முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசு விழாவில் சபைநாகரீகமின்றி ஜாதிப் பழமொழி பேசிய சர்ச்சை அமைச்சர்





மதுரை விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசிய ஜாதிய வார்த்தை  சர்ச்சையாகி எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு யாதவர் இளைஞர் அமைப்பினர், யாதவர் ஒருங்கிணைப்பு குழுவினர், தமிழ்நாடு யாதவ மகாசபை உள்ளிட்ட அமைப்பின் 38 பேர் நேற்று மாலை அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து செல்லூர் காவல்துறையினர்  அவர்களைக் கைது செய்ததையடுத்து போராட்டங்களில் ஈடுபட வந்த 20 க்கும் மேற்பட்டவர்கள் கைதாகினர்

அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிரான போராட்டம் குறித்து வழக்றிஞர் ரகுநாத் பேசும் போது, ‘‘மதுரை செல்லூரில் வீரன் அழகு முத்துகோன் சிலை வைத்திட இடம்  மாநகராட்சி அனுமதி கேட்டிருந்தோம். சிலையால் போக்குவரத்து நெரிசல் என்றுகூறி அதே இடத்தில் கபடி வீரர்கள் சிலை வைக்க அமைச்சர் முனைப்பாகச் செயல்பட்டார்.  இப்போது அவதூறாக பேசி மன்னிப்புக் கேட்கிறார். இது கண்டிக்கத்தக்கது'' என்றார்

தூத்துக்குடி அகில இந்திய யாதவ பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் கேப்டன் ராஜன் : தமிழகத்தில் 1 கோடியே 20 லட்சம் யாதவர்கள் உள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை அந்தந்த தொகுதிகளிலுள்ள யாதவர்களின் வாக்கு வங்கி தான் தீர்மானிக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, யாதவ சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார். அவரின் இந்த செயல் கண்டனத்திற்குரியது. அவர் மீது தமிழக முதல்வர், துணை முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இல்லையெனில் அகில இந்திய யாதவ பாதுகாப்பு பேரவை மற்றும் யாதவ கூட்டமைப்பு சார்பில் டிசம்பர் 21ஆம் தேதி மதுரையில் போராட்டம் நடந்த உள்ளதாகத் தகவல் உண்டு.

சங்கரன்கோவில் தேரடித் திடலில் நேற்று யாதவர் சமுதாயத்தினர் திரண்டு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அதில் சிலர், அமைச்சர் செல்லூர் ராஜூவின் படத்தைத் திடீரென எரித்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கரன்கோவில் நகர் காவல்துறையினர் அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.மதுரை பரவை பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவிற்கு வந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் பிறந்த வாழ்த்து பெறச் சென்ற சிறுவன் சிறுவருக்குப் பொன்னாடை போர்த்திப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் செல்லூர் ராஜுவின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.பரவை பகுதியில் ரூ. 15 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் திறந்து வைக்கப்பட்டது. அதேபோல் பரவையில் அம்மா மினி கிளினிக் திட்டத்தையும் அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சருடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோ நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.

அப்போது அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் தனக்குப் பிறந்தநாள் என்றும், அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் சாக்லேட் கொடுத்து வாழ்த்து பெற வேண்டும் எனக் கூறி சிறுவர் ஒருவர் அங்கு வந்துள்ளார்.இதைக் கேள்விப் பட்ட அமைச்சர் செல்லூர் ராஜு, அந்த சிறுவரை வரவழைத்து தனது வாகனத்தில் வைத்திருந்த ஒரு பொன்னாடையை அச்சிறுவனுக்குப் போர்த்திப் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்து, நினைவுப் பரிசையும் வழங்கினார்.

இந்த பிறந்தநாள் வாழ்த்துகளைச் சற்றும் எதிர்பாராத சிறுவனும் அப்பகுதி மக்களும் அமைச்சரின் செயலை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். சிறுவருக்குப் பொன்னாடை போர்த்தி மரியாதை கொடுத்துச் சென்ற அமைச்சர் செல்லூர் ராஜு பரவை பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.அமைசருக்கு சிறுவர்கள் அமைச்சரை விமர்சிக்கும் வைரல் காணொலி பார்த்தவர்கள் இது இவருக்குத் தேவையா என்ற வினாவும்  வரலாமலில்லை. மதுரையில் மத்தியத் தொகுதியில் கணிசமான அளவு யாதவர்கள் உள்ள தொகுதியாகும் இது சிலப்பதிகாரக்காலத்திலிருந்தே மக்கள் நிலை அதுவே மதுரை யாதவமக்களின் வரலாறு பெரிது.அதை உணராமல் பேசிய அமைச்சர் ஒரு ஜாதியின் வாக்



கு வங்கியை எதிர்தரப்புக்கு வாய் மூலம் மடைமாற்றிவிட்டாரே என வருத்தப்படும் கட்சியினர் உண்டு. முதல்வராக எம் ஜி ஆர் இருந்தபோது அமைச்சர்களாக மதியூகி  மந்திரிகளாக நெடுஞ்செழியன், வி.வி.சாமிநாதன், செ.மாதவன்,பன்ருட்டி ராமச்சந்திரன்,போன்ற அறிவார்ந்தவர்கள் வைத்து அரசியல் செயததால் வெற்றி தேடிவந்தது,அவர்கள் அரசியலில் பொது நாகரிகம் அறிந்த தலைவர்கள் அதுபோன்ற நிலை தற்போது இல்லை நமக்கு பரமார்த்த குரு கதை கேட்ட ஞாபகம் தான் வருகிறது என மக்கள் பேசிக்கொள்ளுவது நம் காதில் விழாமல் இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த