தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என். ரவி, மேற்கு வங்காள ஆளுநராக நியமிக்கப்பட்டார். பதிலாக கேரளம் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது
தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காள மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளதன்படி, தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என். ரவி, மேற்கு வங்காள ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
ஹிமாசலப் பிரதேச ஆளுநரான ஷிவ் பிரதாப் சுக்லா தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம்.
டில்லி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக தரன்ஜித் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்தெலங்கானா மாநில ஆளுநரான ஜிஷ்னு தேவ் வர்மா மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமனம்.
நாகாலாந்து ஆளுநராக நந்த் கிஷோர் யாதவ் நியமனம்.
பிகார் மாநில ஆளுநராக (ஓய்வு) லெப்டினென்ட் ஜெனரல் சையத் அதா நியமனம்,.லடாக் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர கவிந்தர் குப்தா ஹிமாசலப் பிரதேசத்தின் ஆளுநராக நியமனம்.
லடாக் துணை நிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனா ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நியமனங்கள் அந்தந்த, மாநில லோக்பவன் அலுவலகங்களில் பொறுப்பேற்கும் தேதிகளிலிருந்து அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்