முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் 9 ஆளுநர்கள் மாற்றமும் நியமனமும்

தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என். ரவி, மேற்கு வங்காள ஆளுநராக நியமிக்கப்பட்டார். பதிலாக கேரளம் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காள மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளதன்படி, தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என். ரவி, மேற்கு வங்காள ஆளுநராக நியமிக்கப்பட்டார்.


ஹிமாசலப் பிரதேச ஆளுநரான ஷிவ் பிரதாப் சுக்லா தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம்.

டில்லி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக தரன்ஜித் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்     தெலங்கானா மாநில ஆளுநரான ஜிஷ்னு தேவ் வர்மா மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமனம்.

நாகாலாந்து ஆளுநராக நந்த் கிஷோர் யாதவ் நியமனம்.

பிகார் மாநில ஆளுநராக (ஓய்வு) லெப்டினென்ட் ஜெனரல் சையத் அதா நியமனம்,.லடாக் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர கவிந்தர் குப்தா ஹிமாசலப் பிரதேசத்தின் ஆளுநராக நியமனம்.

லடாக் துணை நிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனா ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நியமனங்கள் அந்தந்த, மாநில லோக்பவன் அலுவலகங்களில் பொறுப்பேற்கும் தேதிகளிலிருந்து அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டதுமத்திய அரசு மேற்கு வங்காள ஆளுநரான ஆனந்த போஸை ராஜினாமா செய்யச் சொல்லியதாக மம்தா பானர்ஜி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதோடு தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என்.ரவியை மேற்கு வங்காள மாநிலத்திற்கு பதவி உயர்வு தந்து மாற்ற இருப்பதாகவும் தகவல் வந்த நிலையில் 

இது குறித்து மத்திய அரசுக்கு நெருக்கமான உயர் அதிகாரிகள் தரப்புக் கூறிய 

"மேற்கு வங்காள ஆளுநரோடு, லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநரான கவிந்தர் குப்தா, உள்ளிட்ட மூன்று ஆளுநர்களை மத்திய அரசு ராஜினமா செய்யச் சொல்லியதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், மேற்கு வங்காள மாநில ஆளுநரை மட்டுமே ராஜினாமா செய்துள்ளார்.



மத்திய உள்துறை அமைச்சகத்துடன் ஏற்பட்ட சில கருத்து மோதல்களே இந்த ராஜினாமாவிற்கு காரணம் என சொல்லப்படுகிறது" என்கிறார்கள்.

அதே நேரம் மேற்குவங்காள மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ளதால், தங்களுக்கு ஏற்ற ஒருவரையே ஆளுநராக நியமிக்க வேண்டும் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதனாலே ஆர்.என்.ரவியை மேற்கு வங்காள மாநில ஆளுநராக மாற்றம் செய்யும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது. மற்றொருபுறம், கேரளம் மாநில ஆளுநராக உள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை தமிழ்நாடு கூடுதல் ஆளுநர் பொறுப்பைக் கவனிக்கும் உத்தரவும் வெளியாகியுள்ளது.

அதோடு தெலங்கான மாநில ஆளுநராக இருந்த தேவ் வர்மாவை மஹாராஷ்ட்ரா மாநில ஆளுநராகவும், இமாச்சல மாநில ஆளுநராக இருந்த பிரதாப் சுக்லாவை தெலுங்கானா மாநில ஆளுநராகவும் மாற்றம் செய்துள்ளது மத்திய அரசு.

அதே போல், டெல்லி, லடாக் உள்ளிட்ட யூனியன் பிரதேச மாநிலங்களின் துணை நிலை ஆளுநர்களும் மாற்றப்பட்டுள்ளார்கள். இதற்கான அறிவிப்பை முறைப்படி ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ளது.

கேரளம் மாநில ஆளுநர் கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு ஆளுநராகச் செயல்படுவார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளதால், தமிழ்நாடு ஆளுநர் தேர்வை மத்திய அரசு தள்ளிவைத்துள்ளதாகத் தெரிகிறது. விரைவில் தமிழ்நாடு ஆளுநர் யார் என்பதை மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் அறிவிக்கும் எனலாம் மத்திய அரசுக்கு நெருக்கமானவர்கள். மேற்கு வங்காள மாநில ஆளுநரின் ராஜினாமாவைத் தொடர்ந்தே இத்தனை ஆளுநர் மாற்றங்களையும் மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாகத் தெரிகிறது..பதவிக்காலம் முடிவு பெறுவதை யொட்டி, கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள் மேற்கு வங்கத்துக்கு மாற்றப்படுகிறார் என்றாலும், அவர் தமிழ் நாட்டை விட்டுச் செல்வது சற்று பப்ளிக் ஜஸ்டிஸ் வாசகர்கள் மத்தியில் வருத்தம் அளிக்கத்தான் செய்கிறது. 

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் சந்திக்கக்கூடிய பல பிரச்னைகளைச்  சந்திக்க நேர்ந்தபோதும், திரு.  ஆர்.என். ரவி அவற்றை திறம்படச்  சமாளித்தார். 

தமிழ்நாடு அனுபவங்களின் நினைவு அவருக்கு மனக்கசப்பை அளித்திருக்கலாம். எனினும்,  எந்த சந்தர்ப்பத்திலும் அதைக் காட்டிக்கொள்ளாமல், பொறுமையுடன் கடமையாற்றிய சிறப்புக்குரியவர்,  விடை பெறும் ஆளுநர். 

தன்னால் ஏற்க முடியாத சர்ச்சைக்குரிய மசோதாக்களைத் தவிர, மற்ற அனைத்து மசோதாக்களுக்கும் உடனுக்குடன் ஒப்புதல் வழங்கினார். உண்மைக்கு மாறானது என்று அவர் கருதிய ஆளுநர் உரையின் வாசகங்களை அப்படியே வாசிப்பது தர்மசங்கடமானது என்பதால், அவர் அதைத் தவிர்த்தது புரிந்து கொள்ளக் கூடியதே. 

அதற்காக அவர் சந்தித்த எதிர்ப்புகள், அவமானங்கள்  அவருக்கு மிகுந்த மன சங்கடத்தை அளித்திருக்கும். அவர் சட்டசபையிலிருந்து வெளியேறியபோது, பின்னாலிருந்து ஒரு அமைச்சர் காட்டிய சைகை முதற்கொண்டு,  'Who are you? You are a postman.'  என்பது போன்ற விமர்சனங்கள் வரை எதற்கும்,  அதே பாணியில் சாமானியன் போல எதிர்வினையாற்ற விரும்பாத பெரிய மனிதராகவே  செயல்பட்டார்.


' கெட் அவுட் கவர்னர் ' என்றாலும், ' அவரே கவர்னராக நீடிக்கட்டும் ' என்றாலும், இரண்டையும் சமமாக ஏற்ற ஸ்திதப் பிரங்ஞனாக அவர் விளங்கினார். சுயம் சேவகர் 

தமிழ்நாட்டில் தான் இப்படி நடத்தப்பட்டாலும், பொது மேடைகளில் தன் மாநிலத்தை விட்டுக் கொடுக்காமல் அதன் சிறப்புகளைப் போற்றியே  பேசினார்.

கம்பரை வியந்து போற்றினார் கம்பர் நினைவிடத்தில் பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் அவரிடம் தம்பி பரத் நூல் வழங்கிய நிகழ்வும் உண்டு, 


உயர் பதவிகளில் இருப்பவர்களிடம் இத்தனை முதிர்ச்சிகளைக் காண்பது மகிழ்ச்சிக்குரியது. ஆர்.என். ரவி அவர்களிடம் இத்தகைய பண்பாடுகள் மிகுந்திருந்தன. நம்மைப் பொறுத்த வரை அவர் ஒரு ஜென்டில்மேன். பாராட்டுகிறோம்.

வரும் காலத்தில் இதை விட உயர்ந்த பதவிகளைப் பெறும் தகுதி அவருக்கு இருக்கிறது. வாழ்த்துகிறோம்.

அவரது எதிர்காலம் சிறப்பாக அமையட்டும். சென்று வருக, Honourable His Excellency Governor Sri R.N. RAVI. என்பதே


நம் மாநிலத்திலிருந்து சற்று பெரிய மாநில ஆளுநராகச் செல்லும் முன் தலைமை நீதிபதி நல்லநேரத்தில் பதவி ஏற்கிறார்.

கருத்துகள்