முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊரடங்கில் அதிகம் பாதிப்புகள் அடித்தட்டுத் தினக்கூலிகளுக்கே பட்டினி ச் சாவுகள் வராமல் தடுக்க தலைவர்கள் கோரிக்கை










வாழும் மக்களில் மூன்று வகை அதில் தற்போது அதிகம் பாதிப்புகள் அடித்தட்டு தினக்கூலிகள் மற்றும் அன்றாடம் கூலி வேலைக்குச் சென்று மாலை வந்த பிறகு உணவு சமைத்து உண்ணும் அடித்தள மக்களின் நிலை தான் தற்போது மிகவும் பாதிப்பு . உழைக்கும் வர்க்கம் ஒரு வாரம் முழுவதும் வேலை செய்து சனிக்கிழமை ஊதியம் வாங்கி சனியோ, ஞாயிறன்று தான் அடுத்த வாரத்திற்குத் தேவையான பொருள்களை அவர்கள் வாங்க இயலும்.

சரி, மற்ற அடுத்த வர்க்கமும் சற்று இரண்டு வாரமோ, தேவைக்கு நித்தமும் வாங்கும். அரிசி , பருப்பு ஒரு மாதம் வாங்கும் குடும்பம் மாத ஊதியம் வழங்கப்படும் முதல் வாரத்தில் வாங்கிய மளிகை அப்போது இந்த முழு ஊரடங்கை எதிர் நோக்கி முன் தீர்மானிக்கும் சக்தியும் இல்ல்லாமல் இருக்கிறதை வைத்து வாங்கி இருப்பார்கள்.

இப்போது தொடர்ந்து இழுத்து மூடி வைத்தால் எப்படி அவர்கள் உயிரோடு இருக்க வேண்டிய உணவுப் பொருள்களை வாங்குவது?

அரசு உயர் அலுவலர்கள், அரசியல்வாதிகள் போன்று எங்கிருந்தோ வரும்.

பொது மக்கள் எங்கு போவார்கள்? இது ஒரு நாடோடி பழைய  இரும்பு குப்பை நெகிழி (பிளாஸ்டிக்) சேகரிப்பு நபர்கள் கயலான் கடை அருகில் பேசிய வார்த்தைகள் இவை மனதை உருக்கும் சீக்கிரம் மூடிவிட்டார்கள். தள்ளுவண்டியில் பிளாஸ்டிக்,  இரும்பு பொருளுடன் ஒருவரும், பெரிய கோணிபை நிறைய பாட்டில்களுடன் ஒருவரும் அரைமணி நேரத்திற்கு மேல் காத்திருக்கிறார்கள். ஓனர் வருவதாக சொல்லியிருப்பதாகவும் இதில் கிடைக்கும் பணத்தில் ஏதாவது வாங்கிக்கொண்டு வீட்டிற்கு செல்லவேண்டும் என தெரிவித்தனர். அப்படித் தாமதமாகும் பட்சத்தில் அருகிலிருக்கும் மளிகை கடைக்காரர் குறிப்பிட்ட தொகைக்கு பொருள் வாங்கி செல்லுமாறும் பின்பு பணம் கொடுக்கலாம் என்று கூறியிருக்கிறார். 

எனினும் சிறிது நேரம் காத்திருக்கலாம் என காத்திருக்கின்றனர். இவர்களுக்காகவே கடையை மீண்டும் திறக்க வரும் ஓனர்,  கடைக்காரர்கள் என இவர்கள் இக்கொடுங்காலத்தில் உதவிக் கொள்வதில் அன்பு தளைக்கிறது. 

இவர்களை போல எத்தனை பேர் வாடுகிறார்களோ தெரியவில்லை. ஒரு யோசனையாக அரசு பள்ளி சத்துணவுக் கூடங்களை அவர்களுக்காக திறக்கலாம். அரசு பள்ளி அவர்கள் அனைவருக்கும் அணுக எளிதாக இருக்கும். நோய்த் தொற்றைத் தடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு எளியவர்களின் பசியாற்றுவதும்.முக்கியம் தானே இந்தச் சூழ்நிலையில்   மத்திய 

நிதி அமைச்சருக்கு கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் மதுரை வெங்கடேசன் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போன்றவர்கள் கோரிக்கைக் கடிதம்

அ‌ஞ்ச‌ல் அலுவலக சிறு சேமிப்புகள் - தண்டத் தொகை இரத்து - காலக் தவணை கெடு நீட்டிப்புக் கோரி

நிதியமைச்சருக்கு எழுதிய கடிதம் இது.

அன்றாட வாழ்க்கைக்கே அல்லாடும் சாமானிய மக்களின் சேமிப்புகள் இவை.

இ‌ந்த அ‌ஞ்ச‌ல் அலுவலக சிறு சேமிப்புகள் - Recurring Deposits (RD), Public Provident Fund (PPF), Suhanya Samriddhi Yojana (SSA) - தவணைகளுக்கு காலக் கெடு உண்டு. அதற்குள் கட்டத் தவறினால் தண்டத் தொகையுண்டு. காலாவதியாகி விடும். அதைப் புதுப்பிப்பதற்கு கட்டணம் உண்டு. இதில் சுகன்யா திட்டம் பெண் குழந்தைகளுக்கானது. 

கடந்த ஆண்டு நிதியமைச்சகம் இச் சேமிப்புகளின் தவணையைச் செலுத்துவதற்கு கால நீட்டிப்புத் தந்தது. தண்டத் தொகையை ரத்து செய்தது. புதுப்பித்தல் கட்டணங்களையும் தள்ளுபடி செய்தது. (பார்வைக்கு - எப். எண் 113-03/2017- SB / தேதி 31.03.2020- இந்திய அரசு, தகவல் தொடர்பு அமைச்சகம், அ‌ஞ்ச‌ல் துறை).

இந்த ஆண்டும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட தேசத்தின் பல பகுதிகள் கோவிட் பெரும் தொற்றின் இரண்டாம் அலை பரவலால் ஊரடங்கில் உள்ளன. ஆகவே கடந்த ஆண்டு எடுத்த அதே முடிவை எடுத்து சிறு சேமிப்புகளுக்கான தவணைக் கெடு நீட்டிப்பு, தண்டத் தொகை ரத்து, புதுப்பித்தல் கட்டணம் தள்ளுபடி ஆகியவற்றை உடன் அறிவிக்குமாறு அக் கடிதத்தில் கோரி  உள்ளனர்..

ஒன்றிய அரசு ஏழை நடுத்தர மக்களின் பாடுகளை உணர்ந்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் உண்டு.                வண்டியில் காய்கறி மளிகை. வாங்கக் காசு இல்லை. பட்டினியில் லட்சக் கணக்கான ஏழை மக்கள்..யார் இதை கேட்பது?. சிலருக்கு போன ஆட்சியின் பாசம், பலருக்கு இந்த ஆட்சி மேல் காதல் எங்களிடம் ரேஷன் கார்டு கூட இல்லை

கேட்கவே யாருமில்லை..அம்பலமேறாத ஏழை சொல்!                   ‌இனி பட்டினிச் சாவு தற்கொலைகள் தவிர்க்க முடியாத்தாகி விடும்.கொரோனாவுக்கு மூன்று அலை இருக்கலாம். ஏழைகளுக்கு இரண்டாவது பட்டினி மூன்றாவது பட்டினி என சோகத்தைத் தாங்க முடியாது. அரசு கருனை காட்டினால் தான் இவர்கள் வாழ்வு விடியும். செய்வார்களா?

.ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆன பிறகும் வங்கிக்கடன்களுக்கான மாதத் தவணையைச் (EMI) செலுத்துவதற்கான விதிவிலக்குகள் குறித்து ரிசர்வ் வங்கி இதுவரை அறிவிக்காதது குறித்து பல தலைப்புகளின் கண்டனத்திற்கு இது வரை தகுந்த பதிலில்லாத நிலை.

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் கருதி இதனைச்  செய்திட வேண்டிய மத்திய அரசும் காலம் தாழ்த்தி பார்ப்பது நியாயமா என்று வினா வருகிறது. இப்பிரச்னையில்   பிரதமரும், மத்திய நிதி அமைச்சரும் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று கோரிக்கை வலுப்பெறும் நிலை.

தமிழக முதலமைசரும் 'கடிதம் எழுதியதோடு கடமை முடிந்தது' என்று இல்லாமல் உரிய அழுத்தம் கொடுத்து ஊரடங்கு காலத்தில் வங்கிக்கடன்  மாதத்தவணைகளிலிருந்து மக்கள் விலக்குப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்கள் விரும்பும் நடவடிக்கையாகும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.