முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குற்றப் பின்னணி வழக்குரைஞர்கள் பார் கௌன்சில் தேர்தலில் போட்டியிடத் தடை கேட்ட வழக்கு விரைவில் விசாரணை

குற்றப் பின்னணி  வழக்குரைஞர்கள் பார் கௌன்சில் தேர்தலில் போட்டியிடத்  தடை


மற்றும் SC/ST சமூக வழக்கறிஞர்களுக்கு ரோஸ்டர் முறை இட ஒதுக்கீடு உள்ளிட்ட உத்தரவுகளைப் பிறப்பிக்க, பாஜகவின் வழக்குரைஞர் ஏற்காடு A. மோகன்தாஸ் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி  உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் பார் கவுன்சில் தேர்தல் 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறாத நிலையில்!.

2025 ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றம், உடனடியாக அனைத்து மாநில பார் கவுன்சில் தேர்தல்களை 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

2018 இம் ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலின் போது  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அடங்கிய அமர்வு, குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை  விதித்தும், தேர்தலில் போட்டியிடும் வழக்குரைஞர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினரின் 10 ஆண்டுகால வருமானம் சொத்து விவரம், மற்றும் குற்றப்  பின்னணி குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் எனவும்.


இரண்டு முறைக்கு மேல் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பு வகித்தவர் மீண்டும் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதித்தும். 

வழக்கறிஞர் சங்கத்தின் பதவிகிப்பவர் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அரசு வழக்கறிஞர் உள்ளிட்ட பதவியில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதித்தும். 

மாநில பார் கவுன்சில் தேர்தலை முறையாகவும், எந்த ஒரு பனபலம், ஆள் பலம் மற்றும் அடியாள் பலம், ஓட்டுக்கு பணம் மற்றும் இலவசங்கள் இல்லாமல் தேர்தலை நடத்த வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. 

இதை எதிர்த்து முன்னாள் தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவரும், தற்போதைய தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர், மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் சந்திரமோகன் உச்சநீதிமன்றத்தில் இந்த உத்தரவை எதிர்த்து  மேல்முறையீடு செய்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு பெற்று. அந்த மேல் முறையிட்டு வழக்கு இன்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

வழக்கறிஞர் சந்திரமோகன், ஏற்கனவே முன்னாள் திமுக மத்திய அமைச்சர் மற்றும் தற்போதைய திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ ராசாவின்  தூண்டுதலால் அப்போது நீதி அரசர் ரகுபதியிடம், ஒரு குற்றவாளியின் முன் ஜாமின் வழக்கில் முன் ஜாமின் பெறுவதற்காக லஞ்சம் கொடுப்பதற்கு முயற்சித்து முடியாத நிலையில் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த  விவகாரத்தில், அவர் அப்போது சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர்கள் இப்ராஹிம் கலிஃபுல்லா மற்றும் எம்எம் சுந்தரேஷ் அடங்கிய நீதிமன்ற அமர்வு தலையீட்டால், பார் கவுன்சில் சேர்மன் பொறுப்பு மற்றும்  உறுப்பினர் பொறுப்பு ஆகியவற்றை இழந்தார். 

2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட்ட பெரும்பாலான வழக்கறிஞர்கள், குற்றப் பின்னணி உள்ளவர்கள். 

அந்தத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தற்போதைய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவர் பி கார்த்திகேயன் மற்றும் உறுப்பினர் அய்யாவு ஆகியோர் பல குற்ற வழக்கில் ஈடுபட்டுள்ளனர். 

பார் கவுன்சில் உறுப்பினர் அய்யாவு கடத்தல் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 7 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கக்கூடிய ஐந்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் குற்றவாளியாக உள்ளார். 

தமிழ்நாடு பார் கவுன்சில் துணைத் தலைவர் வேலு கார்த்திகேயன் குட்கா வழக்கில் குற்றவாளியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர். 

இந்த நிலையில் 2023 ஆம் வருடத்தில், பார் கவுன்சில் ஆஃப் இந்தியா ஏழு வருடத்திற்கும் மேற்பட்ட தண்டனைக்குரிய குற்ற வழக்கில் ஈடுபட்ட வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை விதித்து சட்டம் இயற்றியதை  அக்டோபர் 2025 ஆம் ஆண்டில் இரண்டுக்கும் மேற்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மட்டுமே தேர்தலில் போட்டியிடத் தடை விதித்து பார் கவுன்சில் ஆப் இந்தியா சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருந்தது. 

இந்த திருத்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் ஏற்காடு A. மோகன்தாஸ் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி மூலமாக ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நீதிமன்ற உத்தரவின் பேரில் பார் கவுன்சில் ஆப் இந்தியா குற்றப் பின்னணி உள்ளவர்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது.

ஏதாவது ஒரு குற்ற வழக்கில் ஏழு வருடத்திற்கும் மேற்பட்ட தண்டனைக்குரிய குற்றப் பின்னணி உள்ள நபரை பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடவும், உறுப்பினராக தேர்ந்தெடுக்கவும் தடை விதிக்க வேண்டுமென்றும். 

நீதியரசர் கிருபாகரன் அடங்கிய அமர்வு  2018 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பார் கவுன்சில் தேர்தலில் வழக்கறிஞர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் வருமானம் சொத்து விவரங்களைத் தெரிவிக்க வேண்டுமென்றும்.

இரண்டு முறைக்கு மேல் தொடர்ந்து இடைவெளி இல்லாமல் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பதவி வகித்தவர்கள் மறுபடியும் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டுமென்றும்.

பார் அசோசியேசன் தேர்தலில் வெற்றி பெற்று பதவி வகிப்பவர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவும்.

பெண்களுக்கு பார் கவுன்சில் தேர்தலில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது போல பட்டியல் மற்றும் பழங்குடியின வழக்கறிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட வேண்டுமென ரிட் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...