்டத்தை நீக்கி, வாகனங்கள் விற்கப்படும் நேரத்திலேயே அதற்கான பதிவு எண் அளிக்கப்பட்டு விடும் எனவும், இனி வாகன உரிமையாளரோ, வாகன முகவர்களோ புதிய வாகனங்களை எடுத்து செல்ல வேண்டியதில்லை என்ற நல்ல அறிவிப்பை வெளியிட்டு RTO அலுவலகங்களின் அட்சய பாத்திரமாக விளங்கிக்கொண்டிருந்த அந்த நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தினம் தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பதிவு செய்யப்படும் நிலையில், பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் லஞ்சம், ஊழல் நடைபெற்று வந்ததையடுத்தே இம்முடிவை அறிவித்தார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆனாலும், போக்குவரத்துச் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டிய மாநில அரசுகள் சில அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், நாளை முதல் தமிழ்நட்டில் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருகிறது. இனி தனியார்களின் புதிய வாகனங்களை பதிவு செய்ய போக்குவரத்துத்துறை அலுவலகங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இடைத் தரகர்கள் மற்றும் போக்குவரத்துத் துறை அலுவலர்களின் பெரும் ஊழல் கட்டுப்படுத்தப்படும். புதிய வாகனங்கள் வாங்கப்படும் போதே அதற்கான உரிய கட்டணம் மட்டும் வசூலிக்கப்பட்டு, பதிவு எண் தானியங்கி முறையில் வழங்கப்படும். இது குறித்து பல ஆண்டுகளாக  வலியுறுத்தி வந்த போதும். ஆனால், இதை கடுமையாக எதிர்த்தது கம்யூனிஸ்ட் கட்சிகளும், அதன் தொழிற் சங்கங்களும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய லஞ்ச, ஊழல் தடுப்பு நடவடிகையை சாத்தியமாக்கிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் நீதிமன்றமும் தான் இந்த நடவடிக்கை வரக் காரணம் பத்து ஆண்டுகள் நம் காத்திருப்பு நாளையுடன் நிறைவடைகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...