முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம்

நல்லாட்சி குறியீட்டை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வெளியிட்டார் - நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம்



நிர்வாகச்  சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத்  துறை தயாரித்த 2021 -ம் ஆண்டு நல்லாட்சிக் குறியீட்டை , நல்லாட்சி தினத்தன்று புது தில்லி விஞ்ஞான் பவனில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா இன்று வெளியிட்டார்.

இதில் நீதி  மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புப்  பிரிவில்  ஏ குழு மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

நல்லாட்சி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய திரு அமித் ஷா, கடந்த 7 ஆண்டுகளில் திரு நரேந்திர மோடி அரசு வழங்கிவரும் நல்லாட்சிக்காக மக்கள் நீண்ட காலமாகக்  காத்திருந்ததாக கூறினார்.  மோடி அரசால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சியின் பலன்களை மக்கள் பெறத் தொடங்கியதால், 2014 முதல் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்றார் அவர்.

நல்லாட்சிக்கு உதாரணம் அளித்த திரு அமித் ஷா, கடந்த 7 ஆண்டுகளில் திரு மோடி அரசின் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை, ஏனெனில் அது தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகம் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்தியப்  பணியாளர், ஒய்வூதியர் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், குடிமக்களை மையப்படுத்திய நிர்வாகம்  மோடி அரசின் ஆட்சி மாதிரியின் இதயத்தில் உள்ளது என்றார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆட்சியின் நிலையை மதிப்பிடுவதற்கு நல்லாட்சி குறியீடு உதவும் என்று அவர் தெரிவித்தார்.

நல்லாட்சி குறியீடு பத்து துறைகள் மற்றும் 58 குறிகாட்டிகளை உள்ளடக்கியது ஆகும். அவை: 1)விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள், 2) வணிகம் & தொழில்கள், 3) மனித வள மேம்பாடு, 4) பொது சுகாதாரம், 5.) பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள், 6) பொருளாதார நிர்வாகம், 7) சமூக நலன் & மேம்பாடு, 8) நீதித்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, 9) சுற்றுச்சூழல் மற்றும் 10) குடிமக்களை மையப்படுத்திய ஆளுகை.



நல்லாட்சி குறியீடு-2021 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை நான்கு பிரிவுகளாக வகைப்படுத்துகிறது, அதாவது (i) பிற மாநிலங்கள் - குழு ஏ; (ii) பிற மாநிலங்கள் - குழு பி; (iii) வடகிழக்கு மற்றும் மலை மாநிலங்கள்; மற்றும் (iv) யூனியன் பிரதேசங்கள்.புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற நல்லாட்சி வாரத்தின் நிறைவு விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்

புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற நல்லாட்சி வாரத்தின் நிறைவு விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார். மத்திய அமைச்சர் திரு ஜிதேந்திர சிங், மத்திய உள்துறை செயலாளர், மத்திய அரசின் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் மற்றும் மாநிலங்களின் மூத்த அதிகாரிகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர், இன்று டிசம்பர் 25-ம் தேதிக்கு வித்தியாசமான முக்கியத்துவம் உள்ளது என்றார். நாட்டின் வளர்ச்சி, சுதந்திரம் மற்றும் நாட்டிற்கு ஒரு புதிய திசையை வழங்குவதற்காக தங்களது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்த நாட்டின் இரண்டு பெரிய ஆளுமைகளின் நினைவுகள் இந்த நாளுடன் இணைந்துள்ளன.

பண்டிட் மதன் மோகன் மாளவியா, சுதந்திரத்திற்கு முன் நாட்டின் பெருமையை உலகறிய பாடுபட்டவர். வாராகி முயற்சியால், இந்தியாவின் கலாச்சாரம், மரபுகள், புராண அறிவு, அறிவியல், வேத கணிதம் போன்ற பாடங்கள் உலகத்தின் முன் பெருமையுடன் வைக்கப்பட்டன. அனைத்து பாடங்களின் பாதுகாப்பும் ஊக்குவிப்பும் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகிற்கும் மிகவும் முக்கியமானது, ஏனெனில் அவற்றில் பல உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவும்  என்று அவர் கூறினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை நிறுவனர்  பாரத ரத்னா பண்டிட் மதன் மோகன் மாளவியா பிறந்த தினம் இன்று.

நவீன இந்தியாவில் நல்லாட்சி என்ற வார்த்தையின் உண்மையான பொருளை களத்திற்கு கொண்டு வந்த மறைதிரு அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளும் இன்று. திரு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நாட்டின் பெருமையுடன் தொடர்புடைய பல பிரச்சினைகளுக்கு முடிவுகள் எடுக்கப்பட்டன. எதிர்காலத்தில் அரசாங்கங்கள் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதைக் காட்டும் வலுவான மற்றும் சிறந்த முன்மாதிரியை நாட்டு மக்களின் முன் வைத்தார்  வாஜ்பாய்.

விடுதலையின் மஹோத்சவ ஆண்டில் (சுதந்திரத்தின் 75-வது ஆண்டு) நல்லாட்சி வாரத்தை கொண்டாடும் முடிவை பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்ததாக மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். இதன் காரணமாக நல்லாட்சி தத்துவம் தில்லியில் இருந்து மாவட்டங்கள் மற்றும் கிராமங்களுக்கு விரிவாக்கப்பட்டது, அரசின் முழு அமைப்பிலும் நல்ல நிர்வாகத்திற்கு  இது வழிவகுத்தது. இது ஒரு பெரிய சாதனை.

2014-ல் திரு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றபோது, இந்த அரசின் நோக்கம் ஆட்சி செய்வது மட்டுமல்ல, நாட்டை மாற்றுவது என்று முதல்முறையாக மக்கள் கருதினர் என்று திரு அமித்ஷா கூறினார். 70 ஆண்டுகளாக நமது ஜனநாயக அமைப்பின் மீது மக்களின் நம்பிக்கை படிப்படியாக குறைந்து வந்தது. சுயாட்சியை நல்லாட்சியாக மாற்றும் போதுதான் ஜனநாயகத்தின் வெற்றி மக்களைச்  சென்றடையும். மக்களுடைய இந்த எதிர்பார்ப்பை திரு நரேந்திர மோடி அவர்கள் சிறந்த முறையில் நிறைவேற்றியுள்ளதன் காரணமாக. மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டின் சுதந்திரத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்போது, நாடு எப்படி இருக்கும் என்று ஒவ்வொரு குடிமகனும் கற்பனை செய்கிறார். இந்த நாடு 22 அரசாங்கங்களை கண்டுள்ளது அதன் பின்னர் இப்போதுதான் இந்த மாற்றத்தைக்  காண முடிந்தது.வளர்ச்சியின் மாதிரி அனைவருக்குமானதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்பதே நல்லாட்சியில் இருந்து மக்கள் எதிர்பார்ப்பது என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் கூறினார். வளர்ச்சியைத்  தொடாத நாட்டின் எந்தப் பகுதியும் இருக்கக்கூடாது, வளர்ச்சியின் மாதிரியில் சேர்க்கப்படாத எந்தவொரு நபரும் சமூகத்தில் இருக்கக்கூடாது. ஊழலற்ற, வெளிப்படையான ஆட்சி, அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நேர்மையான முயற்சி, பொறுப்புணர்வோடு செயல்திறன், புத்தாக்கம், நிலைத்தன்மை ஆகியவற்றோடு அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் ஆட்சி இருக்க வேண்டும் என்பதுதான் நல்லாட்சியின் முன்மாதிரி மற்றும் மக்களின் எதிர்பார்ப்பு. இந்த வகை ஜனநாயகம் கட்டமைக்கப்பட வேண்டும். மக்களின் இந்த ஏழு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.


திரு அமித் ஷா மேலும் கூறுகையில், முன்பு வளர்ச்சிக்கு வேறு பொருள் இருந்தது: நிறைய குழப்பங்கள் இருந்தன. ஆனால்  மோடி அரசு ஒரு நல்ல முயற்சியை மேற்கொண்டு இந்த குழப்பங்களை எல்லாம் முடிவுக்கு கொண்டு வந்தது. இந்த அரசின் ஏழு வருடங்களில் அனைத்து முரண்பாடுகளையும் களைந்து அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளோம். விவசாயம், தொழில், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, நீர்ப்பாசனம், ஊரக வளர்ச்சி, நகர்ப்புற மேம்பாடு, பழங்குடியினர் மேம்பாடு என அனைத்துத் துறைகளையும் தொடும் வகையில் தெளிவான கொள்கைகளை வகுக்க  மோடி அரசு உழைத்துள்ளது. அனைவருக்குமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டுக்கு முன் நமது 80 கோடி ஏழைக் குடிமக்களிடம் பிரதமர்களும், அரசுகளும் வந்து செல்கிறார்கள் அதனால் என்ன பயன் என்ற பெரிய கேள்வி இருந்தது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. 2014-க்கு முன், 60 கோடி மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒரு வங்கிக் கணக்கு கூட இல்லாமல், நாட்டின் பொருளாதாரத்தில் எந்த பங்களிப்பும் இல்லாமல் இருந்தனர். 10 கோடிக்கும் அதிகமான வீடுகளில் கழிப்பறை இல்லை, 30 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சாரம் இல்லை, 140 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு எரிவாயு இல்லை, சுகாதாரத் துறையில் மிகப்பெரிய வெற்றிடம் இருந்தது. ஏழைகள் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டபோது ஆதரவற்றவர்களாக உணர்ந்தார்கள், கடவுளைத் தவிர வேறு யாரையும் அவர்கள் நினைக்க இயலவில்லை. ஆதரவற்ற ஏழை ஒருவர் தனது அன்புக்குரியவர் இறப்பதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தால் சுதந்திரத்திற்கு எந்த அர்த்தமும் இல்லை என்று திரு அமித் ஷா கூறினார்.

மோடி அரசு முதன்முறையாக 2 கோடிக்கும் அதிகமானோருக்கு வீடுகளை வழங்குவதன் மூலம் நாட்டின் முன் முக்கிய இலக்கை நிர்ணயித்துள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் மற்றும் கழிப்பறைகள் வழங்கும் பணியும் நிறைவடைந்துள்ளது, 14 கோடி வீடுகளுக்கு சமையல் எரிவாயுவை வழங்குவதன் மூலம் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த திரு மோடி உழைத்துள்ளார். ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் வழங்க வேண்டும் என்ற இலக்கு 2022 டிசம்பருக்கு முன் நிறைவேற்றப்படும். எந்த ஒரு தீவிர நோய்க்கும் சிகிச்சை அளிக்க  ரூ. ஐந்து லட்சம் வழங்கப்படும். கொவிட்-19 பெருந்தொற்றின் போது கூட,  மோடி அரசு ஒரு நபருக்கு 25 கிலோ உணவு தானியங்களை 2 ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்கியதன் மூலம் 80 கோடி மக்களை பட்டினியிலிருந்து காப்பாற்றியது. நாட்டின் வளர்ச்சியில் இருந்து தங்களைத் துண்டித்துக் கொண்ட நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இன்று புதிய நம்பிக்கையுடன் உள்ளனர்.

மோடி அரசு மிகவும் திட்டமிட்ட முறையில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றார் அவர். இதுமட்டுமின்றி கறுப்புப் பணத்துக்கு எதிராகப் பல சட்டங்கள் இயற்றப்பட்டன, பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு எதிராக, பினாமி சொத்துக்களுக்கு எதிராகச் சட்டங்கள் இயற்றப்பட்டன, போலி நிறுவனங்களுக்கு எதிராகப் பெரும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜைத் தடுக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. திரு நரேந்திர மோடி இதைச் செய்தார். இதன் காரணமாக, இன்று 7 ஆண்டுகளுக்குப் பிறகும், ஊழல் குற்றச்சாட்டை யாரும் முன்வைக்க முடியாத அரசாக, வெளிப்படைத் தன்மைக்கு சிறந்த உதாரணமாக மோடி அரசு விளங்குகிறது என்று பொதுமக்கள் முன் நம்பிக்கையுடன் கூறலாம்.நாடு முழுவதும் வழங்கப்பட்டுவரும் தடுப்பூசிகள் குறித்தும், ராணுவத்தினர், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரின் நலனுக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் திரு அமித் ஷா பேசினார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த