முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சஙக நிர்வாகிகள் மீது உறுப்பினர் மாநில மகளிர் ஆணையத்தில் புகார்

2026 பிப்ரவரி மாதத்தில் நடக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ராஜேஸ்வரி வேந்தனைப் போட்டியிட விடாமல் தடுக்கும்


தற்போதுள்ள நிர்வாகிகள் மீது தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார் அவர் ‘மயங்கினேன் தயங்கினேன்’, பிக்பாஸ் டைட்டில் வின்னர், ‘ஜின்’ ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த ராஜேஸ்வரி வேந்தன்.

தமிழ்நாடு அரசின் மானியத்துக்கான திரைப்படத் தேர்வுக் கமிட்டியில் உறுப்பினராகவும் உள்ளார்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நிற்பதற்கு மாநில மகளிர் ஆணையத்துக்கான புகார் ஏன் என வினவினால்  தமிழ்த்.திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முரளி ராமசாமி அணியில ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினராக ஒருமுறை இருந்துள்ளார்  அப்போது சங்கப் பதிவுப் பிரச்சனை தொடர்பாக அதிகமாக வேலைகள் செய்துள்ளதாகவும். அதுக்கு முன் இரண்டு முறை நியமன உறுப்பினராம் இருந்துள்ளார்.

பொதுப்பணத்தை எடுத்து செலவு வீணாகச் செய்வது பிடிக்காததால். நிர்வாகிகளைக் கேள்வி கேட்பேன். கேள்வி கேட்டு வரவு செலவு முறையாக் காட்டவும், பொதுக்குழுவை உரிய நேரத்தில் கூட்டுவதும் சங்க நலன் தொடர்பான கேள்விகளை முன் வைப்பதால் இவங்களுக்குப் பிடிக்கலை. கடந்த தேர்தலிலேயே நிக்க விடாமல் தடுத்தவர்கள் அப்போது சுயேட்சையாக துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்டு 357 ஓட்டும் வாங்கியுள்ளார்.

இப்போது செயலாளர் பொறுப்புக்குப் போட்டியிட நினைத்துள்ள நிலையில். அவர் நிற்கும் பட்சத்தில் வெற்றி எளிதுன்னு நினைக்கிறாங்க. அதனால அவரை சங்கம் சார்ந்து வரவிடாமல் செய்ய இதை எல்லாம்  சொல்வதால்.

பொதுக்குழுவைக் கூட்டும்படி அவர் கூறியதை  சங்கத்துக்கு எதிரான நடவடிக்கை எனக் கூறி தமிழ் திரைப்படத் தயாரிப்பாறர் சங்கத்திலிருந்து நீக்கியிருக்கும் நிலையில் அவர் கூறிய கருத்து "உயர் நீதிமன்றம் மூலம். வழக்கும் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலை நிறுத்த வேண்டுமென நோக்கமில்லை. என் மீதான தடையை உடைத்து தேர்தல்ல நின்று, வென்று, நிர்வாகத்துக்குள் போவதற்கு உண்டானது இந்தப் போராட்டமாகும் ’  மேலும்,  தமிழ்நாடு மாநிலமகளிர் ஆணையத்தில,

‘இடையில் என்ன நினைத்தார்களோ, நீக்கத்துக்கு முன் சங்கத்துக்கு வந்து மன்னிப்புக் கேக்கச் சொன்னதால். நானும் போனேன். அங்கு ஆண்களும் பெண்களுமாக 100 பேர் வரை இருந்தார்கள். அவர்கள் எல்லார் முன்னிலையிலயும் மன்னிப்புக் கேக்கச் சொன்னதால் நானும் கேட்டேன். அது போதாது என கடிதம் எழுதித் தருமபடி கேட்டதால். அதையும் எழுதித் தந்த நிலையில் தலைவர், செயலாளரிடம் கொடுக்கம்படி கூறவே அவரிடம் கொடுத்தால் மீண்டும், தலைவரிடமே கொடுங்களெனக் கூறினார். நான் இப்படி மாறி மாறி அலைந்ததைப் பார்த்து சிரிக்கும் நிலை வந்தது இது எனக்குப் பெரிய அவமானமாக இருந்தது. மன்னிப்புக் கேட்டா பிரச்சனை முடிந்தது என நினைத்துப் போனால், அங்கு போன பிறகே தெரிந்தது, என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தேர்தலே வேண்டாமென விலக வேண்டுமெனச் செய்திருக்கிறார்கள் அதனால் தான் இவங்கள் மீது மகளிர் ஆணையத்தில் புகார் தந்தேன்.ஆணையமும்  சுயமரியாதை தொடர்பான விஷயம் என்பதால் நியாயமான புகார் என விசாரணைக்கு எடுத்திருக்கிறார்கள் அன்று மதியம் விசாரணை. எதிர்தரப்பையும் ஆஜராக உத்தரவிட்டிருக்க இந்த விஷயத்தில்  நான் பின் வாங்கப் போறதில்லை’"~ என்கிறார்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சங்கத்தின் செயலாளர்களான இராதாகிருஷ்ணன், கதிரேசன் ஆகிய இருவருக்கும் சம்மன் அனுப்பியிருக்கும் நிலையில் இராதாகிருஷ்ணன் கூறும் போது 

‘எனக்கு சம்மன் எதுவும் வரவில்லை எனவும் வந்தால், நாங்கள் பார்த்துக்கொள்வோம்றோம்’ என்கிறார். ஆக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நிலை என்பதிலும் அரசியல் புகுந்தது தெளிவாகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...