முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரதமர் 25 ஆம் தேதி பயணம்


பிரதமர் அலுவலகம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரதமர் 25ம் தேதி பயணம்

கோயம்புத்தூரில் ரூ.12,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மற்றும் அடிக்கல் நாட்டுகிறார்.

புதுச்சேரியிலும் பல வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரதமர் திரு நரேந்திர மோடி 2021 பிப்ரவரி 25ம் தேதி பயணம் மேற்கொள்கிறார். புதுச்சேரியில் காலை 11.30 மணியளவில் பல வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். மாலை 4 மணியளவில், கோயம்புத்தூரில் ரூ.12,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.


தமிழகத்தில் பிரதமர்


நெய்வேலியில் புதிய அனுமின் திட்டத்தை நாட்டுக்கு பிரதமர் அர்ப்பணிக்கிறார். இது 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறனில் வடிவமைக்கப்பட்ட லிக்னைட் (பழுப்பு நிலக்கரி) அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையம். இதில் உள்ள 2 மின் உற்பத்தி நிலையங்களும் தலா 500 மெகா வாட் திறன் உள்ளது. ரூ.8000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மின் உற்பத்தி மையம் நெய்வேலி சுரங்கத்தில் உள்ள பழுப்பு நிலக்கரியை எரிபொருளாக பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும். இங்கு இத்திட்டத்துக்கு ஆயுள் முழுக்க தேவையான லிக்னைட் இருப்பு உள்ளது. 100 சதவீத சாம்பலை பயன்படுத்தும் விதத்தில் இந்த மின் உற்பத்தி மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா மற்றும் புதுச்சேரிக்கு பயனளிக்கும். இதன் 65 சதவீத பங்கு தமிழகத்திடம் உள்ளது.


திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 2670 ஏக்கர் பகுதியில் அமைக்கப்பட்ட என்எல்சிஐஎல் நிறுவனத்தின் 709 மெகா வாட் சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இத்திட்டம் ரூ.3000 கோடிக்கு மேற்பட்ட செலவில் அமைக்கப்பட்டுள்ளது.


கீழ் பவானி திட்டத்தை விரிவுபடுத்துதல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். பவானி சாகர் அணை மற்றும் கால்வாய் பணி 1955ம் ஆண்டு முடிக்கப்பட்டது. கீழ் பவானி அமைப்பில், கீழ் பவானி கால்வாய் திட்டத்தில், அரக்கன்கோட்டை மற்றும் தடாபள்ளி கால்வாய்கள் மற்றும் கலிங்கராயன் கால்வாய் உள்ளன. இது ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களுக்கு நீர்பாசன வசதி அளிக்கிறது. கீழ் பவானி திட்ட கால்வாய் விரிவாக்கம் மற்றும் புதுப்பிப்பு பணிகள் நபார்டு கட்டமைப்பு மேம்பாட்டு உதவி திட்டத்தின் கீழ் ரூ.934 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம், தற்போதுள்ள நீர்ப்பாசன அமைப்பை புணரமைத்து கால்வாய் திறனை மேம்படுத்துவதாகும். கால்வாய்கள் அமைப்பது தவிர, 824 மதகுகள், 176 வடிகால்கள் மற்றும் 32 பாலங்கள் பழுதுபார்க்கப்பட்டு புணரமைக்கப்படுகின்றன.


வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 8 வழி கோரம்பள்ளம் பாலம் மற்றும் ரயில்வே பாலத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இது இந்தியாவில் முக்கியமான துறைமுகம். தற்போது 76 சதவீதம் சரக்குகள் சாலை வழியாக கோரம்பள்ளம் பாலத்தை பயன்படுத்தி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்தப் பாலம் 1964ம் ஆண்டு 14 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் மீது தினந்தோறும் சராசரியாக 3000 கனரக வாகனங்கள் செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தாமதம் ஏற்படுகிறது. சரக்குகளின் தடையற்ற போக்குவரத்தை வழங்குவதற்கும், துறைமுக பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், 8 வழி கோரம்பள்ளம் பாலம் மற்றும் ரயில்வே பாலம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் பாலத்தின் இரு புறங்களும் அகலப்படுத்தப்பட்டுள்ளன. டிடிபிஎஸ் சுற்றிலிருந்து, சிட்டி லிங்க் சுற்று வரை சாலைகள் இரு புறத்திலும் ரூ.42 கோடி செலவில் அகலப்படுத்தப்பட்டு இரு வழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கு சாகர்மாலா திட்டம் மூலம் நிதி அளிக்கப்பட்டது.


வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் அமைக்கப்ட்டுள்ள 5 மெகா வாட் சூரிய மின் சக்தி தொகுப்புக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இத்திட்டம் ரூ.20 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இது ஆண்டுக்கு 80 லட்சம் யூனிட்டுக்கு மேல் மின் உற்பத்தி செய்யும். இது துறைமுகத்தின் 56 சதவீத மின் தேவையை நிறைவேற்றி, துறைமுக செயல்பாட்டில் கார்பன் மாசுவை குறைக்க உதவும்.


பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குடியிருப்புகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். திருப்பூர் வீரபாண்டியில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டிய 1280 குடியிருப்புகள், திருக்குமரன் நகரில் கட்டப்பட்ட 1248 குடியிருப்புகள், மதுரை ராஜாக்கூரில் பகுதியில் கட்டப்பட்ட 1088 குடியிருப்புகள், திருச்சி இருங்கலூரில் கட்டப்பட்ட 1088 குடியிருப்புகள் ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த குடியிருப்புகள் ரூ.330 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடியிருப்பும் நகர்ப்புற ஏழைகள், குடிசை வாசிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த வீடுகள் 400 சதுர அடியில், ஹால், சமயலறை, கழிவறை, குளியலறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகளில் தார்சாலை, தெரு விளக்கு, கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை, ரேசன் கடை, அங்கன்வாடி மையம், நூலகம் மற்றும் கடைகள் அமைக்கப்படுகின்றன.


கோவை, மதுரை, சேலம், தஞ்சை, வேலூர், திருச்சி, திருப்பூர், நெல்லை, மற்றும் தூத்துக்குடி உட்பட 9 ஸ்மார்ட் நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்களை அமைப்பதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த மையங்கள் ரூ.107 கோடி செலவில் அமைக்கப்படுகின்றன. இந்த மையங்கள் 24 மணி நேரமும், விரைவு சேவைகளுக்கான ஸ்மார்ட் தீர்வுகளை வழங்கும்.


புதுச்சேரியில் பிரதமர்


காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய விழுப்புரம் - நாகப்பட்டினம் வரையிலான 56 கி.மீ தூரம் 4 வழி தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இத்திட்டத்துக்கு ரூ.2,426 கோடி செலவிடப்படும். காரைக்கால் மாவட்டத்தில் ஜிப்மர் மருத்துவ கல்லூரி கட்டிடத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். இத்திட்டத்தின் மதிப்பீட்டு செலவு ரூ.491 கோடி.


சாகர்மாலா திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் சிறு துறைமுகம் உருவாக்குவதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். ரூ.44 கோடி செலவில் கட்டப்படும். இந்த துறைமுகம், சென்னையிலிருந்து புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு சரக்குகளை கொண்டு செல்லும் இணைப்பை வழங்கும்.


புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில், தடகள வீரர்களுக்கான சிந்தடிக் ஓடு தளத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். இது ரூ.7 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.


புதுச்சேரி ஜிப்மெர் ஜவஹர்லால் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ரத்த மையத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இது ஆராய்ச்சி கூடமாகவும், குறுகிய கால பயிற்சி மையமாகவம், ரத்த வங்கியாகவும் செயல்படும். இது ரூ.28 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரி லாஸ்பேட்டையில் 100 படுக்கைகள் கொண்ட மாணவிகள் விடுதியையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இது தடகள வீராங்கனைகளுக்காக ரூ.12 கோடி செலவில் இந்திய விளயைாட்டு ஆணையத்தால் கட்டப்பட்டுள்ளது. மீண்டும் கட்டப்பட்ட பாரம்பரிய மாரி கட்டிடத்தை அவர் தொடங்கி வைக்கிறார். புதுச்சேரி வரலாற்றின் அடையாளமாக இருந்த மாரி கட்டிடம், பிரெஞ்சுகாரர்களால் கட்டப்பட்டது. தற்போது அதே கட்டிடக் கலையில் ரூ.15 கோடி செலவில் அந்த கட்டிடம் மீண்டும் கட்டப்பட்டுள்ளது.  மேலும் பிரதமர் நிகழ்வில் 

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 33 வது பட்டமளிப்பு விழாவில், பிரதமர் பிப்ரவரி 26 ஆம் தேதி உரையாற்றுகிறார்

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழாவில், பிரதமர் திரு. நரேந்திர மோடி பிப்ரவரி 26ம் தேதி காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம், 17,591 பேருக்கு பட்டங்களும், பட்டயங்களும் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநரும் கலந்து கொள்கிறார்.

பல்கலைக்கழகம் பற்றி :

இந்த பல்கலைக்கழகத்துக்கு தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மருத்துவம், பல் மருத்துவம், மருந்தியல், நர்சிங், ஆயுஷ், பிசியோதெரபி, தொழில்சார் சிகிச்சை மற்றும் சுகாதார அறிவியல்  தொடர்புடைய  துறைகளை உள்ளடக்கிய மொத்தம் 686  நிறுவனங்கள் இந்த பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

41 மருத்துவ கல்லூரிகள், 19 பல் மருத்துவ கல்லூரிகள், 48 ஆயுஷ் கல்லூரிகள், 199 நர்சிங் கல்லூரிகள், 81 மருந்தியல்  கல்லூரிகள், முதுநிலை மருத்துவ படிப்பு நிறுவனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதார நிறுவனங்கள் என இவை தமிழகம் முழுவதும் பரந்து விரிந்துள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.