என்னதான் ஆயிற்று தமிழகத்துக்கு என்று தெரியவில்லை? அடிப்படை அறிவோ? அல்லது எதை பற்றியும் தெரிந்து கொள்ள விரும்பாத தற்குறியெல்லாம் எல்லாற்றிற்கும் நீதி சொல்கிறார்கள். குடியரசு தினத்தில் தமிழக சார்பாக கொண்டு வரப்பட்ட ஐயனாருக்கு எப்படி பூணூல் வந்தது என நக்கல் செய்து கொண்டுள்ளது ஒரு கும்பல்.இவர்கள் வாழ்நாளில் என்றாவது ஐயனார் கோவிலுக்கு போயிருப்பார்களா என்று தெரியவில்லை. Iconography என்ற ஒன்று இருப்பது இவர்களுக்கெல்லாம் தெரியுமா? தெரியாதா? என புரியவில்லை.எல்லா தெய்வங்களுக்கும் உள்ள அடையாளங்கள்,தோற்றங்கள் சேகரித்து வைத்துள்ளார்கள்.தமிழ்நாட்டில் மிக பழமையான 8-10 ம் நூற்றாண்டு ஐயனார் சிலைகள் கூட கிடைத்துள்ளது. ஐயனார் கிழக்குத் திசை நோக்கி பார்த்திருப்பார் பெரும்பாலும்.மார்பில் பூணூல் அணிந்திருப்பார்.இளைஞராக இருப்பார் இதற்கு பொருள் சிலப்பதிகாரம் சொல்கிறது.மாலதி என்னும் அந்தணப் பெண்ணினால் ஒரு குழந்தை இறந்து போக,அவள் பாசண்ட சாத்தனான ஐயனாரை வேண்டுகிறாள். அவள் துயர் துடைக்க அந்தச் சாத்தன் குழந்தையாக அவதரித்து,பின் அந்தணச் சிறுவனாக வளர்ந்து,அதன் பின் கண்ணகியின் தோழியான தேவந்தி என்பவளை மணந்து அவளுக்கு மட்டும் தன் ‘மூவா இளநலம் காட்டி’ என் கோவிலுக்கு நாள்தோறும் வா! என்று கூறித் தீர்த்த யாத்திரை செல்வது போல நீங்கியது பற்றிய செய்தி உள்ளது.இதுதான் அவரின் நீங்காத இளமையை குறிப்பது. கீரிடம் தலையில் இருக்கும்.வலது காதில் குழையும் இடதுகாதில் குண்டமும் அணிந்திருப்பார் மற்றும் சிவனுக்கான அனைத்து ஆபரணங்களையும் அணிந்திருப்பார்.சந்தனம் பூசியிருப்பார். வலதுகையில் தண்டம் அல்லது தடி வைத்திருப்பார். இடது கையை இடதுகாலின் மீது சார்த்தியது போல் வைத்திருந்து இடதுகாலை மடித்து பீடத்தின் வைத்துக்கொண்டு வலதுகாலை கீழே தொங்கவிட்டிருப்பார் இதை "உத்குடிகாசனம்" என்று ஆகமமே வரையறுக்கிறது.குதிரை அல்லது யானை மீதோ அமர்ந்திருப்பார்.எனவே,ஐயனாருக்கு சைவ படையல்தான் கால காலமாக.அவருக்கு பூஜை செய்பவர்கள் வேட்குயவர் எனும் வேளார்கள் அல்லது ஆசாரிகள் தான் அவர்களும் அவரைப் போவவே பூணூல் அணிந்திருப்பர்.
நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்
கருத்துகள்