முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசு விழாவில் சபைநாகரீகமின்றி ஜாதிப் பழமொழி பேசிய சர்ச்சை அமைச்சர்





மதுரை விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசிய ஜாதிய வார்த்தை  சர்ச்சையாகி எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு யாதவர் இளைஞர் அமைப்பினர், யாதவர் ஒருங்கிணைப்பு குழுவினர், தமிழ்நாடு யாதவ மகாசபை உள்ளிட்ட அமைப்பின் 38 பேர் நேற்று மாலை அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து செல்லூர் காவல்துறையினர்  அவர்களைக் கைது செய்ததையடுத்து போராட்டங்களில் ஈடுபட வந்த 20 க்கும் மேற்பட்டவர்கள் கைதாகினர்

அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிரான போராட்டம் குறித்து வழக்றிஞர் ரகுநாத் பேசும் போது, ‘‘மதுரை செல்லூரில் வீரன் அழகு முத்துகோன் சிலை வைத்திட இடம்  மாநகராட்சி அனுமதி கேட்டிருந்தோம். சிலையால் போக்குவரத்து நெரிசல் என்றுகூறி அதே இடத்தில் கபடி வீரர்கள் சிலை வைக்க அமைச்சர் முனைப்பாகச் செயல்பட்டார்.  இப்போது அவதூறாக பேசி மன்னிப்புக் கேட்கிறார். இது கண்டிக்கத்தக்கது'' என்றார்

தூத்துக்குடி அகில இந்திய யாதவ பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் கேப்டன் ராஜன் : தமிழகத்தில் 1 கோடியே 20 லட்சம் யாதவர்கள் உள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை அந்தந்த தொகுதிகளிலுள்ள யாதவர்களின் வாக்கு வங்கி தான் தீர்மானிக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, யாதவ சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார். அவரின் இந்த செயல் கண்டனத்திற்குரியது. அவர் மீது தமிழக முதல்வர், துணை முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இல்லையெனில் அகில இந்திய யாதவ பாதுகாப்பு பேரவை மற்றும் யாதவ கூட்டமைப்பு சார்பில் டிசம்பர் 21ஆம் தேதி மதுரையில் போராட்டம் நடந்த உள்ளதாகத் தகவல் உண்டு.

சங்கரன்கோவில் தேரடித் திடலில் நேற்று யாதவர் சமுதாயத்தினர் திரண்டு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அதில் சிலர், அமைச்சர் செல்லூர் ராஜூவின் படத்தைத் திடீரென எரித்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கரன்கோவில் நகர் காவல்துறையினர் அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.மதுரை பரவை பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவிற்கு வந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் பிறந்த வாழ்த்து பெறச் சென்ற சிறுவன் சிறுவருக்குப் பொன்னாடை போர்த்திப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் செல்லூர் ராஜுவின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.பரவை பகுதியில் ரூ. 15 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் திறந்து வைக்கப்பட்டது. அதேபோல் பரவையில் அம்மா மினி கிளினிக் திட்டத்தையும் அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சருடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோ நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.

அப்போது அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் தனக்குப் பிறந்தநாள் என்றும், அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் சாக்லேட் கொடுத்து வாழ்த்து பெற வேண்டும் எனக் கூறி சிறுவர் ஒருவர் அங்கு வந்துள்ளார்.இதைக் கேள்விப் பட்ட அமைச்சர் செல்லூர் ராஜு, அந்த சிறுவரை வரவழைத்து தனது வாகனத்தில் வைத்திருந்த ஒரு பொன்னாடையை அச்சிறுவனுக்குப் போர்த்திப் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்து, நினைவுப் பரிசையும் வழங்கினார்.

இந்த பிறந்தநாள் வாழ்த்துகளைச் சற்றும் எதிர்பாராத சிறுவனும் அப்பகுதி மக்களும் அமைச்சரின் செயலை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். சிறுவருக்குப் பொன்னாடை போர்த்தி மரியாதை கொடுத்துச் சென்ற அமைச்சர் செல்லூர் ராஜு பரவை பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.அமைசருக்கு சிறுவர்கள் அமைச்சரை விமர்சிக்கும் வைரல் காணொலி பார்த்தவர்கள் இது இவருக்குத் தேவையா என்ற வினாவும்  வரலாமலில்லை. மதுரையில் மத்தியத் தொகுதியில் கணிசமான அளவு யாதவர்கள் உள்ள தொகுதியாகும் இது சிலப்பதிகாரக்காலத்திலிருந்தே மக்கள் நிலை அதுவே மதுரை யாதவமக்களின் வரலாறு பெரிது.அதை உணராமல் பேசிய அமைச்சர் ஒரு ஜாதியின் வாக்



கு வங்கியை எதிர்தரப்புக்கு வாய் மூலம் மடைமாற்றிவிட்டாரே என வருத்தப்படும் கட்சியினர் உண்டு. முதல்வராக எம் ஜி ஆர் இருந்தபோது அமைச்சர்களாக மதியூகி  மந்திரிகளாக நெடுஞ்செழியன், வி.வி.சாமிநாதன், செ.மாதவன்,பன்ருட்டி ராமச்சந்திரன்,போன்ற அறிவார்ந்தவர்கள் வைத்து அரசியல் செயததால் வெற்றி தேடிவந்தது,அவர்கள் அரசியலில் பொது நாகரிகம் அறிந்த தலைவர்கள் அதுபோன்ற நிலை தற்போது இல்லை நமக்கு பரமார்த்த குரு கதை கேட்ட ஞாபகம் தான் வருகிறது என மக்கள் பேசிக்கொள்ளுவது நம் காதில் விழாமல் இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...