முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விசிகவை உலுக்கும் உலங்கு வானூர்தி மாமூல் ஊழல் குற்றச்சாட்டு

விசிகவை உலுக்கும் உலங்கு வானூர்தி மாமூல் ஊழல் குற்றச்சாட்டு,




கோவளம் பகுதியில் செயல்படும் ஏரோ டான் சுற்றுலா உலங்கு வானூர்தி நிறுவனத்திடம் மாமூல் கேட்டுத் தொல்லை கொடுத்த திருப்போரூர் விசிகட்சி ச ம உ வைத் தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி சபாநாயகர் பி. எஸ் அப்பாவுவிடம் அதன் தலைமை நிர்வாக அலுவலர் நிசா புகார். கோவளம் உலங்கு வானூர்தி சேவையை மீண்டும் தொடங்குவதா?

சுற்றுச்சூழலைச் சீரழிக்கும்  சேவையை நிறுத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படுமென பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளி வந்த நிலையில் மற்றொரு பக்கம்





எங்களிடம் லஞ்சம் கேட்டு வி சி கட்சி சட்ட மன்ற உறுப்பினர் பாலாஜி தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறாரென கோவளம் பகுதியில் செயல்படும் உலங்கு வானூர்தி நிறுவனம் சார்பில், சபாநாயகர் பி.எஸ்.அப்பாவுக்கு புகார் மனு அளிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம்







திருப்போரூர் வட்டம் கோவளம் கிழக்குக் கடற்கரைச் சாலைச் சந்திப்பு சாலையருகே, ஏரோடான் எனும் தனியார் நிறுவனம் சார்பில், சுற்றுலா உலங்கு வானூர்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி உலங்கு வானூர்தி சுற்றுலா சேவை துவக்கப்பட்ட போது சில சான்றிதழ்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் அது நிறுத்தப்பட்டது.

அதையடுத்து 'ரோடான் சாப்பர் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து மீண்டும் ஜனவரி 12 ஆம் தேதி தமிழ்நாடு சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா. மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்,  உலங்கு வானூர்தியில் இந்த 6 பேர் மட்டுமே பயணிக்க முடியும். 5 நிமிடப் பயணத்திற்கு ஒரு நபருக்கு, 6,000 ரூபாய் எனக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது,







ஒரு நாளைக்கு 50 சவாரிகள் வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவளத்திலிருந்து உலங்கு வானூர்தியில் பயணியரை ஏற்றிச் சென்று கோவளம், திருவிடந்தை, கேளம்பாக்கம், முட்டுக்காடு கடற்கரைப் பகுதி என, 20 கிலோமீட்டர் தூரம் வரை வானில் சுற்றிக் காட்டப்படுகிறது. இந்த உலங்கு வானூர்தி 1,000 மீட்டர் உயரம் வரைக்கும் பறக்கிறது.  அதேபோல், உலங்கு வானூர்தி மையத்தில் திறந்த வெளித் திருமண அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் மணமக்கள் வந்திறங்கி, விழா மேடைக்குச் சென்று திருமணம் செய்து கொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்பட்ட நிலையில், ஏரோடாம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் நிஷா தமிழ்நாடு சபாநாயகர் பி.எஸ்.அப்பாவுவிடம் புகார் மனு  அளித்துள்ளார். எஸ். எஸ் பாலாஜி வி சி கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ளார், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திருப்போரூர் பொதுத் தொகுதியில்  போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வி சி கட்சி சார்பில் வெற்றி பெற்ற முதல் வன்னியர். 2021 ஆம் ஆண்டு டாக்டர் சர்மிளாவைத் திருமணம் செய்தார் இவர் வன்னியர் தான் இவர் மீது பலவித வழக்குகள் இருக்கிறது. அதில் வி சி கட்சியினர் போட்ட சில வழக்கும் உண்டு,அதில் தப்பிக்க விசிகவிலேயே சேர்ந்தது மட்டுமல்ல,  இவருக்கு 2 மனைவிகள். இரண்டாம் மனைவி டாக்டர் சர்மிளாவின் 3 வது கணவர் தான் எஸ். எஸ்.பாலாஜி. சென்னை கோவளத்தில் தனியார் ஹெலிகாப்டர் போக்குவரத்து நிறுவனத்தினரை மிரட்டி லஞ்சம் கேட்டதாகவும் , குண்டர்களை வைத்து தங்களை அலுவலகத்திற்க்குள் சிறை வைத்ததாகவும் வி சி கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி மீது அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் தமிழ்நாடு சபாநாயகர் பி.எஸ்.அப்பாவுவிடம் புகார் அளித்ததாக செய்தியைக் குறித்து கேட்டதற்கு, அந்த உலங்கு வானூர்தி இயக்கும் பைலட்டுக்கு லைசென்ஸ் உள்ளதா, அந்த உலங்கு வானூர்தி எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது? அதற்கு காப்பீடு உள்ளதா? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாததால் தான் இந்த நிலை என சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ்.பாலாஜி கூறியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. 







மத்திய, மாநில அரசுகளின் அனுமதியோடு செயல்படும் நிறுவனத்தை கேள்வி கேட்டு மிரட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. மேலும், மிரட்டி லஞ்சம் கேட்பதும், துன்புறுத்துவதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் படி பெருங் குற்றம். இது குறித்து சபாநாயகரிடம் புகார் அளிக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏன் ஏற்பட்டது? காவல்துறையினரிடம் எந்தவித புகார் மனுவை அளிக்கவில்லையா? அல்லது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? என்பது போன்ற கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு விளக்கமளிப்பதோடு, துரித விசாரணை நடத்தி சட்டமன்ற உறுப்பினர் மீது உரிய பிரிவுகளில் வழக்கு பதிய உத்தரவிட வேண்டும்.




சட்டம், ஒழுங்கை சட்டமன்ற உறுப்பினர்களே சீர்குலைக்கும் அளவிற்கு திராவிட மாடல் திமுக ஆட்சியில் தமிழகம் தடுமாறிக்கொண்டிருப்பது வெட்கக்கேடு."எனப் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, தெரிவித்துள்ளார்.   




"திரும்பத் திரும்ப எங்களுக்குத் தொந்தரவு கொடுக்கிறார் பாலாஜி. பைலட்டுக்கு உரிமம் இருக்கானு கேக்குறாரு. நீங்க சம்பாதிக்கிறீங்க எனக்கு என்ன லாபம்னு கேக்குறாரு”.. விசிக எம்.எல்.ஏ எஸ்.எஸ் பாலாஜி மீது ஏரோடான் நிர்வாக இயக்குனர் செல்வகுமாரின் குற்றச்சாட்டு அரசியலா அல்லது ஊழல் எதிர்ப்பா என்பது விரைவில் தெரியும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...