குடும்ப நல வழக்கு விவரங்களை இணையத்தில் காணவே இயலாது. பெயர்கள் பெருக்கல் குறியீட்டில் தான் இருக்கும். அது HMOP ஆனாலும் SMOP ஆனாலும் DVC ஆனாலும்
தனி மனித குடும்ப நல வழக்கு மனு எப்படி இணையத்தில் பரவி்யது. செங்கல்பட்டு நீதிமன்றம் வழக்கு மனு பொது வெளியில் விதைத்தவர்கள் யார்?
மெட்ராஸ் உயர்நீதிமன்றம் தானாக முன் வந்து சூமோட்டோவாக இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். விஜய் ஒரு சினிமா நடிகர் அவர் சினிமாவில் டூயட் பாட வேண்டும், நடிகை இல்லாமல் நடிகர் இல்லை, அது அரசியலில் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகட்டும் எஸ்.எஸ்.ஆர். ஆகட்டும். நடிகர் விஜயகாந்த் நடிகை ராதிகா ஆகட்டும் நடிகை பானுமதி ஆகட்டும், நடிகர் கமலஹாசன் நடிகை கௌதமி ஆகட்டும், சினிமா உலகம் தனி அரசியலுக்கு தகுதி நேர்மை, தூய்மை, ஊழலற்ற நிலை மடடுமே தலைவருக்கு மனைவி யார்? துணைவி யார்? உப துணைவி யார் என சமூகம் பார்க்காது, ஆந்திராவில் என்.டி. ராமாராவுடன் சிவபார்வதி வந்த பின்னர் தான் அதிக மக்கள் வாக்களித்தனர், இதுபோல 200 உதாரணம் கூறமுடியும், அரசியல் நேர்மை மட்டுமே தேவை அது தவெக தலைவர் நடிகர் விஜயிடம் அதிகம் உள்ளதாகவே மக்கள் நம்பும் நிலையை நாம் காண்கிறோம். இரண்டு தரப்பு ஊழல் வாதிகளைப் பார்த்த மக்கள் இப்போது ஒரு மாற்றத்தை விரும்புவது கண்கூடாகத் தெரிகிறது, அது ஆணடவர்களுககும், ஆளுபவர்களுக்கும் பிடிக்கவில்லை. இதில் நாம் கூறும் உதாரணம் ஒன்று மட்டுமே, வள்ளி திருமணம் தெருக கூத்தில் அரிதாரம் பூசிய ராஜபார்ட் முருகன் நடிகர் முடிவில் ஸ்ரீ பார்ட் வள்ளி நடிகை கழுத்தில் மாலை மாற்றிப்போட வேண்டும், இது தொழில் தர்மம்,
அப்போது தான் அந்த மொத்த நடிகர்களும் காலை சம்பளம் வாங்கி ஊர் செல்ல முடியும், ராஜபாரட் மனைவி கூத்துப்பார்க்க வந்தாலும் அதைத் தடுக்க முடியாது. இது நியதி, 2021 ஆம் ஆண்டில் முடிந்த பஞ்சாயத்து 2026 ஆம் ஆண்டு வருவதற்கு யார் காரணம் என்பதை அரசியல் அறிந்த பலருக்குத் தெரியும், ஆனால் மக்கள் பேப்பர் மற்றும் சமூக வலைதளங்கள் உண்மை பேசாது,
காலஞ்சென்ற எம்ஜிஆர் உடன் மனைவி ஜானகி வந்து ஓட்டுக் கேட்பதை விட ஜெயலலிதா வந்தால் அதிகம் விழும் காரணம் ரசனை உள்ள தமிழ் ரசிகர்கள் தான் வாக்காளர்கள் விஜய் விவகாரத்தில் சங்கீதா யாரனப் பார்க்க மட்டார்கள்.1999 ஆம் ஆண்டு நடிகர் விஜய் லண்டனில் வசிக்கும் சங்கீதா திருமணம் நடைபெற்றது -27 வருடங்களுக்கு பிறகு விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துளளார், அது அவர்கள் தனிப்பட்ட விவகாரம் அரசியல் அல்ல
நடிகையுடன் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருந்தது 2021 ஏப்ரல் மாதம் அவருக்கு தெரியவந்தது ஏன் 5 வருடம் காத்திருந்து இதைக் கூற வேண்டும், அதை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும், அதை விஜய் வழக்கறிஞர் மூலம் சந்திப்பார்
2021 ஆம் ஆண்டு முதல் மனதளவிலும், உணர்வுப்பூர்வமாகவும் விஜய் என்னை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இது ஒன்றே போதும் தாராளமாக விவாகரத்து கிடைக்கும்.
விஜயின் திருமணத்தை மீறிய உறவால் 2021ம் ஆண்டு முதல் ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனியாக வசித்து வருகிறோம்
எனது கணவர் விஜய் தொடர்ந்து நடிகையுடன் வெளிநாடு செல்கிறார், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் (அது தொழில்)
என் கணவருடன் வெளிநாடுகளுக்கு செல்லும் நடிகை இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், என இன்னும் சில சங்கதிகள் சேர்த்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் எஸ்.எம்.ஓ.பி. மனு சங்கீதா விஜய் மனுதாரர் /எதிராக/ ஜோசப் விஜய் சந்திரசேகர் எதிர் மனுதாரர் என சிறப்புத் திருமணச் சட்டம், 1954 இன் பிரிவு 27(1)(a), (b), (d) மற்றும் பிரிவுகள் 36 & 37 ஆகியவற்றின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் M/s. ரத்தின அசோகன், ம்ருணாலினி தேஷ்முக், டிப்ரோசன்னா மற்றும் பி.மஞ்சுளா, ஆவர். இந்த வழக்கை தவெக தலைவர் நடிகர் விஜய் தனது வழக்கறிஞர் மூலம் சந்திப்பார் அதற்கும் அரசியலுக்கும் எந்த விதமான தொடர்புமில்லை.















கருத்துகள்