முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யூடியூப் சேனல் இணையவழி விளையாட்டில் பணம் குவித்த பப்ஜி மதன் மீது 159 புகார்கள்

யூடியூப் சேனல்  இணையவழி


விளையாட்டில்



ஆபாசமாகப் பேசிய விவகார அட்மின் (நிர்வாகி) மதனின் மனைவி கிருத்திகாவை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் 12 மணி நேர விசாரணைக்கு பின் கைது செய்தனர். தலைமறைவான 'பப்ஜி’ மதனைப் பிடிக்க தனிப்படை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் முகாமிட்டுள்ளதாக  தெரிவித்துள்ளனர். இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டான ‘பப்ஜி’யை, சேலத்தை சேர்ந்த மதன்(எ) பப்ஜி மதன் தனது யூடியூப் சேனல் மூலம் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதன் மூலம் 8 லட்சம் வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தியுள்ளார். அவருடன் ஆன்லைனில் விளையாடும் போது சிறுவர்கள் மற்றும் பெண்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசி தனது யூடியூப் சேனலில் பதிவு செய்ததனால் அதிர்ச்சியடைந்த  சிறுவர்கள் மற்றும் பெண்கள் சேலம், திருச்சிராப்பள்ளி, சென்னையென தமிழகம் முழுவதும் மதன் மீது புகார் அளிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் தரும் புகார்களைத் தொடர்ந்து காவல்துறையினர் மதனைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதற்கிடையே சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மைக்கேல்  அளித்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், சென்னை புளியாந்தோப்பு துணை ஆணையர் அலுவலகத்தில்  அளிக்கப்பட்ட புகார்களும் காவல்துறை ஆணையர் சங்கர் ஜுவால் உத்தரவுப்படி மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர்  விசாரணையைத் தொடங்கிய போது, மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் படி அந்தந்த மாவட்டக் காவல்துறையினர் மதனைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர் கைதிலிருந்து தப்பிக்க மதன் தலைமறைவாகிவிட, காவல்துறைக்கு சவால் விடும் மதனின் ஆடியோ ஒன்றும் வலைத்தளங்களில்வெளியானதைத்தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் மதனின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் பல முயற்சிகள் செய்தும். அவனைக் கைது செய்ய முடியவில்லை.

தொடர்ந்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரின் தனிப்படை சேலம் சென்று மதன் நடத்திய யூடியூப் சேனலின் அட்மினாக (நிர்வாகி) உள்ள அவரது மனைவி கிருத்திகாவை அவரது 8 மாத குழந்தையுடன் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்தனர். பின் காவல்துறை ஆணையர் அலுவலகத்திலுள்ள மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் மதனின் மனைவி கிருத்திகா மற்றும் சென்னை பெருங்களத்தூரில் வசிக்கும் அவரது தந்தை மாணிக்கத்தையும் அழைத்து விசாரணை நடத்தினர். 12 மணி நேரம் நடத்திய விசாரணையில், மதனின் மனைவி கிருத்திகாவுக்கு அவரது கணவரின் செயல்பாடுகள் அனைத்தும் தெரிந்துள்ளது. ஆனால் அதை அவர் தடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதேநேரம், மதன் நடத்தி வரும் யூடியூப் சேனலின் அட்மின் என்பதாலும், மதனின் குற்றத்துக்கு துணை நின்றதாலும் கிருத்திகாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 12 மணி நேரம் விசாரணை நடத்திய பிறகு கைது செய்தனர். அவரது தந்தை மாணிக்கத்திடம்  விசாரணை நடந்து வருகிறது. கிருத்திகா மற்றும் அவரது தந்தை அளித்த தகவலின் படி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தலைமறைவாக உள்ள மதனைப் பிடிக்க பெங்களூரு விரைந்து அங்கு முகாமிட்டுள்ள மதனைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று வரை மதன் மீது தமிழகம் முழுவதும் வந்த 159  புகார்களின் படி வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.யூ-டியூப்பில் ஆபாசமாக பேசி பப்ஜி மதன் மாதம் ரூபாய்.7 லட்சம் சம்பாதித்ததை காவல்துறை கண்டுபிடித்துள்ளது. பிப்ஜி மதனால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகாரளிக்க முன்வர வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.  மண்ணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி மற்றும் நிதி நிறுவனக் குடும்பத்தில் உள்ள சிறுவன் தரக்குறைவான கெட்ட சொற்களால் குறிப்பிடப்பட்ட பின்னர் தான் இப்படி ஒரு பப்சி் மதன் இருக்கிறார் அவருக்கு சென்னையில் 2 வீடு, 2 பிஎம்டபிள்யூ கார்கள் இருப்பது தெரிகிறது என்றால் இணையக் குற்றவியல் காவலர்கள் அவர்களது உயரதிகாரிகளின் கவனத்திற்கு இப்போது தான் வருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...