முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆன்லைன் ரம்மி கொரானாவைவிடக் கொடுமையானது அரசு தடுக்க வேண்டும்

கொரானாவை விட கொடூரமானது, சூதாட்டம்,மது எப்படி ஒரு மனிதனை உடல் ரீதியில் அழிக்குமோ அதைவிட அவனை பொருளாதாரம் உள்ளிட்ட பல வகையில் வீழ்த்தும் ஆயுதம் சூது மஹாபாரதத்தில் பாண்டவர்கள் நிலை தான். அண்மையில் தொலைபேசியை எடுத்தால் நாம் கேட்காமல் நமக்கு தானே வந்து தொல்லை தரும் விளம்பரம் யாரும் தெரியாமல் கைவைத்து விட்டால் அது தானே வந்து ஒட்டிக்கொண்டு திரும்பச் செல்ல மறுக்கும் படி அதை வடிவமைத்து புகுத்தப்பட்ட ஒரு புதிய வைரஸ் தான் இந்த  ஆன்லைன் ரம்மி
ஊரடங்கு முடியும் பொழுது பலரின் வங்கி கணக்கில் உள்ள பணத்தைக் ஆன்லைன் ரம்மி எனும் அனகொண்டா கொண்டு  போய்விடும் அபாயம்.
பொதுமக்களை ஆண்டியாக்கிப் போண்டி ஆக்கும் விபரீதமது இந்திய மக்களின் வாழ்வை கடுமையாக பாதிக்கும்
இந்தியாவின் சட்டப்படி பணம் வைத்து சீட்டு விளையாடுவது தண்டனைகுரிய குற்றமாகும்.
மேல்தட்டு மக்களின் கிளப்புகள்,பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் பணம் வைத்து விளையாடுவது கூட சில நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் அனுமதி வழங்கும் நம் நாட்டில் சிறு பிள்ளைகளும் வைத்துள்ள தொலைபேசி செயலியில் இதை புகுத்தி பணம் பறிக்கும் வஞ்சகம் தடுக்கப்பட வேண்டும்.அப்படி இல்லை என்றால் விரும்பாமல் தானாகவே வந்து முன் நிற்கும் செயல்களாவது தடுக்கப்பட வேண்டும். 
இப்போது சமூக வலைத்தளங்களில் எங்கு நோக்கினும் ஆன்லைன் ரம்மி விளையாட அழைக்கும் விளம்பரங்கள்
இவ்விளம்பரங்களை சமூக வலைத்தளங்களில் இடுவது வர்த்தகம் ஏன்றாலும் அது தானாகவே வருவது  கொடுமையிலும் கொடுமை
ஆன்லைனில் எப்படி பணம் பறிபோகிறது
பார்க்கலாம்.
ஆன்லைனில் விளையாட உங்கள் வங்கி கணக்கிலிருந்து தான் நெட்பேங்கின் மூலம் தான் பணம் செலுத்த வேண்டும்
நீங்கள் உடனே  ரம்மி விளையாடுங்கள் உங்களுக்கு உடனடி போன்ஸ் 50 ரூபாய்  என்று துண்டில் இடுவதும்.
தெரியாமல் யாரேனும் 
விளையாட ஆரம்பித்தவுடன் உங்களுக்கு 50 ரூபாய் போனஸ் கிடைத்துள்ளது என்று ஒரு மெஜெஜ் அனுப்பி உங்களுக்கு வலைவிரித்ததும் 
வங்கிகஹ கணக்கு விபரத்தை அனுப்புவதும்.
அப்போதே உங்கள் கணக்கில் உள்ள பணம் எவ்வளவு என்பதை ஒரு "சிறப்பு சாப்ட்வேர்" மூலமாக ஆன்லைன் ரம்மி நடத்தும் நிறுவனம் அறிந்து கொள்ளும் தந்திரமும் இதில் உண்டு.
உங்கள் அக்கவுண்டில் சுமார் ஒரு இலட்சம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் விளையாட ஆரம்பித்தவுடன் 1000,5000..10,000 ரூபாய் என உங்களுக்கு கிடைக்கும்படி செய்வார்கள்.
நீங்கள் ரம்மி விளையாட்டில் பெரிய 'கில்லி' அல்லது அறிவு சார் சாணக்கியன்  என நினைத்துக் கொண்டு தொடர்ந்து விளையாடுவீர்கள்.
அப்போதுதான் ஆபத்து ஆரம்பிக்கும். நீங்கள் எவ்வளவு திறமையாக விளையாடினாலும்..தோற்றுக் கொண்டே இருப்பீர்கள். வங்கி கணக்கில் உள்ள பணம் முழுவதும் போய்விடும்.
இதுதான் இன்றைய நிலைமை
ஆன்லைன் ரம்மியின் ஆபத்து குறித்தும்.அது இந்தியாவில் சட்ட விரோதம் என அதை தடை செய்ய வேண்டும் எனவும் பலரும்  பலமுறை பதிவுகள் வந்த போதும்
பா ம க நிறுவனர் மருத்துவர்  ராமதாஸ் மட்டும் ஆன்லைன் ரம்மியால் விளையும் ஆபத்து குறித்துக் கூறி.அதனைத் தடை செய்ய வேண்டும் என அறிக்கை கொடுத்தார்.
அச்சு ஊடகங்களும். காட்சி ஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை.
மத்திய..மாநில அரசுகளும் ஆன்லைன் ரம்மியால் விளையப் போகும் ஏதிர்கால  ஆபத்துகஹ குறித்து உணரவில்லை என்றே தோன்றுகிறது.
தற்போது ஊரடங்குச் சட்டம்  அமலில் உள்ள நேரத்தில் பொதுமக்கள்  பலரும் வீட்டிலிருப்பதால் விபரம் தெரியாமல்  இந்த ஆன்லைன் ரம்மி என்ற விபரீதக் கும்மியை அடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஊரடங்கு முடியும் பொழுது பொதுமக்கள் ஆன்லைன் ரம்மியால் நிச்சயம்  போன்டி யாகிவிடுவார்கள்.
எனவே,சமூக அக்கறையோடு.. ஆன்லைன் ரம்மி எனும் தொலைபேசிச் சூதாட்டத்தைத் தடை செய்யக்கோரியும் அதன் ஆபத்து குறித்து அச்சு ஊடகங்களும்.. காட்சி ஊடகங்களும் செய்தி வெளியிட வேண்டும்.என அண்ணன் மூத்த பத்திரிக்கையாளர் திரு இராஜன் அவர்கள் கருத்து  என்பதால்.
அரசியல் காட்சிகள்,அமைப்புகள்,இயக்கங்கள் ஆன்லைன் ரம்மியை தடை செய்யக்கோரி மத்திய மாநில அரசுகளை வழியுறுத்த வேண்டும்.
மத்திய அரசு உடனடியாக ஆன்லைன் ரம்மியை  இந்தியாவில் தடை செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
கொரோனாவை விடக் கொடியது ஆன்லைன் ரம்மி அது இந்தியாவில்.. தமிழகத்தில் பல வீடுகளுக்குள் நுழைந்து விட்டது.
நம் சமூகச் சீரழிவுகளின் துவக்கம் .


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த