முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சார்பு ஆய்வாளர் வில்சன் கொலையாளி வீடுகளில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை

    சார்பு ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொலை தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை
நடத்தி லேப்டாப், செல்போன், வங்கி கணக்குப் புத்தகங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில்  ஜனவரி மாதம் எட்டாம் தேதி பணியிலிருந்த சிறப்புக் காவல் சார்பு ஆய்வாளர் வில்சன் பயங்கர வாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். வழக்கில் தொடர்புடைய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காஜாமொய்தீன், ஜாபர் அலி, அப்துல் சமது ஆகியோர்  கைது செய்யப்பட்டு,  திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை தேசியப் புலனாய்வு முகமை அதாவது என்.ஐ.ஏ.வுக்கு சமீபத்தில் மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வழக்கு தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் நேற்று நான்கு  இடங்களில்  அதிரடி சோதனை நடத்தினர்.
நெய்வேலி டவுன்‌ஷிப் ஏழாவது வட்டம் பெரியார் சாலையில் உள்ள என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவர் காஜாமொய்தீன். இவரது முதல் மனைவி இந்திரா காந்தி.  என்.எல்.சி. பொதுமருத்துவமனையில் செவிலியராக பணியில் இருக்கிறார்.  என்.ஐ.ஏ. துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நெய்வேலியில் உள்ள காஜாமொய்தீன் வீட்டுக்கு வந்தனர். இதை சற்றும் எதிர்பாராத இந்திராகாந்தி திகைத்து நின்றார். பின்னர் இந்திரா காந்தி, இவரது மகன் முஜாஹிதீன், அவரது மனைவி பிரியதர்‌ஷினி, இந்திரா காந்தியின் தாயார் யசோதா ஆகியோரிடம் விசாரணை நடத்தி. வீடு முழுவதும்  சோதனை நடத்தப்பட்டு  காலை 10 மணிக்கு முடிவடைந்தது. சோதனையில்  வீட்டில் இருந்த 3 செல்போன்கள், ஒரு லேப்டாப் மற்றும் சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். சோதனை மற்றும் விசாரணை அனைத்தும் கேமராவில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.
இதேபோல் காட்டுமன்னார்கோவில் அடுத்த கொள்ளுமேடு கிராமம் புதுத்தெருவில் காஜாமொய்தீனின் மூன்றாவது மனைவி பத்தா உன்னிசாவின் வீடு உள்ளது. இங்கும் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தேசிய புலனாய்வு முகமை துணை போலீஸ் சூப்பிரண்டு சாகுல் ஹமீத் தலைமையில் டெல்லி சப்-இன்ஸ்பெக்டர் சுனில், சென்னையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் பத்தா உன்னிசாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
காலை 11 மணிக்கு விசாரணை முடிந்து வந்த அதிகாரிகள், அவரது வீட்டில் இருந்த செல்போன், வங்கி கணக்கு புத்தகங்கள், காஜா மொய்தீன் தமிழில் எழுதிய கவிதைகள், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா பாலவாய் கிராமத்தில் காஜாமொய்தீன் பெயரில் உள்ள நிலத்துக்கான பத்திரம் ஆகியவற்றை கைப்பற்றினர். பத்தாஉன்னிசாவுக்கு அப்துல்லா. 8வயது ஒசாமா.6வயது  என்ற இரு மகன்கள் உள்ளனர்.
காஜா மொய்தீனின் கார் டிரைவர் ஜாபர் அலி.  சொந்த ஊர் நெல்லிக்குப்பம் அருகே மேல்பட்டம்பாக்கம் ஆகும். காஜாமொய்தீனுடன் இவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை இன்ஸ்பெக்டர் பிரான்கோ தலைமையில்  நான்கு பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
காலை 6 மணியளவில் தொடங்கிய சோதனை 9.30 மணி வரை நடந்தது. அப்போது வீட்டில் இருந்த ஜாபர் அலியின் தாயார், தம்பி மற்றும் தங்கை ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சோதனை முடிவில் அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதேபோல் பரங்கிப்பேட்டை மதினா நகரில் காஜாமொய்தீனின் கூட்டாளி அப்துல்சமதின் வீடு அமைந்துள்ளது. இங்கு தற்போது அவரது தாய் அபினுனி‌ஷா, தம்பி பகது ஆகியோர் வசித்து வருகின்றனர். இவரது வீட்டுக்கு தேசிய புலனாய்வு முகமை இன்ஸ்பெக்டர் அம்னேஸ்வரி தலைமையிலான குழுவினர் நேற்று காலை ஆறு மணிக்கு சோதனை நடத்தினார். பின்னர் அவர்கள், அப்துல்சமதின் தாயார், தம்பியிடம் விசாரணை நடத்தியதோடு, அங்கிருந்து சில ஆவணங்களை கைப்பற்றினர். கடலூர் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் நான்கு  இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திய சம்பவம்  வில்சன் இறப்புக்கு நீதி கிடைக்க நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...