பிரதமர் அலுவலகம் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “சுதந்திர தினத்தன்று உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
அனைவருக்கும் 75-ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துகள். விடுதலையின் அம்ருத் மஹோத்சவம், நாட்டு மக்களிடையே புதிய ஆற்றலையும், உணர்வு நிலையையும் புகுத்தட்டும். ஜெய்ஹிந்த்”, என்று கூறியுள்ளார். 75- ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் 75- ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம். நிறுவனத்தின் இயக்குநர் சிப்நாத் தேவ், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி டாக்டர் கோபிநாத்பிரதமர் அலுவலகம்உள்துறை அமைச்சகம்
75வது சுதந்திர தினத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா நாட்டு மக்களுக்கு வாழ்த்து
நாட்டின் 75வது சுதந்திர தினத்தில், நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட தொடர் சுட்டுரைகளில் கூறியிருப்பதாவது:
‘‘இந்த மாபெரும் நாளில், நாட்டை பாதுகாத்த நமது தைரியமிக்க வீரர்கள், சுதந்திர போராட்டத்துக்காக தங்களின் அனைத்தையும் வழங்கிய மிகச் சிறந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு தலை வணங்குகிறேன். உங்களின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு நாட்டுக்கு சேவை செய்ய எங்களை தொடர்ந்து ஊக்குவிக்கும்’’.
‘‘ஒரு புறம், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நாடு வளர்ச்சியின் புதிய உச்சத்தை தொடுகிறது மற்றொரு புறம் ஏழைகள் மற்றும் சமூகத்தில் பின்தங்கியவர்கள், பிரதான வாழ்கையின் ஒரு பகுதியாக மாறியதில் பெருமை படுகின்றனர். விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தை நாடு கொண்டாடும்போது, வாருங்கள், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா கனவை நனவாக்குவதில் இணைந்திருப்போம்’’.
செங்கோட்டையிலிருந்து பிரதமரின் பேச்சை குறிப்பிட்ட திரு அமித் ஷா கூறுகையில், ‘‘ புதிய இந்தியாவின் திறமை, வரலாற்று சீர்திருத்தங்கள் மற்றும் தீர்வுகளின் முன்னேற்றத்துடன், இந்தியாவை உலகின் முன்னணி நாடாக மாற்ற நமது மகத்தான திறன்களை பிரதமர் திரு நரேந்திர மோடி முன்வைத்துள்ளார். அவரது உரை, தற்சார்பு இந்தியாவின் உடைக்க முடியாத உறுதியின் அடையாளமாகும்"75 ஆவது சுதந்திர தின விழா புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியின் தலைமை மருத்துவர் பூவதி இரத்த வங்கி மருத்துவர் ஆகியோர் மரம் அறக்கட்டளையின் செயல்பாட்டைப் பாராட்டி அதன் நிர்வாக இயக்குனர் மரம் இராஜாவுக்கு
கேடயமும்,பாராட்டுச்சான்றிதழும் வழங்கி கெளரவித்தனர்.
சென்னையில் உள்ள, இந்திய உணவுக் கழக தென் மண்டல அலுவலகத்தில் சுதந்திரதின விழா
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள இந்திய உணவு கழகத்தின் தென் மண்டல அலுவலகத்தில், அதன் செயல் இயக்குநர் திரு ஆர்.டி நசீம் ஐஏஎஸ், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டுக்கும், இந்திய உணவுக் கழகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், பெருந்தொற்று நேரத்தில் கடந்த ஒராண்டாக இந்திய உணவுக் கழகம் செய்த பணிகளை அவர் நினைவுக்கூர்ந்தார். தேசிய ஊரடங்கு காலத்திலும், இந்தியக் உணவுக் கழக ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் உணவு தானியங்களை தொடர்ந்து கொள்முதல் செய்து, சேமித்து வைத்து அவற்றை லாரிகள், ரயில்கள் மற்றும் கப்பல்கள் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பினர் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், கட்டுப்பாட்டு மண்டலங்கள், ஊரடங்குகள் போன்ற பல தடைகளையும் மீறி ரேசன் கடைகளுக்கு அரிசி மற்றும் கோதுமை விநியோகிக்கப்பட்டன.
இதன் காரணமாக பலர் கொரோனா பாதிப்புக்கு ஆளாயினர். சில அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் பலியாயினர்.
81 கோடி இந்தியர்களுக்கு பொது விநியோக திட்டம் மூலம் வழக்கமான அரிசி மற்றும் கோதுமை விநியோகத்தை இந்திய உணவுக் கழகம் உறுதி செய்ததோடு, பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா மூலம் மக்கள் ஒவ்வொரு மாதமும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் பெற்றனர். சிக்கலான நேரங்களில் மக்கள் பட்டினியுடன் இல்லாமல் இருப்பதை இது உறுதி செய்தது.
இந்திய உணவுக் கழகம் செய்த சாதனை இந்தியாவிலும், வெளிநாட்டிலும் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் பாராட்டப்பட்டது.
நமது நாட்டை உணவு மிகை நாடாக மாற்றியதில், விவசாயிகள், விஞ்ஞானிகள் மற்றும் மத்திய அரசின் பங்களிப்பை அவர் நினைவுக் கூர்ந்தார். இதன் காரணமாக நாட்டில் இந்திய உணவுக் கழகங்களின் சேமிப்பு கிடங்குகள் நிறைந்து கிடப்பது மட்டும் அல்லாமல் கூடுதல் உணவு தானியங்களை பல நாடுகளுக்கு நாம் ஏற்றுமதி செய்கிறோம். எதிர்காலத்திலும், செழிப்புக்கும், உலகின் மற்ற நாடுகளின் உணவு பாதுகாப்புக்கும் ஜொலிக்கும் உதாரணமாக இந்தியா தொடர்ந்து இருக்கும் என திரு ஆர்.டி நசீம் நம்பிக்கை தெரிவித்தார்.
சுதந்திர தினத்தன்று மகாத்மா காந்திக்கு பிரதமர் மரியாதை
சுதந்திர தினத்தன்று தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்துவதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி ராஜ்காட் சென்றார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினேன். மக்களின் லட்சியங்களைப் பூர்த்தி செய்வதை நோக்கி நாம் பணியாற்றுகையில், அவரது சிந்தனைகளும், கொள்கைகளும் தொடர்ந்து நம்மை வழிநடத்துகின்றன”, என்று கூறியுள்ளார்.
பிரதமர் அலுவலகம் சுதந்திர தினதத்தன்று தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்துவதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி ராஜ்காட் சென்றார்.
“ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினேன். மக்களின் லட்சியங்களைப் பூர்த்தி செய்வதை நோக்கி நாம் பணியாற்றுகையில், அவரது சிந்தனைகளும், கொள்கைகளும் தொடர்ந்து நம்மை வழிநடத்துகின்றன”, என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு தலைமைச்செயலக கோட்டைக் கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றிவைத்து, பல்வேறு விருதுகளைப் பெற்றவர்களுக்குப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின வழங்கினார்
கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த 75 வது சுதந்திர தின விழாவில், நடந்த கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி. புதுக்கோட்டை திரு இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
தலைமையாசிரியை அருட்சகோதரி சி.ஜோஸ்பின் மேரிFBS. முன்னிலையில் காவல்துறை சார்ந்த லெட்சுமி காலை 9.00 மணிக்கு கொடியேற்றினார்கள்.தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய விடுதலை நாள் விழாவில் தலைமையாசிரியைநாம் அனைவரும் தேசப்பற்று உள்ளவர்களாக இருக்க வேண்டும். நாடானாலும்,சபையானாலும் ,வீடானாலும் சரி நாம் Number ஆக இல்லாமல் Member இருந்து செயல்பட வேண்டும்.இந்த உறுதியான எண்ணத்துடன் நாம் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.ஆசிரியைகள், அலுவலகப்பணியாளர்கள் அனைவரும் சமூக இடைவெளி கடைபிடித்தும்,முகக்கவசம் அணிந்தும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.இறுதியில் நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவடைந்தது. தலைமையாசிரியர் சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது . காஞ்சிபுரம் திருவள்ளூர ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 75- வது சுதந்திர தின விழா காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் குருகுலம் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி,காலை உணவுகள் வழங்கப்பட்டது.
இந்த சுதந்திர தின விழா நிகழ்வில் மாநில தலைவர்.V.C.P.அம்பலவாணன், பொதுச் செயலாளர்.வி.எம்.தமிழன் வடிவேல்,பொருளாளர்.நரியார்.அ.கிருஷ்ணமூர்த்தி, அரசியல் பயணம் ஆசிரியர் புருஸ்லீ தேவன், டெல்லி முதன்மை நிருபர் வரதராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த சிறப்பான நிகழ்வினை காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பா.மணிகண்டன் மற்றும் நிர்வாகிகளான பாலா விக்னேஷ், பாலாஜி, புருஷோத்தமன், செல்வம்,விக்கி என காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்..75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் , அண்ணா விளையாட்டு அரங்கில் மூவண்ண கொடியை ஏற்றி போலீசார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும் கொரோனா மற்றும் தேர்தல் காலங்களில் சிறப்பாக பணியாற்றிய அரசு துறை அதிகாரிகள் , போலீசார் , மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என 202 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கினார். காரைக்குடி மதர் சிறப்பு பள்ளியில் 75 வது சுதந்திர தின விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக. காரைக்குடி சுழல் சங்கத்தின் தலைவர் Rtn. T. திஷாந்த் குமார் செயலர்
Rtn.S.சிவசுப்பிரமணியம் . Rtn.P.நடராஜன், மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் காரை.Rtn.G. முத்துக்குமார், Rtn. சோமசுந்தரம் . Rtn. சேவுகன் Rtn.சரவணகுமார் கலாம் இலட்சிய இந்தியா இயக்கம் சிவகங்கை ஒருங்கிணைப்பாளரும் சமூக சேவகருமான பிரபாகரன், விநாயகம்,, மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு விழாவில் சிறப்பு விருந்தினர் Rtn. T. திஷாந்த் குமார் தேசியக் கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார்.
பிறகு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நாட்டுப்பண் பாட விழா நிறைவுற்றது. சிவகங்கை அரண்மனை வளாகத்தில் 75 வது சுதந்திர தினவிழா
மேதகு இராணி DSK மதுராந்தகி நாச்சியாரின் முன்னிலையில்
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் தஞ்சை தென்னகப் பண்பாட்டுக் கழகம் சார்பிலும் இணைந்து நடத்தும்
திருச்சி புதிய உதயம் குழுவினர் வழங்கும் இராணி வீரமங்கை வேலுநாச்சியாரின் வரலாற்று நாடகம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...
https://youtube.com/c/SouthZoneCulturalCentreThanjavur
இடம் : சிவகங்கை அரண்மனை வளாகத்தில்.
கருத்துகள்