செகந்திராபாத்துக்கும் இராமேஸ்வரத்திற்குமிடையே அக்டோபர் 19 ஆம் தேதி முதல் வாராந்திர இரயில் போக்குவரத்து
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்துக்கும் தமிழகத்தின் ராமேஸ்வரத்திற்குமிடையே
அக்டோபர் 19 ஆம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில் மெயின் லைன் வழியாக இயக்கப்படுகிறது.
குண்டூர், கூடுர், திருப்பதி, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, இராமநாதபுரம் வழியாக இயக்கப்படும்.
செகந்திராபாத்தில் செவ்வாய்க் கிழமைகளில் இரவு 9.25 இக்கு புறப்பட்டு வியாழன் அதிகாலை 3.10 இக்கு இராமேஸ்வரம் சென்று அடையும். மறு முனையில் வியாழன் இரவு 11.55 இக்கு ராமேஸ்வரத்தில் புறப்பட்டு சனிக்கிழமை காலை 7.10 க்கு செகந்திராபாத் சென்றடையும்.
திருச்சிராப்பள்ளி மற்றும் காவிரி டெல்டா மாவட்ட மக்களுக்கு திருப்பதி செல்ல
மற்றொரு நேரடி ரயில் போக்குவரத்தாகும்.
கருத்துகள்