முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆடு திருட்டை தடுத்த போலீஸைக் கொன்ற சிறுவர்கள்!

படுகொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ., பூமிநாதனின் கொலை வழக்கில் தொடர்பு உடைய 2 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


கொலைக்குத் துணையான 2 சிறுவர்களையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

நாவல்பட்டு காவல் நிலையத்தில் 3 ஆண்டுகளாக எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் பூமிநாதன் (வயது 56). நாகப்பட்டினம் மாவட்டம்  சந்தைவெளி கிராமம். இவருக்கு கீதா (வயது 48) மனைவியாவார். அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ படிக்கும் குகன் (வயது 24) எனும் மகனும் உண்டு.


சம்பவத்தன்று நாவல்பட்டு காவல்நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்துப் பணியில் பூமிநாதன் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில் ஆடுகளை ஏற்றிக் கொண்டு வேகமாக சென்றுள்ளனர். ஆடு ஏற்றிச் சென்றவர்கள் வேறு வழியில் தப்பிவிட்டனர். வேறு சிலரை பூமிநாதன் சுற்றிவளைத்தபோது


அப்போது மற்ற காவலர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்த போது ஆடு  திருடர்கள் அவரை அரிவாளால் சரமாரி வெட்டி விட்டு தப்பியதையடுத்து சம்பவ இடத்திலேயே பூமிநாதன் உயிரிழந்ததாக அவ்விடத்திற்கு வந்த காவலர் சேகர் மற்றும் சித்திரவேல் ஆகியோர் இவர் படுகொலை

செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் திருச்சிராப்பள்ளி டி.ஐ.ஜி., சரவண சுந்தர், திருச்சிராப்பள்ளி எஸ்.பி., சுஜித்குமார், காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். சம்பவம் குறித்து, கீரனுார் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


கொலையாளிகளை பிடிக்க, எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பூமிநாதன் உடல், திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலுக்கு, ஏ.டி.ஜி.பி., செந்தாமரைக் கண்ணன் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.


நேற்று மாலை, திருச்சிராப்பள்ளி சோழமா நகரில் காவல்துறை 30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில் தேடப்பட்டு வந்த கொலையாளிகள் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே தோகூர் என்ற பகுதியை சேர்ந்த அஜய், மணிகண்டன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் 2 சிறுவர்களையும் பிடித்து விசாரிக்கின்றனர்.படுகொலை செய்யப்படும் முன் காவலர் சேகரிடம் செல்போனில் பேசிய சிறப்பு சார்பு ஆய்வாளர் பூமிநாதன் பிடிபட்ட நபர்கள் தேனீர்பட்டியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்திருந்ததாகக் கூறியதன்

அடிப்படையில் தனிப்படையினர் தேனீர்பட்டி கிராமத்தில் விசாரணை மேற்கொண்டனர். சிறப்பு சார்பு ஆய்வாளர் பூமிநாதனின் பின்தலையில், கறி வெட்டு அரிவாள் போன்ற ஆயுதத்ததால் வெட்டப்பட்டிருந்ததன் காரணமாக கறிக்கடை தொடர்புடைய ஆட்கள் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகித்த   நிலையில்.   அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணி வரை கொலை நடந்த இடத்தில் செயல்பட்ட செல்போன்களின் டவர் மூலம் காவல்துறையினர் விசாரணையைத் துவக்கி சம்பவ இடத்திலிருந்த 2 செல்போன்கள், புதுக்கோட்டை - பொன்னமராவதிக்கு இடையிலிருப்பதைக் கண்ட தனிப்படைக் காவல்துறையினர், நேற்று மதியம் அங்கு சென்ற போது கொலையாளி செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்ட நிலையில் விசாரணை இன்று அதிகாலை கொலையாளிகள் 4 பேரைப் பிடித்ததில்  2 பேர் சிறுவர்கள். கொலையாளிகள் கல்லணையை அடுத்த தோகூர் சேர்ந்தவர்கள் என்றும் ஆடுகளை திருடுவதை பல வருடமாகச் செய்து வருவது காவல்துறைக்குத் தெரியவந்தது எனவும். அறிந்த நிலையில் கொலையாளிகள் தற்போது திருச்சிராப்பள்ளிக்கு கொண்டு வரப்பட்டனர்.

பிடிபட்டவர்களில் 5ஆம் வகுப்புப் படிக்கும் சிறுவன் ஒருவன் மற்றொருவன் 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் என்பதாகும்‌‌ மற்றொருவன் மணிகண்டன் (வயது 19) என்பதும் அவன் மீது அதே  காவல் நிலையத்தில் மற்றொரு வழக்கு இருப்பதும் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் கூறினர்.பிடிபட்டவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் உண்டு. இன்னும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...