முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகத்தில் வாழும் பௌத்தர்கள் கொண்டாடும் புத்த பௌர்ணமி விழா குடியரசு தலைவர் பிரதமர் வாழ்த்து









புத்த பூர்ணிமா அல்லது வைசாகம் அல்லது விசாகம் தமிழகத்தின் வைகாசி விசாகம் இலங்கையில் Wesak மே மாத பௌர்ணமி (முழு நிலா நாளன்று உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை . பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறும். இக்காலப்பகுதியில் பந்தல்கள் தோரணங்கள் ஒளிக்கூடுகள் கட்டப்பட்டும் எங்கும் விழாக்கோலமாக இருக்கும்.

பௌத்த பிக்குகள் இந்தியாவில் உள்ள சிராவஸ்தி அருகே உள்ள ஜேடவனத் தோட்டத்தில் புத்த பூர்ணிமா விழா கொண்டாடுதல் இந்த நாள் மூன்று முக்கியத்துவங்களை கொண்ட நாளாக பௌத்தர்களால் கொண்டாடப்படுகின்றது.  சித்தார்த்த கௌதமர் லும்பினி (இன்றைய நேபாளம்) என்னுமிடத்தில் பிறந்து. புத்தகயா எனும் இடத்தில் தவம் புரிந்து புத்த நிலை அடைந்த நாள். புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நாள். தற்போது இடம்:குசிநகர் இம் மூன்று நிகழ்வுகளும் மே மாத பௌர்ணமி நாட்களிலேயே நிகழ்ந்ததாகக் பௌத்தர்கள் நம்புகின்றனர். கொண்டாட்ட முறைகளில் நாடுகளிற்கிடையே சில வேறுபாடுகள் இருக்கின்றது. இன்று புத்த பூர்ணிமா வைகாசி அனுஷம் 

அறிஞர்கள் மற்றும் தமிழ் ஆன்றோர்கள் பலரால் திருவள்ளுவர் பிறந்த தினமாக முன்பு கொண்டாடப்பட்டது.அது பின் காலத்தில் மாற்றப்பட்டது. இந்தியாவில் தோன்றிய புத்தம் மௌரிய மற்றும் குப்த அரசுகள் மூலம் சென்று பரவல் காரணமாக சீனா, ஜப்பான், இலங்கை, தாயாலாந்து, மலேஷியா, மியன்மார் உள்ளிட்ட ஆறு ஏழாம் நூற்றாண்டில் அயல் நாடுகளில் வசிக்கும் பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொண்டு பின்பற்றுகின்றனர். குடியரசுத் தலைவர் செயலகம்  புத்த பூர்ணிமாவை முன்னிட்டு குடியரசு தலைவரின் வாழ்த்து செய்தி

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு குடியரசு தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

“புத்த பூர்ணிமா புனித நாளை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள பகவான் புத்தரின் பக்தர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

துன்பத்தில் இருந்து சுதந்திரத்தை நோக்கி புத்தரின் போதனைகள் நம்மை அழைத்து செல்கின்றன. வன்முறை மற்றும் அதர்மத்தில் இருந்து விலகி நிற்குமாறு புத்தர் செய்த போதனை, நல்ல மனிதர்களாக விளங்க நமக்கு நூற்றாண்டுகளாக ஊக்கமளித்து வருகிறது.

புத்தரின் வாழ்க்கையில் இரண்டற கலந்துள்ள அகிம்சை, அமைதி, கருணை மற்றும் மனிதகுலத்திற்கான சேவை, மற்றும் என்றென்றும் நிலைத்து நிற்கும் அவரது போதனைகள் உலகெங்கிலும் உள்ள மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கு சிறப்பான ஊக்கமளித்துள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்று எனும் இதுவரை கண்டிறாத நெருக்கடியை நாம் தற்போது எதிர்கொண்டு வருகிறோம். இந்த புத்த பூர்ணிமா நன்னாளில், நமது உறுதி மற்றும் ஒற்றுமையின் மூலம், பெருந்தொற்றில் இருந்து வெற்றிகரமாக நாம் மீண்டு வந்து, மக்களின் நன்மையை நோக்கி தொடர்ந்து முன்னேற வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்.”

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவல்.

புத்த பூர்ணிமா நாளில் காணொலி காட்சி மூலம் நடைபெரும் உலகளாவிய பிறந்ததின கொண்டாட்டத்தில் பிரதமர் முக்கிய உரை நிகழ்த்துகிறார்

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு 2021 மே 26ம் தேதி காலை 9.45 மணியளவில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் உலகளாவிய பிறந்த தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி முக்கிய உரை நிகழ்த்துகிறார்.

இந்நிகழ்ச்சியை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம், சர்வதேச புத்த கூட்டமைப்புடன்(ஐபிசி) இணைந்து நடத்துகிறது. இதில் உலகில் உள்ள அனைத்து புத்த மடாலயங்களின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.  உலகம் முழுவதும் இருந்து 50-க்கும் மேற்பட்ட புத்த மத தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...