முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரதமர்.நரேந்திர மோடி அரசின் 7 ஆண்டுகள் நிறைவு பாஜக அமைச்சர்கள் வாழ்த்துக்களும் காங்கிரஸ் விமர்சனமும்



பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

பிரதமர் திரு.நரேந்திர மோடி அரசின் 7 ஆண்டுகள் நிறைவு: ஜம்முவில் 7 பஞ்சாயத்துகளில் கொவிட் சேவா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங்

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 7 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீரில் 7 பஞ்சாயத்துகளில் நடந்த கொவிட் சேவா நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் இன்று தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோருக்கு ரேஷன் பொருட்கள், கிருமிநாசினிகள், முகக்கவசங்கள், மற்றும் இதர நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் முக்கிய தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜித்தேந்திர சிங், ‘‘அந்தியோதயா என்ற உண்மையான உணர்வுடன், கடைசி வரிசையில் உள்ள கடைசி மனிதருக்கும் பலன் கிடைக்க, பிரதமர் திரு நரேந்திர மோடி கடந்த 7 ஆண்டுகளில், மக்களுக்கு ஆதரவான பல வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகளை எடுத்தார்’’  என கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் பதவியேற்ற போது, அது அவநம்பிக்கையிலிருந்து, நம்பிக்கை நோக்கிய புதிய பயணத்தின் ஆரம்பமாக இருந்தது என்றும், அவரது தலைமை மற்றும் வழிகாட்டுதல் முன்னேற்றமான வளர்ச்சிக்கு வழிகாட்டியதாகவும் அவர் கூறினார்.

135 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் கொவிட்-19 போராட்டத்துக்கு குறுகிய நோக்கங்களை கடந்து, போர்க்கால அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.  நூற்றாண்டுக்கு ஒரு முறை ஏற்படும் நெருக்கடியை நாம் சந்திப்பதால், இது விமர்சனத்தில் ஈடுபடுவதற்கான தருணம் இல்லை என்றும், ஒருங்கிணைந்த தீர்மானத்துடன்  செயல்பட்டால்தான், கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் நாம் வெற்றி பெற முடியும் என அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.  

ஜம்முவில் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும் போது,  தனது தொகுதியில் உள்ள 6 மாவட்டங்களில் கொவிட் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், இங்கு ஆக்ஸிஜன் ஆலைகள், வென்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன் படுக்கைகள் கிடைக்கின்றன எனவும் டாக்டர் ஜித்தேந்திர சிங் தெரிவித்தார். 

உள்துறை அமைச்சகம்

மத்திய அரசின் 7 வது சாதனை ஆண்டுகள் நிறைவு: பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா வாழ்த்து

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு 7 சாதனை ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக வெளியிட்ட  சுட்டுரைகளில் திரு அமித்ஷா கூறுகையில், ‘‘ வளர்ச்சி, பாதுகாப்பு, பொதுமக்கள் நலன் மற்றும் முக்கிய சீர்திருத்தங்களின் ஈடுஇணையற்ற ஒருங்கிணைப்பின் தனித்துவமான உதாரணத்தை மோடி அரசு அளித்துள்ளது.’’ என கூறியுள்ளார்.

‘‘ இந்த 7 ஆண்டுகளில், திரு நரேந்திர மோடி, தனது உறுதியான, முழுமையான நலத்திட்ட கொள்கைளால், நாட்டின் நலன்தான் மிக முக்கியம் என ஒரு புறமும், மறுபுறம் ஏழைகள், விவசாயிகள் மற்றும் பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, தனது வலுவான தலைமையால் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்றியுள்ளார்.’’ என மத்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.  

‘ கடந்த 7 ஆண்டுகளாக,  பிரதமர் திரு நரேந்திர மோடியின் சேவை மற்றும் அர்ப்பணிப்பில் அசைக்க முடியாத நம்பிக்கையை நாட்டு மக்கள் தொடர்ந்து  வெளிப்படுத்தினர். அதற்காக, நாட்டு மக்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.  பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், நாம் அனைத்து சவால்களையும் வெல்வோம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சி பயணத்தை தடைகள் இன்றி தொடர்வோம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்’’ என திரு அமித்ஷா கூறியுள்ளார்.                          இந்த நிலையில் பிரதமர்  நரேந்திர மோடியின் 7 ஆண்டு கால ஆட்சியை கடுமையாக விமர்சித்து காங்கிரஸ். அறிக்கை வெளியிட்டது

7 குற்றச்சாட்டுகள் அடங்கிய சார்ஜ் சீட்.

1. மத்தியில் 2014ல் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் ஜிடிபி 8.1% ஆக இருந்தது. ஆனால் கொரோனாவிற்கு முன்பே ஜிடிபியை பாஜக அரசு 4.2% ஆக சரித்துவிட்டது. அதன்பன் 2020-2021 முதல் காலாண்டில் ஜிடிபி - 24.1% ஆனது. இரண்டாம் காலாண்டிடில் இது -7.5% ஆனது. 2020-2021ல் இது முழுமையாக -8 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2. இந்தியாவில் வேலைவாய்ப்புயின்மை மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. 45 வருடங்களில் இல்லாத மிக மோசமான சரிவை இந்தியா வேலைவாய்ப்பு துறையில் சந்தித்துள்ளது.

3. பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு லிட்டர் விற்கிறது, கடுகு எண்ணெய் 200 ரூபாய்க்கு லிட்டர் விற்கிறது. எல்பிஜி சிலிண்டர் விலை 809 ரூபாய்க்கு விர்ப்பிக்கிறது. விலைவாசி கடும் உயர்வை சந்தித்துள்ளது.

4. விவசாயிகளை பாஜக அரசு மசமாக் நடடத்துகிறது. தவறான சட்டங்கள் மூலம் அவர்களை வீதிக்கு கொண்டு வந்துள்ளது. விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்டு வேளாண் சட்டங்களை பாஜக திரும்ப பெற வேண்டும்.

5. ஏழை, எளிய மக்களுக்கு எதிரான அரசு இது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 27 கோடி மக்கள் இந்தியாவில் வறுமை கோட்டை தாண்டியதாக உலக வங்கி தெரிவித்தது. ஆனால் PEW Research Centre அறிக்கையின்படி இந்தியாவில் பாஜக ஆட்சியின் கீழ் 3.20 கோடி பேர் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர்.

6. இந்தியாவில் கொரோனாவை எதிர்கொள்வதில் மத்திய பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டது. கொரோனா மரணங்களை மத்திய அரசு மறைகிறது. வேக்சின் கொடுப்பதில் அரசு தோல்வி அடைந்துவிட்டது. இந்தியாவிலேயே வேக்சின் இல்லாத போது 6.63 கோடி வேக்சின்களை மத்திய அரசு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தது ஏன்?

7. மோடி அரசு தன்னை வலிமையான அரசு என்று காட்டிக்கொள்கிறது. ஆனால் சீனாவை அவர்களால் தட்டிக்கேட்க முடியவில்லை. லடாக்கில், அருணாசலப்பிரதேசத்தில் சீனா செய்யும் ஆக்கிரமிப்பை பாஜக அரசால் தட்டிக்கேட்க முடியவில்லை என்று காங்கிரஸ் சார்பாக உருவாக்கப்பட்ட சார்ஜ் ஷீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...