மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை இந்தியாவை முன்னிறுத்துகிற, 'வளர்ச்சி அடைந்த இந்தியா 2047' என்ற இலக்கை அடைய, இந்தியாவின் மக்கள்தொகையில் 'இளைஞர் சக்தி'யை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார ஏற்ற இறக்கங்கள், போட்டித்தன்மைக்கு ஈடுகொடுத்து நம் நாட்டின் உற்பத்தித்திறனை விரைவுபடுத்தி, நிலைத்திருக்க செய்யும் நிதிநிலை அறிக்கை தான் இன்றைய பட்ஜெட். நாட்டின் முன்னேற்றத்தில் மக்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் திறன்பயிற்சி, வேலைவாய்ப்பு, சேவைத்துறை வளர்ச்சி என அனைத்து தேவைகளையும் உணர்ந்து பல்வேறு கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த மூலதன செலவினங்களை அதிகரித்துள்ளது மத்திய அரசின் இன்றைய பட்ஜெட். இந்தியாவின் வளர்ச்சி பாதையில், பொருளாதார முன்னேற்றத்தில் அனைவருக்கும் சமவாய்ப்பு என்ற பாஜக அரசின் கொள்கையின் படி, ஏழைகள், பின்தங்கியோர், பாதிக்கப்பட்டோர் என கடைநிலை மக்களை கடைத்தேற்றும் நிதிநிலை அறிக்கை. எந்த வித புதிய வரிகளையும் மக்கள் மீது திணிக்காமல், மூலதன செலவினங்களை ரூபாய் 12.2 லட்சம் கோடியாக உயர்த்தியதோடு, மொத்த செலவினங்கள் ரூபாய் ...
RNI:TNTAM/2013/50347