முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிராமங்களில் கொரோனா சிகிச்சை குறித்த விழிப்புணர்வும், அதற்கான வசதிகளும் தேவை







தமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வரத் துவங்கியுள்ளது
















கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரிக்கும் நிலையில், கொரோனா பாதிப்பு என்பது கண்டுபிடிக்கப்படாமலேயே கிராமப்புறங்களில் பலர் உயிரிழந்து கொண்டிருக்கும் துயரமும் நடக்கிறது. கிராமங்களில் கொரோனா சிகிச்சை குறித்த விழிப்புணர்வும், அதற்கான வசதிகளும் இல்லாததே  காரணம்.

தமிழ்நாட்டில் நேற்று  தொற்றுகளின் எண்ணிக்கை 35,873 ஆகும். இது அதற்கு முந்தைய நாள் எண்ணிக்கையை விட 311 குறைவு ,சென்னையில் கொரோனா தொற்று 454 குறைந்து 5,559 ஆனது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர், கடலூர், நெல்லை உள்ளிட்ட  15 மாவட்டங்களிலும் பரவல் குறைந்த நிலையில் கிராமப்புறங்களில் வாழும் மக்களில் பெரும்பான்மையினருக்கு கொரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லை. ஒருவேளை கொரோனா தொற்று உறுதி செய்யப்பாட்டாலும் கூட அவர்களுக்கு உள்ளூரில் மருத்துவ வசதிகள் கிடைக்காததும், வெளியூர்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவம் பெறுவதற்கான வாய்ப்பு, வசதிகளும் இல்லாததும் தான் இத்தகைய உயிரிழப்புகளுக்கு காரணம் . மற்றொருபுறம், ஒரு கட்டத்தில் நகரப்புறங்களில் அதிக அளவில் பரவி வந்த கொரோனா வைரஸ் இப்போது கிராமப்புறங்களில் அதிக எண்ணிக்கையில் பரவத் தொடங்கியுள்ளது. 

கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், அங்கும் மருத்துவ வசதியை ஏற்படுத்த வேண்டும். கிராமப்புற மக்களைக் காப்பாற்ற ஒரே வழி கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை கொரோனா  சிகிச்சை மையங்களாக மாற்றுவது தான். தமிழ்நாட்டில் 1806 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. தவிர 422 மேம்படுத்தப்பட்ட  ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 20 படுக்கைகளும், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 50 படுக்கைகளும் கொண்ட முதல் நிலை கொரோனா சிகிச்சை மையங்களை தொடங்குவதன் மூலம் 57,120 படுக்கைகளை ஏற்படுத்தி மருத்துவம் வழங்க முடியும்.

தேவைப்பட்டால் கிராமப்பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களை தற்காலிக மருத்துவ மையங்களாக மாற்றி மருத்துவச் சிகிச்சையளிக்கலாம். ஒவ்வொரு கிராமத்திலும் கொரோனா பாதிப்புகள் குறித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் அறிக்கை பெற்று அதனடிப்படையில் அங்கு சோதனையும் சிகிச்சையும் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

 கொரோனா பரவல் இன்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி 2 லட்சத்து 84,278 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர். இவர்களில் பாதிப் பேருக்கு கூட அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் அளிக்க வாய்ப்புகள் குறைவு.பாதிக்கும் மேற்பட்டோர் வீட்டுத் தனிமையில் தான் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆரோக்கியமாக உள்ள பலர் வீடுகளில் தனிமையில் இல்லாமல் வெளியில் சுற்றிக் கொண்டு நோய் பரப்பி வருகின்றனர். போதிய உடல் வலிமையும்,  ஊட்டச்சத்து நிறைந்த உணவுக்கு வழியில்லாதவர்களும் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.

இவர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் வைத்து சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்கள் தேவையின்றி வெளியில் சுற்றி நோயைப் பரப்புவதையும், மருத்துவக் கண்காணிப்பும், சத்தான உணவும் கிடைக்காமல்  உயிரிழப்பதையும் தடுக்க முடியும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைக்கப்படும் முதல் நிலை கொரோனா சிகிச்சை மையங்களில் லேசான பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டும் மருத்துவம் வழங்கலாம். அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டால் அடுத்தநிலை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கலாம். ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவர்களின் உடல்நிலையை கண்காணிப்பது, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்குவது ஆகியவற்றை மட்டும் செய்யலாம். இதற்கு ஏற்கனவே அங்கு இருக்கும் மருத்துவ பணியாளர்களுடன் கூடுதலாக சிலரை மட்டும் நியமித்தால் போதுமானது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா சிகிச்சை  அளிப்பதன் மூலம் வட்ட மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளுக்கு அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் படையெடுத்து அங்குள்ளவர்களுக்கு தேவையற்ற அழுத்தம் தருவதை தவிர்க்க முடியும்.

எனவே, கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை முதல் நிலை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் கிராமப்புறங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள கொரோனா தொற்றுகளைக் கட்டுப்படுத்தி, உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என்று தற்போது கோரிக்கை வலுப்பெறும் சூழ்நிலையில் . தற்போது அரசும் பல நல்ல நடவடிக்கை எடுத்து வருகிறது.கொரோனா  தொற்றுக்கான ஒரே தீர்வு தடுப்பூசி மட்டுமே. ஊரடங்கை காரணம் காட்டி தடுப்பூசி செலுத்துவதை தள்ளி போடுவது கூடாது என்பதும் தடுப்பூசி செலுத்த ஊரடங்கு எந்த விதத்திலும் தடையாக இருக்கக் கூடாது. ஊரடங்கில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வியாபாரம் செய்வதில் மனச்சாட்சி இல்லாத எல்லா கடையிலும் மக்கள் கூட்டம் பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பனை சேய்து முடித்து விட்டாங்க. பல அடித்தட்டு ஊழல் அலுவலர்கள் அதைத் தடுக்கவில்லை இந்த பாதிப்பு அரசு அதிகாரிகள் தடுத்திட முடியும் ஆனால் தடுக்கவில்லை இலஞ்சத்தில் மிதக்கும் திருந்தாத அரசு அலுவலர் தான் காரணம் வழக்கமாக வாரத்திற்கு ரூ.350-400 ரூபாய்க்கு காய்கறி வாங்கும் ஒரு சிறிய குடும்பம்.இன்றைக்கு ரூ.700-க்கு மேல ஆனது அதை தவிர்க்க முன்னால் பிரதமர் மொரார்ஜி தேசாய் நடத்திய நிர்வாகம் தேவை மேலும் விலை பட்டியல் இல்லாத கடைகள் மீது நடவடிக்கை எடுத்து தற்காலிக கடைகள் பெருகியதும்.அதை முறைப்படி நடத்த அனுமதிக்காத சில வட்டார நிர்வாகம் தான் காரணம். குறிப்பாக இன்று காய்கனிகள் விற்பனை

பீன்ஸ்  1 கிலோ - 290 ரூபாய்

கேரட்   1 கிலோ-  190 ரூபாய்

கத்தரிக்காய் 1 கிலோ - 100 ரூபாய் 

கொரோனா தான் உச்சமடைகிறதென்றால், ஒன்றரை நாள் தளர்வில் விலைவாசியும் உச்சியில் இருப்பதை நாம் மட்டுமல்ல தனியார்  தொலைக்காட்சியும் சொல்கிறது.

உச்சத்தில் காய்கறி விலை. அதற்கு விரைவில் முடிவு வரலாம். அரசின் சார்பில் சில அமைச்சர்கள் பம்பரமாகச் சுற்றி பணியாற்றினாலும், பரவல் நிலைமைகள். காரணமாக  சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் உயிர்வளி வசதியுடன் 130 படுக்கைகள் கொண்ட கோவிட்-19 சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்த முதல்வர்.

நாளை முதல் தொடங்கும் ஊரடங்கு நாட்களில் மக்களின் ஒத்துழைப்புடன் கொரோனா பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்திட அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறதாகத் தெரிவித்துள்ளார் சென்னை ராயப்பேட்டை வெஸ்லி மேல்நிலைப் பள்ளியில், உயிர்வளி வசதியுடன் 130 படுக்கைகள் கொண்ட கோவிட்-19 சிறப்புச் சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்து முதல்வர் ஆய்வு செய்தார்.

தமிழக அரசு கோவிட்-19 சிகிச்சைக்கான பணிகளைத் தொய்வின்றித் தொடர்கிறது. 

விழிப்புடன் இருந்து கொடிய கொரோனா பரவாமல் தடுப்போம் என முதல்வர் தெரிவித்தார். மதுரையில் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் என களத்தில் உதவும் நிலை நிதியமைச்சர் மகத்தான பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு கடந்த அரசு பல மாதங்களாக சம்பளம் வழங்காததை அறிந்து. செவிலியர்கள் சிலர் அவரிடம் வைத்த கோரிக்கைக்கு பின் நிறுத்தப்பட்ட சம்பளம் தற்போது வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் மற்ற கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்         சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு கோவிட்-19 தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்தார் முதல்வர். 

தடுப்பூசி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சிறப்பு முகாம்களும், முகாம்களுக்குச் செல்ல முடியாதவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் வீடுகளில் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் மாநிலத்தில் மருத்துவத்துறை தகவல் .தமிழத்தில் கொரோனா தொற்றின் முதல் அலையில் 91 மருத்துவர்களும்,  2 வது அலையில் 14 மருத்துவர்களும் மரணம் அடைந்துள்ளதாக ஐஎம்ஏ தகவல்       திருச்சியில் கூடுதலாக 400 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்து மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். எனவும் ஆட்சிக்கு வந்த நாளைவிடவும் தமிழகத்தில் கோவிட்-19 இல்லாத நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள் எனவும் முதல்வர் தகவல் கோவை கொடிசியா வளாகத்தில் கோவில்-19 சிறப்புச் சிகிச்சை மையத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 820 படுக்கை வசதிகளையும், குமரகுரு பொறியியல் கல்லூரி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 360 படுக்கை வசதிகளையும் முதல்வர் ஆய்வு செய்தார்.

பெருந்தொற்றை முறியடிக்க போர்க்கால நடவடிக்கை தொடர்கிறது எனத் தகவல். மதுரை தோப்பூரில் சிறப்பு வசதிகளுடன் 200 ஆக்ஸிஜன் படுக்கைகளோடு அமைக்கப்பட்டுள்ள கொரொனா சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். கூடுதலாக 300 படுக்கைகள் அமையவுள்ள இம்மையம் ஆக்சிஜன் படுக்கை தேவையை ஓரளவு நிறைவு செய்யும் என  நம்புகிறேன் எனத் தகவல். தோப்பூரில் கொரோனா சிகிச்சைக்கான 500 படுக்கைகள் கொண்ட  புதிய பகுதியை தமிழக முதல்வர் திறந்துவைத்ததைத் தொடர்ந்து பதிமூன்றாவது முறையாக ரூர்கேலாவில் இருந்து வரும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலை வாடிப்பட்டி ரயில் நிலையத்தில் அமைச்சர்கள் வரவேற்றதைத் தொடர்ந்து மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், பி. மூர்த்தி இருவர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் எதிர் வரும் நாட்களில் மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த செய்ய வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசித்ததுடன் குறிப்பாக ஊராட்சிகள் தோறும் கொரோனா தடுப்பு மையங்கள் அமைப்பது பற்றி ஆலோசித்ததாகத் தகவல்.

இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, பூமிநாதன், டி.வெங்கடேசன் மற்றும் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மருத்துவமனை முதல்வர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இச் சூழ்நிலையில்     பிரபலமான தனியார் ஆய்வகமான மெட் ஆல் -கொரோனா பரிசோதனை உரிமம் ரத்து செய்து

தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது

தமிழகத்தில் 4 ஆயிரம் பேருக்கு தவறாக கொரோனா இருப்பதாக பொய்யான தகவல்களைக் கூறியதாக புகார்

மே மாதம் 19, மற்றும் மே மாதம் 20 ஆம் தேதிகளில் ஐசிஎம்ஆரில் பதிவேற்றம் செய்ததாக தகவல்  இந்தக் கொடியவர்கள் மீது ஈவிரக்கமற்ற நடவடிக்கைகள் தேவை என்பதே அணைவரின் விருப்பமாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த