முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆக்ரா மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியை பிரதமர் தொடங்கி வைத்தார்







பிரதமர் அலுவலகம்
ஆக்ரா மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியை பிரதமர் தொடங்கிவைத்தார்
நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த உலகளவில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன: பிரதமர்
ஸ்வதேஷ் தர்ஷன், பிரசாத் போன்ற திட்டங்கள் மூலம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன: பிரதமர்
கட்டுமான நிறுவனங்கள் மற்றும் வீடு வாங்குவோரின் நம்பிக்கை பாலத்திற்கு இடையே இருந்த இடைவெளியை நீக்குவதற்காக ஆர்இஆர்ஏ சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது: பிரதமர்
பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 12 லட்சத்திற்கும் அதிகமான நகர்ப்புற நடுத்தர குடும்பங்கள் வீடு வாங்குவதற்காக ரூ. 28,000 கோடி வழங்கப்பட்டுள்ளது: பிரதமர்
உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணியை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட இதர விருந்தினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, எனினும், அவற்றை செயல்படுத்துவதற்கான நிதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும், இது நாட்டின் உள்கட்டமைப்புத் துறை சந்தித்து வரும் பிரச்சினைகளுள் முக்கியமானது என்றும் கூறினார். புதிய திட்டங்களின் துவக்கத்திலேயே அவற்றுக்கான நிதியைத் தமது அரசு உறுதி செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 100 லட்சம் கோடிக்கும் அதிகமாக செலவு செய்யப்படும் என்று பிரதமர் கூறினார். பல்முனை இணைப்பு கட்டமைப்புக்கான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டு வருகின்றது. நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த உலக அளவில் முதலீடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
ஒவ்வொருவருக்கும் வருமானம் அளிக்கக்கூடிய வகையில் சுற்றுலாத்துறையில் வாய்ப்புகள் இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர்,  இ-விசா திட்டத்தின் கீழ், நாடுகளின் எண்ணிக்கையை அரசு அதிகரித்திருப்பதோடு, விடுதிகளுக்கான வரியையும் பெருமளவு குறைத்திருப்பதாகக் கூறினார். ஸ்வதேஷ் தர்ஷன், பிரசாத் போன்ற திட்டங்கள் மூலம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். அரசின் நடவடிக்கைகளினால், பயண மற்றும் சுற்றுலா போட்டித் திறன் குறியீட்டில் இந்தியா 34-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு, இந்தப் பட்டியலில் இந்தியா 65-வது இடத்தில் இருந்தது. கொரோனா தொற்று குறையும் பொழுது சுற்றுலாத் துறையின் மீதான ஆர்வமும் மீண்டும் திரும்பும் என்று தாம் நம்புவதாக பிரதமர் தெரிவித்தார்.
தனித்தனியாக அல்லாமல், சீர்திருத்தங்கள் முழுவதுமாக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். நீண்டகால பிரச்சினைகளுக்குத் தீர்வு, சுமூகமான வாழ்வு, அதிகப்பட்ச முதலீடுகள், நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஆகிய நான்கு கட்டங்களாக நகரங்களின் வளர்ச்சிக்கான பணிகள் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கட்டுமான நிறுவனங்கள் மற்றும் வீடுகளை வாங்குவோரின் நம்பிக்கை பாலத்திற்கு நடுவில் இடைவெளி இருந்ததாக பிரதமர் கூறினார். தவறான  நோக்கங்களுடன் செயல்பட்ட மக்கள், ரியல் எஸ்டேட் துறைக்கே களங்கம் ஏற்படுத்தி, நடுத்தர மக்களை துன்பத்தில் ஆழ்த்தியதாக அவர் கூறினார். இந்தப் பிரச்சினைகளை நீக்குவதற்காக ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு) சட்டம் (ஆர்இஆர்ஏ) அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, நடுத்தர குடும்பங்களின் வீடுகள் விரைவாகக் கட்டி முடிக்கப்பட்டதாக சில அண்மை அறிக்கைகள் தெரிவிக்கின்றன, என்றார் அவர். நகர வாழ்க்கையை எளிதாக்கும் நோக்கத்துடன் நவீன, பொது போக்குவரத்தில் இருந்து வீடுகள் வரை அனைத்து தரப்பு வளர்ச்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், ஆக்ராவில் தொடங்கப்பட்டதாகக் கூறிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தத் திட்டத்தின் கீழ் நகரத்தில் வாழும் ஏழை மக்களுக்காக ஒரு கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நகரத்தில் வாழும் நடுத்தர மக்களுக்காக, முதல்முறை அவர்கள் வீடு வாங்குவதற்குத் தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன. இதுவரை 12 லட்சத்திற்கும் அதிகமான நகர்ப்புற நடுத்தரக் குடும்பங்கள் வீடு வாங்குவதற்காக ரூ. 28,000 கோடி வழங்கப்பட்டுள்ளதாக ‌ அவர் கூறினார். புதுப்பித்தலுக்கான அடல் லட்சிய நோக்குத் (அம்ருத்) திட்டத்தின் கீழ் பல்வேறு நகரங்களில் தண்ணீர்,  கழிவு நீர் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதாகவும், நகரங்களில் உள்ள பொதுக் கழிவறைகளை மேம்படுத்துவதற்கும், கழிவு மேலாண்மையில் நவீன முறையைப் பயன்படுத்துவதற்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவிகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
2014-ஆம் ஆண்டு முதல், நாட்டில் 450 கி.மீ தூரத்துக்கும் அதிகமாக மெட்ரோ ரயில் பாதைகள்  செயல்பாட்டில் உள்ளதாகவும், அதற்கு முன்னர் வெறும் 225 கிலோ மீட்டர் மட்டுமே இருந்ததாகவும் பிரதமர் தெரிவித்தார். சுமார் 1000 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக அவர் கூறினார். இந்த பணிகள் 27 நகரங்களில் நடைபெற்று வருகின்றன.
தாஜ் மஹால், ஆக்ரா கோட்டை, சிகந்தரா ஆகிய சுற்றுலாத் தலங்களை, ரயில் நிலையங்களுடனும், பேருந்து நிலையங்களுடனும் இணைக்கும் வகையில் ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டம் இரு வழித்தடங்களில் 29.4 கி.மீ நீளத்துக்கு அமைக்கப்படுகிறது. இந்த மெட்ரோ ரயில் திட்டம், ஆக்ரா நகரின் 26 லட்சம் மக்களுக்கும், ஆண்டு தோறும் ஆக்ராவுக்கு வருகை தரும் 60 லட்சம் சுற்றுலாப் பயணிகளுக்கும் பயனளிக்கும்.  வரலாற்று சிறப்புமிக்க ஆக்ரா நகருக்கு, இந்த மெட்ரோ ரயில் திட்டம், சுற்றுச்சூழலுக்கு உகந்த விரைவுப் போக்குவரத்தை அளிக்கும். ரூ.8,379.62 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், 5 ஆண்டுகளில் நிறைவடையும்.
முன்னதாகக் கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி லக்னோ மெட்ரோ ரயில் சேவையை ‘சிசிஎஸ் விமான நிலையம் முதல் முன்ஷிபுலியா’ வரை, பிரதமர் தொடங்கி வைத்தபோது, ஆக்ரா ரயில் மெட்ரோ ரயில் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த