பாரதிய ஜனதா கட்சியின் விதியின் கீழ் ஒரு நபருக்கு ஒரு பொறுப்பு மட்டுமே வகிக்க முடியும். அமைச்சரான நபர் கட்சியில் பதவியை வகிக்க முடியாது. தகவல் ஒளிபரப்புத் துறை மத்திய இணை அமைச்சரான
தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகனின் பதவி வேறு ஒருவருக்கு கொடுக்கப்படும் கட்டாயம் இருந்த நிலையில் இருமுறை தொடர்ந்து பதவிக்கு வர விதிமுறைகள் தடை என்பதும் தமிழ்நாடு பாஜகவில் பல மூத்தவர்கள். எச். ராஜா, பொன். ராதாகிருஷ்னண், சிபி ராதாகிருஷ்னன், இல கணேசன் ஆகியோர் இருக்கிறார்கள். ஆனால் இவர்களில் தலைவர் பதவி கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்
தமிழ்நாடு பாஜக தலைவராக காவல்துறை பணி விலகிய அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.துணை தலைவரானவர் தற்போது
தலைவராகியுள்ளார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவரை பாஜக அரசியலுக்கு கொண்டு வந்தபோதே இவருக்கு பொறுப்புகள் வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் அரவக்குறிச்சி வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். தற்போது இவர் பாஜகவின் மாநில தலைவர்.
கருத்துகள்