முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனித உரிமைகள் பெயரை தனியார் அமைப்பு பயன்படுத்தினாலோ, வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டினால் சட்டப்படி நடவடிக்கை என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் எச்சரிக்கை.

மனித உரிமைகள் பெயரை தனியார் அமைப்பு பயன்படுத்தினாலோ, வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டினால் சட்டப்படி நடவடிக்கை  என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு எச்சரிக்கை.


செய்து வெளியிட்ட சுற்றறிக்கையில் தகவலாவது: மனித உரிமைகளை பேணவும், மனித உரிமைகள் மீறப்படும் பட்சத்தில் அது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு அரசுக்கு தக்க பரிந்துரைகளை வழங்கவும், தேசிய அளவில் புதுடில்லியில் தேசிய மனித உரிமை ஆணையமும் மற்றும் மாநில அளவில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையமும்  சட்டப்படி அமைக்கப்பட்டு செயல்படுகின்றன. ஆனால் "மனித உரிமைகள்" (Human Rights) வார்த்தைகளை சில தனியார் அமைப்புகள் தங்களது பெயருடன் சேர்த்துக்கொண்டு தங்களை தேசிய மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையங்களுடன் தொடர்புடையதாக அடையாளப்படுத்தி செயல்படுவதாக காவல்துறைக்கு அதிகம் புகார்கள் வருகிற நிகழ்வு, ஏற்கனவே அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம் 1975 ன் படி உரிய சட்டத்திருத்தம் பிரிவு 2-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு "மனித உரிமைகள்" (Human Rights) என்ற சொல்லை தனியார் அமைப்புகள் தங்களது அமைப்பின் பெயருடன் சேர்த்து பயன்படுத்த ஏற்கனவே நீதிமன்றம் தடை விதித்து தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு எண். 19 ஆணையின்படி வெளியிடப்பட்டுள்ளது. 

 நீக்க வேண்டும் மேலும் "மனித உரிமைகள்" (Human Rights) என்ற சொல்லாடலை ஏற்கனவே தங்களது பெயர்களுடன் பதிவு செய்து பயன்படுத்தி வந்த அமைப்புகள் அச்சொல்லாடலை தங்களது பெயரிலிருந்து நீக்கவும், பிற்காலத்தில் அச்சொல்லாடலை சேர்க்காமல் தனியார் அமைப்புகள் பதிவு செய்யப்பட வேண்டும் என வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் இருந்தால் அதில் இருந்து "மனித உரிமைகள்" (Human Rights) என்ற வார்த்தையை நீக்க வேண்டும்.

  தனியார் அமைப்பு மேலும், தனியார் அமைப்புகள் தங்களது பெயரை குறிப்பிடும் போது "இது ஒரு தனியார் அமைப்பு" என்ற பெயர் இணைப்புடன் செயல்பட வேண்டும். ஆனால், அதன் பின்னும் "மனித உரிமைகள்" (Human Rights) என்ற வார்த்தையை பயன்படுத்தி தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்களுடன் தங்களை போலியாக அடையாளப்படுத்தி கொண்டும், வாகனங்களின் முன்புறமும், பின்புறமும் பெரிய அளவில் மனித உரிமைகள் என்ற பெயர்பலகை மற்றும் ஸ்டிக்கர்களை (Name Board & Sticker) பொருத்தி கொண்டு தங்களை பொது அதிகாரர் அமைப்புகள் போல காட்டிக் கொண்டு வாகனங்களை இயக்கி வருவதாகவும், மற்றும் சிலர் தங்கள் அமைப்பில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் போலி அடையாள அட்டைகள் வழங்கி வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ஒரு மாவட்டத்தில் நமது காவல்துறை அதிகாரிகளே இவ்வாறான அமைப்பை திறந்து வைத்திருக்கும் சம்பவமும் நடந்துள்ளது. எனவே இது குறித்த விழிப்புணர்வு காவல்துறையினர் மற்றும் பொது மக்களிடையே தேவை.  ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது மேலும், வாகனங்களில் "மனித உரிமைகள்" (Human Rights) அல்லது "ஒன்றியம்" (Union) அல்லது "மாநில" (State) அல்லது "கவுன்சில்" (Counsel) என்ற பெயர் கொண்ட ஸ்டிக்கர்கள் கொண்டு வாகனங்களை இயக்கினாலோ, தனியார் அமைப்புகள் "மனித உரிமைகள்" (Human Rights) அல்லது "ஒன்றியம்" (Union) அல்லது "மாநில" (State) அல்லது "கவுன்சில்" (Counsel) என்ற பெயரில் செயல்பட்டாலோ மற்றும் "மனித உரிமைகள்" (Human Rights) அல்லது "ஒன்றியம்" (Union) அல்லது "மாநில" (State) அல்லது "கவுன்சில்" (Counsel) என்ற வார்த்தையை பயன்படுத்தி பொதுமக்களை நம்ப வைத்து போலியாக நிதி வசூல் செய்வது, உறுப்பினர் மற்றும் போலி அடையாள அட்டை வழங்குதல் போன்ற முறைகேடுகளுடன் செயல்பட்டால் அந்த அமைப்புகள் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை சட்டப்படி எடுக்கவும். அவ்வாறு சட்ட நடவடிக்கை மேற்கொண்ட விவரத்தினை தலைமையலுவலகத்திற்கு உடனடியாக தெரியப்படுத்தவும் இதன் மூலம் அனைத்து பிரிவு அலுவலர்கள் (All Unit Officers) அறிவுறுத்தியுள்ளார்.மனித உரிமைகள்" (Human Rights) எனும் சொல் வழக்கை முன்பு பதிவு செய்து பயன்படுத்திய அமைப்புகள் அச்சொல்லாடலை நீக்கவும், பிற்காலத்தில் அச்சொல்லாடலை சேர்க்காமல் தனியார் அமைப்புகள் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதன்படி ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் இருந்தால் அதில் இருந்து "மனித உரிமைகள்" (Human Rights) என்ற வார்த்தையை நீக்க வேண்டும். தனியார் அமைப்புகள் தங்களது பெயரை குறிப்பிடும் போது "இது ஒரு தனியார் அமைப்பு" என்ற பெயர் இணைப்புடன் செயல்பட வேண்டும். ஆனால், அதன் பின்னும் "மனித உரிமைகள்" (Human Rights) என்ற வார்த்தையைப் பயன்படுத்தி தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்களுடன் தங்களையும் போலியாக அடையாளப்படுத்திக் கொண்டும், வாகனங்களின் முன்புறமும், பின்புறமும் பெரிய அளவில் மனித உரிமைகள் என்ற பெயர்பலகை மற்றும் ஸ்டிக்கர்களை (Name Board & Sticker) பொருத்தி கொண்டு தங்களை அரசு பொது அதிகார அமைப்புகள் போல காட்டிக் கொண்டு இயக்கி வருவதாகவும், மற்றும் சிலர் தங்கள் அமைப்பில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் போலி அடையாள அட்டைகளை வழங்கி வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ஒரு மாவட்டத்தில் நமது காவல்துறை அதிகாரிகளே இவ்வாறான அமைப்பை திறந்து வைத்திருக்கும் திறப்பு விழா சம்பவமும் நடந்துள்ளது. இது தொடர்பாக விழிப்புணர்வு காவல்துறையினர் மற்றும் பொது மக்களிடையே தேவை.வாகனங்களில் "மனித உரிமைகள்" (Human Rights) அல்லது "ஒன்றியம்" (Union) அல்லது "மாநில" (State) அல்லது "கவுன்சில்" (Counsel) என்ற பெயர் கொண்ட ஸ்டிக்கர்கள் கொண்டு வாகனங்களை இயக்கினாலோ, தனியார் அமைப்புகள் "மனித உரிமைகள்" (Human Rights) அல்லது "ஒன்றியம்" (Union) அல்லது "மாநில" (State) அல்லது "கவுன்சில்" (Counsel) என்ற பெயரில் செயல்பட்டாலோ மற்றும் "மனித உரிமைகள்" (Human Rights) அல்லது "ஒன்றியம்" (Union) அல்லது "மாநில" (State) அல்லது "கவுன்சில்" (Counsel) என்ற வார்த்தையைப் பயன்படுத்தி பொதுமக்களை நம்ப வைப்பது மற்றும் நிதி வசூல் செய்வது, உறுப்பினர் மற்றும் பெயரில் போலி அடையாள அட்டை வழங்குதல் போன்ற முறைகேடுகளுடன் செயல்பட்டால் அந்த அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை சட்டப்படி எடுக்கவும். அவ்வாறு சட்ட நடவடிக்கை மேற்கொண்ட விவரத்தினை தலைமையலுவலகத்திற்கு உடனடியாகத் தெரியப்படுத்தவும் இதன் மூலம் அனைத்து பிரிவு அலுவலர்கள் (All Unit Officers) அறிவுறுத்தப்படுகிறார்கள். என தகவல் தெரிவிக்கப்பட்டது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...