லலிதா ஜூவல்லரியில் கணக்கில் வராத ரூ1,000 கோடி - வருமான வரித்துறை
தமிழகத்தில் லலிதா ஜூவல்லரிக்கு சொந்தமான இடங்களில் மார்ச் நான்காம் தேதி வருமானவரி சோதனை தலைமையிடமான சென்னை, மதுரை, கோயமுத்தூர் உள்பட 27 இடங்களில் நடத்தினர். வரி ஏய்ப்புப் புகார் காரணமாக 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இச் சோதனையில் ஈடுபட்டனர். மூன்று நாட்களாக நடந்த சோதனை நேற்று முடிவடைந்தது.
இதில் ரூ.1000 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல், ரூ.1.2 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது இவர்கள் டெபாசிட் செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.
தங்கம் இருப்பு தொடர்பாக பல முறைகேடுகளையும் லலிதா ஜுவல்லரி நகைக்கடை ஈடுபட்டிருப்பதும், கணக்கில் வராத சொத்துக்கள் வாங்கியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளதென வருவான வரித்துறை அதிகாரிகள் கூறினர். இதுமட்டுமில்லாமல் போலியான வங்கிக் கணக்கை தொடங்கி அதில் வருமானத்தை டெபாசிட் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
கருத்துகள்