முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆடு திருட்டை தடுத்த போலீஸைக் கொன்ற சிறுவர்கள்!

படுகொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ., பூமிநாதனின் கொலை வழக்கில் தொடர்பு உடைய 2 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


கொலைக்குத் துணையான 2 சிறுவர்களையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

நாவல்பட்டு காவல் நிலையத்தில் 3 ஆண்டுகளாக எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் பூமிநாதன் (வயது 56). நாகப்பட்டினம் மாவட்டம்  சந்தைவெளி கிராமம். இவருக்கு கீதா (வயது 48) மனைவியாவார். அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ படிக்கும் குகன் (வயது 24) எனும் மகனும் உண்டு.


சம்பவத்தன்று நாவல்பட்டு காவல்நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்துப் பணியில் பூமிநாதன் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில் ஆடுகளை ஏற்றிக் கொண்டு வேகமாக சென்றுள்ளனர். ஆடு ஏற்றிச் சென்றவர்கள் வேறு வழியில் தப்பிவிட்டனர். வேறு சிலரை பூமிநாதன் சுற்றிவளைத்தபோது


அப்போது மற்ற காவலர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்த போது ஆடு  திருடர்கள் அவரை அரிவாளால் சரமாரி வெட்டி விட்டு தப்பியதையடுத்து சம்பவ இடத்திலேயே பூமிநாதன் உயிரிழந்ததாக அவ்விடத்திற்கு வந்த காவலர் சேகர் மற்றும் சித்திரவேல் ஆகியோர் இவர் படுகொலை

செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் திருச்சிராப்பள்ளி டி.ஐ.ஜி., சரவண சுந்தர், திருச்சிராப்பள்ளி எஸ்.பி., சுஜித்குமார், காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். சம்பவம் குறித்து, கீரனுார் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


கொலையாளிகளை பிடிக்க, எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பூமிநாதன் உடல், திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலுக்கு, ஏ.டி.ஜி.பி., செந்தாமரைக் கண்ணன் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.


நேற்று மாலை, திருச்சிராப்பள்ளி சோழமா நகரில் காவல்துறை 30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில் தேடப்பட்டு வந்த கொலையாளிகள் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே தோகூர் என்ற பகுதியை சேர்ந்த அஜய், மணிகண்டன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் 2 சிறுவர்களையும் பிடித்து விசாரிக்கின்றனர்.படுகொலை செய்யப்படும் முன் காவலர் சேகரிடம் செல்போனில் பேசிய சிறப்பு சார்பு ஆய்வாளர் பூமிநாதன் பிடிபட்ட நபர்கள் தேனீர்பட்டியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்திருந்ததாகக் கூறியதன்

அடிப்படையில் தனிப்படையினர் தேனீர்பட்டி கிராமத்தில் விசாரணை மேற்கொண்டனர். சிறப்பு சார்பு ஆய்வாளர் பூமிநாதனின் பின்தலையில், கறி வெட்டு அரிவாள் போன்ற ஆயுதத்ததால் வெட்டப்பட்டிருந்ததன் காரணமாக கறிக்கடை தொடர்புடைய ஆட்கள் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகித்த   நிலையில்.   அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணி வரை கொலை நடந்த இடத்தில் செயல்பட்ட செல்போன்களின் டவர் மூலம் காவல்துறையினர் விசாரணையைத் துவக்கி சம்பவ இடத்திலிருந்த 2 செல்போன்கள், புதுக்கோட்டை - பொன்னமராவதிக்கு இடையிலிருப்பதைக் கண்ட தனிப்படைக் காவல்துறையினர், நேற்று மதியம் அங்கு சென்ற போது கொலையாளி செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்ட நிலையில் விசாரணை இன்று அதிகாலை கொலையாளிகள் 4 பேரைப் பிடித்ததில்  2 பேர் சிறுவர்கள். கொலையாளிகள் கல்லணையை அடுத்த தோகூர் சேர்ந்தவர்கள் என்றும் ஆடுகளை திருடுவதை பல வருடமாகச் செய்து வருவது காவல்துறைக்குத் தெரியவந்தது எனவும். அறிந்த நிலையில் கொலையாளிகள் தற்போது திருச்சிராப்பள்ளிக்கு கொண்டு வரப்பட்டனர்.

பிடிபட்டவர்களில் 5ஆம் வகுப்புப் படிக்கும் சிறுவன் ஒருவன் மற்றொருவன் 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் என்பதாகும்‌‌ மற்றொருவன் மணிகண்டன் (வயது 19) என்பதும் அவன் மீது அதே  காவல் நிலையத்தில் மற்றொரு வழக்கு இருப்பதும் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் கூறினர்.பிடிபட்டவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் உண்டு. இன்னும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த