முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வளர்ச்சி அடைந்த இந்தியா 2047' ஐ முன்நிறுத்ததும் மத்திய நிதிநிலை அறிக்கை

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை  இந்தியாவை முன்னிறுத்துகிற, 'வளர்ச்சி அடைந்த இந்தியா 2047' என்ற இலக்கை அடைய, இந்தியாவின் மக்கள்தொகையில் 'இளைஞர் சக்தி'யை  மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார ஏற்ற இறக்கங்கள், போட்டித்தன்மைக்கு ஈடுகொடுத்து நம் நாட்டின் உற்பத்தித்திறனை விரைவுபடுத்தி, நிலைத்திருக்க செய்யும் நிதிநிலை அறிக்கை தான்  இன்றைய பட்ஜெட். நாட்டின் முன்னேற்றத்தில் மக்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் திறன்பயிற்சி, வேலைவாய்ப்பு, சேவைத்துறை வளர்ச்சி என அனைத்து தேவைகளையும் உணர்ந்து பல்வேறு கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த மூலதன செலவினங்களை அதிகரித்துள்ளது மத்திய அரசின் இன்றைய பட்ஜெட். இந்தியாவின் வளர்ச்சி பாதையில், பொருளாதார முன்னேற்றத்தில் அனைவருக்கும் சமவாய்ப்பு என்ற பாஜக அரசின் கொள்கையின் படி, ஏழைகள், பின்தங்கியோர், பாதிக்கப்பட்டோர் என கடைநிலை மக்களை கடைத்தேற்றும்  நிதிநிலை அறிக்கை. எந்த வித புதிய வரிகளையும் மக்கள் மீது திணிக்காமல், மூலதன செலவினங்களை ரூபாய் 12.2 லட்சம் கோடியாக உயர்த்தியதோடு, மொத்த செலவினங்கள் ரூபாய் ...

அன்னையிடம் சக்திவேல் வாங்கிய நாளே தைப்பூசம் விழா உலகம் முழுவதும் விழாச் சிறப்பு

அன்னையிடம் சக்திவேல் வாங்கிய நாளே தைப்பூசம்  சூரியனின் 7ஆம் பார்வை மகர ராசி வீட்டில் விழும் நாளே தைப்பூசம், அல்லது  பூச நட்சத்திர வழிபாடு.      தைமாதம் அது  தைப் பூசத் திருநாள். சூரியன் சிவாம்சம் கொண்டவர். தை மாதத்தில் வடதிசைப் பயணத்தை தொடங்குவதை உத்ராயண புண்ணிய காலம்  இந்த மாதத்தில் மகரராசியில் இருக்கிறார்.  சக்தியின் அம்சமாக திகழ் சந்திரன். தைப்பூச நாளில் சந்திரன் ஆட்சி பலத்தோடு கடகராசியில் சஞ்சரிக்கிறார். அன்று, மகரத்தில் இருக்கும் சூரியனும், கடகத்தில் இருக்கும் சந்திரனும் ஒருவருக்கொருவர் பலத்தோடு பார்த்துக்கொள்வர். இது  அம்பிகை சிவகாமி கண்டு களிக்க,பரம்பொருளான சிவன், நடராஜராக ஆனந்த தாண்டவம் ஆடுகிறார். மார்கழி திருவாதிரையில் இறைவன் தனித்து ஆடுகிறார். தைப்பூசநாளில் சிவபார்வதி இணைந்து ஆடுவதாகவும் சொல்வர். நடனமாடினால் மகிழ்ச்சி பிறக்கும். அந்த மகிழ்ச்சியில் திளைக்கும் இறைவனிடம் நாம் வேண்டியதைப் பெறலாம் என்பதால் இந்நாளை வழிபாட்டுக்குரிய நாளாக நிர்ணயித்தனர். இல்லற வாழ்வில் பெறும் இன்பத்தின் அடையாளம் குழந்தை. அம்மையப்பரான சிவபார்வதி, மகிழ்ந்திர...