பிரதமர் அலுவலகம் தமிழக முன்னால் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று பிரதமர் அவரை நினைவு கூர்ந்துள்ளார்
செல்வி ஜெ ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்துள்ளார்.
“செல்வி ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்கிறேன். மக்கள் ஆதரவு கொள்கைகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரமளிக்கும் நடவடிக்கைகளுக்காக அவர் பெரிதும் பாராட்டப்பட்டார். நமது பெண்களுக்கு அதிகாரமளிக்கவும் அவர் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவருடனான எனது ஏராளமான கலந்துரையாடல்களை நான் எப்போதும் எண்ணி மகிழ்ச்சி அடைவேன்”, என்று பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்