முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2026 குடியரசு தின சிறப்பு நிகழ்வுகள்

2026 குடியரசு தின அணிவகுப்பில், ஸ்வமித்வா அலங்கார ஊர்தி அடித்தள நிலையிலான மக்களுக்கு அதிகாரமளித்தலை எடுத்துக்காட்டுகிறது; மைகவ் வாக்கெடுப்பு மூலம் தங்களுக்குப் பிடித்தமான அலங்கார ஊர்தியை மக்கள் தேர்ந்தெடுக்கலாம்


புதுதில்லியில் உள்ள கடமைப் பாதையில் இன்று நடைபெற்ற 77-வது குடியரசு தின அணிவகுப்பில், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 450 பிரதிநிதிகள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். இது அடித்தள ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும் மக்களின் பங்கேற்பை உறுதி செய்வதற்கும் மத்திய அரசு அளிக்கும் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. கடமைப் பாதையில் அணிவகுத்த 30 அலங்கார ஊர்திகளில், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் "ஸ்வமித்வா திட்டம்: தற்சார்பு பஞ்சாயத்து மூலம் வளமான, தற்சார்பு இந்தியா" என்ற கருப்பொருளின் அலங்கார ஊர்தியும் இடம்பெற்றது. கிராமப்புற குடியிருப்புச் சொத்துக்களின் சட்டப்பூர்வ உரிமை, குடிமக்களுக்கு எவ்வாறு அதிகாரமளிக்கிறது, பஞ்சாயத்துக்களை வலுப்படுத்துகிறது என்பதை இது எடுத்துரைத்தது. இன்றுவரை, 1.84 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களில் ஏறத்தாழ மூன்று கோடி சொத்து அட்டைகளை வழங்க ஸ்வமித்வா திட்டம் உதவியுள்ளது. இது நிலத் தகராறுகளைக் குறைத்து, திட்டமிட்ட கிராமப்புற வளர்ச்சிக்கு ஆதரவளிக்கிறது.




தகவலறிந்த மக்கள் பங்கேற்புக்கான ஒரு முயற்சியாக, குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகளுக்கான மைகவ் பொது வாக்கெடுப்பில் பங்கேற்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் “ஸ்வமித்வா” திட்டத்தின் மீதான அணிவகுப்பு ஊர்திக்கு ஆதரவளிக்க, ஜனவரி 26, 2026 அன்று இரவு 11:45 மணி (இந்திய நேரம்) வரை மைகவ் தளத்தில் வாக்களிக்கலாம். பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து “MYGOVPOLL 365936,6” என குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமும் வாக்களிக்கலாம்.குடியரசு தின விழாவில் கௌரவிக்கப்பட்ட ஆழ்கடல் இயக்க விஞ்ஞானிகளை மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டினார்



இந்தியாவின் முன்னோடித் திட்டமான ஆழ்கடல் இயக்கத்தில் தொடர்புடைய, அர்ப்பணிப்புமிக்க விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை கௌரவிக்கும் சிறப்புப் பாராட்டு விழாவைப் புவி அறிவியல் துறைக்கான மத்திய இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று பிருத்வி பவனில் நடத்தினார். நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திறமைக்கு இவர்கள் அளித்த விலைமதிப்பற்ற பங்களிப்புக்காக பிரமாண்டமான 2026 குடியரசு தின அணிவகுப்பைக் காண சிறப்பு விருந்தினர்களாக மத்திய அரசால் அழைக்கப்பட்டனர்.

ஆழ்கடல் இயக்கத்தின் சாதனையைக் கொண்டாடும் வகையில், புவி அறிவியல் அமைச்சகம் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை அழைத்து, அமைச்சகத்தில் மதிய விருந்து அளித்தது. கூடியிருந்தோரிடையே கலந்துரையாடிய டாக்டர் ஜிதேந்திர சிங், ஆழ்கடல் ஆய்வில் இந்தியாவை முன்னணியில் நிலைநிறுத்திய விஞ்ஞானிகளின் அறிவு மற்றும் புத்தாக்கத்தில் இடைவிடாத முயற்சியைப் பாராட்டினார். ஆழ்கடல் இயக்கத்தின் சாதனை குறித்து, புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம். ரவிச்சந்திரன் விடுத்த செய்தியில், அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.



இந்த கௌரவத்திற்கு விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்ததுடன், இந்தப் பணியின் நோக்கங்களை அடைய தங்கள் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிசெய்தனர். இந்த நிகழ்வில், இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா மற்றும் பிற பிரமுகர்கள், உயிரி தொழில்நுட்பம், விண்வெளி, அணுசக்தி மற்றும் புத்தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானிகளும் கலந்து கொண்டனர்.தேசிய போர் நினைவிடத்தில், வீரத் தியாகிகளுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்






குடியரசு தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி, புது தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில், நாட்டிற்காகத் தங்களது இன்னுயிரை ஈந்த வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“தேசிய போர் நினைவிடத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டிற்காகத் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.”.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...