முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புவி அறிவியல் அமைச்சகம் சார்பில் நிலஅதிர்வு விவரத் தொகுப்பு மக்களவையில் தகவல்

புவி அறிவியல் அமைச்சகம் சார்பில் நிலஅதிர்வு விவரத் தொகுப்பு  மக்களவையில் தகவல்







நில அதிர்வு விவரங்கள், புயல் எச்சரிக்கை மையங்கள் ஆகியவை குறித்து மக்களவையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஜித்தேந்திர சிங் கூறியதாவது:

நிலஅதிர்வு விவர தொகுப்பு:

நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கங்களின் வரலாற்று பதிவுகளை கருத்தில் கொள்ளும்போது, இந்தியாவின் 59 சதவீத நிலப்பரப்பு நிலநடுக்கத்துக்கு வெவ்வேறு அளவிலான தீவிரத்துடன் ஆளாகும் வாய்ப்புகள் உள்ளன. நாட்டின் நிலநடுக்க மண்டல வரைபடத்தின்படி, மொத்த பகுதியும் நான்கு நிலநடுக்க மண்டலங்களாக வகைப்படுத்தப்படுகிறது. 5வது மண்டலத்தில் உள்ள பகுதி மிகவும் பாதிப்புக்கு ஆளாகும் பகுதி. 2வது மண்டலத்தில் உள்ள பகுதியில், நிலநடுக்க பாதிப்பு குறைவாக இருக்கும். தோராயமாக நாட்டின் 11 சதவீத பகுதி 5வது மண்டலத்துக்குள் வருகிறது. 18 சதவீத பகுதி 4வது மண்டலத்துக்குள்ளும், 30 சதவீத பகுதி, 3வது மண்டலத்துக்குள்ளும், மீத பகுதிகள் 2வது மண்டலத்துக்குள்ளும் வரும்.

ஆர்டிக் அறிவியல் அமைப்பின் 3வது கூட்டம்:

ஐஸ்லாந்து, ஜப்பான் ஆகியவை இணைந்து நடத்திய ஆர்க்டிக் அறிவியல் அமைப்பின் 3வது கூட்டத்தில், இந்தியா பங்கெடுத்தது. காணொலி காட்சி மூலம் நடந்த இந்த கூட்டத்தில், ஆர்க்டிக் பகுதியில் ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் இந்திய குழுவுக்கு அப்போதைய புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமை தாங்கினார்.

புயல் எச்சரிக்கை மையங்கள்:

நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோர பகுதிகளில்,  7 புயல் எச்சரிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இவற்றில் 3 மையங்கள் சென்னை, மும்பை, கொல்கத்தாவில் உள்ளன. மற்ற 4 மையங்கள் அகமதாபாத், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம் மற்றும் புவனேஸ்வரில் உள்ளன. எந்தெந்த பகுதிகளுக்கு, எந்த மையங்கள் முன்னெச்சரிக்கை விடுக்க வேண்டும் என்ற பொறுப்பு கீழ்கண்ட இணைப்பில் உள்ள பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு கடலோர பகுதியில் புயல் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை:

கடல் வெப்பம் அதிகரிப்பு காரணமாக, அரபிக் கடலில் புயல்கள் உருவாவது சமீபத்தில் அதிகரிக்கிறது.  குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கும்,  மேற்கு கடேலாரத்தில் உள்ள டாமன், டையூ தத்ரா மற்றும் நகர் ஹவேலி, லட்சத்தீவு போன்ற யூனியன் பிரதேசங்களுக்கு, மேம்படுத்தப்பட்ட புயல் எச்சரிக்கை மையங்கள் உள்ளன.  இவற்றின் மூலம் முன்னெச்சரிக்கைகள் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு புயல் பாதிப்பு இல்லாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஜித்தேந்திர சிங் தெரிவித்தார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...