முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரௌபதி-2 திரைப்படம் வழக்கு பைசலானதால் இன்று வெளியானது

ஹெய்சாலர்களின் பேரரசன் மூன்றாம் வீர வல்லாளனையும் காடவராயர்களையும் இணைக்கும் வரலாற்றுத் தழுவல் இயக்குனர் மோகன் ஜி கார்த்திகேயன் இயக்கத்தில்


நேதாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்த திரௌபதி -2 திரைப்படத்துக்கு சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று முன்தினம் புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்த மகாமுனி அம்பலகாரர் சென்னை உயா்நீதிமன்றம் மதுரை கிளை அமா்வில் தாக்கல் செய்த மனு:

பொது ஆண்டு 14 -ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையை இரண்டாம்  தலைநகராகக் கொண்டு மூன்றாம் வீர வல்லாளத் தேவன் ஆட்சி செய்தாா். அவர் சேந்தமங்கலம் காடவராயர்களுடன் சம்பந்தம் செய்த உறவு வாழ்க்கை வரலாறு சிவனே மகனாக வந்த அருணாசல புராணம் ஏழாவது சருக்கம் அடிப்படையில் திரௌபதி - 2 திரைப்படம் தயாரிக்கப்பட்டதாக படக் குழு அறிவித்தது. கர்நாடக ஹெய்சால மன்னர் மூன்றாம் வீர வல்லாளத் தேவன் கள்ளா் சமூகத்தைச் சோ்ந்தவா் என்பதற்கு பல கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்கள் உள்ளதாகவும் . திரெளபதி -2 திரைப்படத்தில் வீர வல்லாளத் தேவனை வன்னியா் சமூகத்தைச் சோ்ந்தவராக இயக்குநா் மோகன் கார்த்திகேயன் சித்தரித்துள்ளாா் எனவும்,



திரைப்படத்தின் சுவரொட்டிகளில் வீர வல்லாளத் தேவன் என்பதை வீர வல்லாளன் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனா். இது உள்நோக்கம் கொண்டது. இது கள்ளா் சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும். இதைக் கண்டித்து, மதுரை மாவட்டம் மேலூர் பகுதி அ. வல்லாளபட்டி மற்றும் அழகர் கோவில் பகுதியில் பல போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், திரௌபதி - 2 திரைப்படத்துக்கு  அவசரமாக U/A சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கியது. அந்தச் சான்றிதழைத் திரும்பப் பெறுமாறு தணிக்கை வாரியத்திடம் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திரௌபதி - 2 திரைப்படத்தை தணிக்கை வாரியம் மறு ஆய்வு செய்ய வேண்டும். திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள வரலாற்றுப் பிழைகளைத் திருத்தம் செய்யும் வரை இந்தத் திரைப்படத்தை வெளியிடத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு உயா்நீரிமன்ற நீதியரசர் ஆா். விஜயகுமாா் அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், திரௌபதி -2  திரைப்படத்துக்கு 2025  டிசம்பர் 31 ஆம் தேதியில்  தணிக்கை குழு  சான்றிதழ் வழங்கியுள்ளது என்றாா்.





இதையடுத்து பிறப்பித்த உத்தரவில்:-

திரௌபதி - 2 திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கியுள்ளதால் நீதிமன்றம் தலையிட முடியாது. தனியாக கதை நூல் எழுத்தாளர் மீது பொதுநல வழக்குத் தொடுக்க உரிமை வழங்கப்படுகிறது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டார்.படம் இன்று வெளியாகும் நிலையில் நேற்று சிறப்புக் காட்சி செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது  இயக்குனர் மோகன் ஜி  

பேசியதில் "என்னை விட இயக்குநர் ரஞ்சித்துக்கு நிறைய வாய்ப்புகள் வருகிறதுன்னு சொல்லுறாங்க. ஆனா எனக்குக் கிடைக்கக்கூடிய பல வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கிறதில்லை" நான் கோவிலுக்குப் போனால் என்னை கைபுடிச்சு VIP வரிசையில் அழைச்சிட்டு போவாங்க.

தென் தமிழ்நாட்டுக்கு போனால், அங்கு இருக்கிற மக்கள் என்னை அவங்க வீட்டுல உக்கார வைச்சு ஒரு பிள்ளை மாதிரி சாப்பிட வைப்பாங்க. இதெல்லாம் ரஞ்சித்துக்கு கிடைக்குமான்னு எனக்குத் தெரியல"னு சொன்னதை பலரும் வேறு விதமாக விவாதம்

இந்த பேச்சு வெளியான உடன், சமூக ஊடகங்களில் இரண்டாகப் பிரிந்த விவாதம் ஆரம்பிச்சுட்டது. "மோகன் ஜி தன் அனுபவத்தை தான் சொல்கிறார், அதில தவறில்லைன்னு ஒரு தரப்பு ஆதரவு தெரிவிக்க, "இது தேவையில்லாத ஒப்பீடு, மற்ற இயக்குநர்களை குறைத்துப் பேசுகிற மாதிரி இருக்குனு இன்னொரு தரப்பு விமர்சிக்க ஆரம்பிச்சது.

மோகன் ஜி இதுவரை இயக்கிய 'பழையனூர் மாவீரன்', 'திரெளபதி', 'ருத்ர தாண்டவம்' போன்ற திரைப்படங்கள் சமூகக் கருத்துகளை மையமாகக் கொண்டு உருவானவை. குறிப்பாக 'திரெளபதி' படம் பெரிய அளவில் வசூலையும், அரசியல் சமூக ரீதியான சர்ச்சைகளையும் சந்தித்தது. இந்தப் படத்திற்காக அவருக்கு சில சமூக அமைப்புகளிடம் பாராட்டுகளும், மேடைகளில் கௌரவங்களும் பெற்றிருந்தார்.

இந்த நிலையில், இரண்டு இயக்குநர்களின் பயணத்தையும் ஒப்பிட்டு மோகன் ஜி பேசிய விதம் தான் இப்போது இது வெறும் தனிப்பட்ட அனுபவப் பகிர்வா, இல்லை மறைமுகத் தாக்குதலா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

மொத்தமாகச் சொல்லப்போனால், 'திரெளபதி 2' படம் ரிலீஸ்க்கு முன்னாடியே, மோகன் ஜியின் பேச்சு சினிமாவைத் தாண்டி அரசியல்-சமூக விவாதமா மாறியிருக்கிறது. படம் வெளியான பிறகு இந்த சர்ச்சை எந்த திசையில் போகப்போகுது என்பதையும், அதற்கு மோகன் ஜி மீண்டும் விளக்கம் தருவாரா என்பதையும் ரசிகர்களை படம் பார்க்க வைக்க நடத்தும் விளம்பர யுத்தி ன்பதை மக்கள் ஆர்வமாகவே கவனிச்சுக்கிட்டிருக்காங்க.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...