முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழக டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது பெண் ஐபிஎஸ் பாலியல் புகார் விசாரிக்க ஐஏஎஸ் 6 அதிகாரிகளின் குழு.



தமிழக டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி  பாலியல் புகார் விசாரிக்க ஐஏஎஸ் தலைமையில் 6 அதிகாரிகளின்  குழு.               





                                தமிழக ஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ்தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.     தமிழக முதல்வர் எடப்பாடி.கே. பழனிச்சாமி அரசியல் சுற்றுப்பயணம் மற்றும் அரசு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதற்காக தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் செல்கிறார்.   கடந்த ஞாயிறுகிழமை  திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை  மாவட்டங்களுக்குச் சென்று பல நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறை சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் முதல்வருடன் சென்றார். பணிகள் முடிந்து மீண்டும் சென்னை திரும்புவதற்காக கிளம்பிய போது அந்தந்த மாவட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள் அவரை வரவேற்று உபசரித்து அனுப்பிய நிலையில் மற்றொரு மாவட்டத்தின் வழியாக வந்த பொழுது அந்த மாவட்டத்தின் கண்காணிப்பாளராக இருக்கக் கூடிய பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸை வரவேற்று உபசரித்தார்.

அப்போது பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை காரில் ஏற்றிய சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ், பெண் ஐ.பி.எஸ் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில் பதற்றமடைந்த பெண் அதிகாரி உடன் காரை விட்டு இறங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.இந் நிலையில் தனக்கு பாலியல்  தொல்லை கொடுத்த சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி டி.ஜி.பி திரிபாதி மற்றும் உள்துறைச் செயலாளரிடம் புகார் அளித்தார். தமிழ்நாடு காவல்துறை  (சிறப்பு) டிஜிபி யாகப் பொறுப்பு வகித்த ராஜேஷ்தாஸ், தற்போது கட்டாய காத்திருப்புப் பட்டியலில் வைக்கப் பட்டிருக்கிறார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமியின் தேர்தல் பிரசாரப் பயணத்தின் பாதுகாப்புப் பணிக்குப் போன இடத்தில் கிடைத்த 'சிறிய' இடைவேளையில் இளைப்பாறுதல் போல நடந்திருக்கிறது இந்த சம்பவம். டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது பெண் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவர் கொடுத்த பாலியல் புகார் தான் இதற்குக் காரணமாகச்  சொல்லப்படுகிறது. சம்பவம் நடந்த இடமாக சி.எம்.மின்  கான்வாயைக் காட்டி உள்ளது, ''காவல்காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்றதோ....'' என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை காவல்துறை இயக்குநர்  என்ற கேடர் அல்லது பதவியில் பத்து பேருக்கு மேலிருந்தாலும் காவல்துறையில் தலைமை இயக்குநர், சட்டம் -ஒழுங்கு என்ற தகுதி தான் எப்போதுமே பெரிதானது. அந்தப் பதவிப் போட்டியில்  தகுதியான -பேனல் வரிசை மத்திய ஆயம், தெரிவு செய்து மாநில அரசு பார்வைக்கு வரும் பட்டியலில் தகுதியான அல்லது  வேண்டப்பட்ட ஒருவர் பெயரை, மாநில ஆட்சிப் பதவியில்  இருப்பவரக்கள் தேர்வு செய்து வைத்துக்  கொள்வார்கள்.  அந்தப் முன்னுரிமைப் பட்டியலில் சீனியர்- ஜூனியர் எல்லாமே கலந்து தான் இருப்பார்கள். கிளி ஜோதிடத்தில் வேண்டப்பட்ட சீட்டை தேடி எடுத்த பச்சக்கிளி கதை தான்.  காலம்சென்ற முன்னால்  முதல்வர்  மு.கருணாநிதி தலைமையிலான  ஆட்சியில் சீனியரான தற்போது மயிலாப்பூர் சட்டமன்றப்பேரவை  உறுப்பினர் நடராஜ்  ஓரங்கட்டப்பட்டு ஜூனியர் லத்திகாசரண் டிஜிபி ஆனார். "மத்திய ஆயம் சொன்ன பேனல்  முன்பு பெண் என்றால் அலங்காரம் என்பதை மாற்றி,

அதிகாரம் என்றதொரு அகராதியை ஏற்படுத்தியவர் காலம்சென்ற முன்னால்  முதல்வர் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் காவல்துறைத் தலைமை இயக்குநர் (டிஜிபி) என்ற போஸ்டிங்கை ஒருவருக்காக இரண்டு முறை நீட்டித்து மத்திய ஆயத்தை கேலிக் கூத்தாக்கினர். அதன்பின்னும் விடாமல் அந்த ஒருமனிதர் - தனிமனிதர் திரு ராமானுஜத்துக்கு காவல்துறை ஆலோசகர் என்ற போஸ்டிங் போட்டுக் கொடுத்து ஒரிஜினல் டிஜிபிக்கு அச்சத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தனர். அடுத்து வந்த கடந்த பத்தாண்டு காவல்துறை போஸ்டிங் வரலாறும் அத்தனை மதிப்பிற்குரியதாக இல்லாத வகையில் ஆக்கி விட்டனர். டி.கே. ராஜேந்திரன் என்ற  ஒரு அதிகாரி நலனுக்காக  காத்துருப்பிலிருந்த நான்கு சீனியர் ஐபிஎஸ்களை பின் தள்ளி , காவல் தலைமை இயக்குநர் பதவியிலேயே டி.கே. ஆரை பணி நீட்டிப்பு மூலம் தொடர்ந்து இருக்க வைத்து புதிய சாதனை படைத்தது அதிமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு. டிகேஆருக்கு இந்த டிஜிபி போஸ்டிங்கை போடும் போது அவருக்கே உயரதிகாரியாக இருந்த கே.பி.மகேந்திரன் என்ற சீனியர், பேனலில் இருந்தார். அதே காலகட்டத்தில் டிஜிபி (காவல் தலைமை இயக்குநர்) ஆகாமலே, சர்வீஸ் முடித்து கே.பி. மகேந்திரன், சேகர், முத்துக் கருப்பன் என்று எட்டு ஐபிஎஸ்கள் அடுத்தடுத்து ஓய்வு பெற்ற சுவடே தெரியாமல் வீட்டுக்குப் போனார்கள். டி.கே.ராஜேந்திரன் பணி நீட்டிப்பின் பின்னால்தான்,  உச்ச நீதிமன்றம் தலையிட்டு  சட்ட வரையறையை உண்டாக்கி தீர்ப்பு எழுதிய பின்னரே டிஜிபி பதவியின் போது பணி  நீட்டிப்பு இனி இல்லை என்ற நிலை ஏற்பட்டது. சரி, இப்போது இது தவிர்த்து இன்னொரு கேள்வியும் எழுகிறது. ஏற்கனவே காவல் துறை பணியிடத்தில் பாலியல் அத்து மீறல்கள் நடந்ததாக  புகார் கொடுத்து வழக்குப் பதிந்த விவகாரங்கள் இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்று      தெரியாத நிலையில் ராஜேஷ்தாஸ் விவகாரமும் கேள்விக்குறிதானே.?.எப்படியோ விசாகா கமிட்டி விசாரணையை தொடங்கி விரைவில்  முடித்துவிடுவார்கள். தற்போது சட்டம் அறிந்த மூத்த வல்லுநர்கள் கூறும் கருத்தாக ,. சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். கைது செய்தால் மட்டுமே  பெண் காவலர்களின் பாதுகாப்பு இருக்கும் என்பதாகும் சென்னை கிழக்கு மண்டல போக்குவரத்து காவல் துணை ஆணையராக பாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக இருந்த ஜெயக்குமார் பூந்தமல்லி தமிழ்நாடுசிறப்பு காவல் படை 13ஆவது பட்டாலியன் கமாண்டட் ஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் மீண்டும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பணி தொடர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக மணிவண்ணன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீண்டும் நெல்லை மாவட்ட எஸ்பியாக பணியாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.நெல்லைமாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்ட கிருஷ்ணராஜ் மீண்டும் மாதவரம் காவல்துறை துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில் பூந்தமல்லி தமிழ்நாடு சிறப்பு காவல் படை 13ஆவது பட்டாலியன் கமாண்டட் ஆக செந்தில் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்சென்னை கிழக்கு மண்டல போக்குவரத்து காவல் துணை ஆணையராக பாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.