முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உனக்கு அநீதி இழைக்கப்படும் போது கடவுளிடம் முறையிடாதே, நீயே கடவுளாக மாறு. இதுவே .அன்னபூரணி (அரசு) க்கு சொல்லிக் கொடுத்தவர்களின் தாரக மந்திரம்

என்னமா? இப்படிப் பண்றீங்களேம்மா!    உனக்கு அநீதி இழைக்கப்படும் போது கடவுளிடம் முறையிடாதே, நீயே கடவுளாக மாறு. இதுவே .அன்னபூரணி (அரசு) க்கு சொல்லிக் கொடுத்தவர்களின் தாரக மந்திரம்


அம்மாவென்றும் பூரணி என்றும் கூறும் ஆன்ட்டிகளையெல்லாம் சாமியாரென ஏற்றுக் கொள்ள மக்கள் மனதில் உள்ள அவ்வளவு பாதிப்புகள். அது தீராதா எனும் ஆதங்கம் தான்.

நியாயம்னு ஒன்னு இருக்கு  ஆண் சாமியார் பங்காரு அடிகளாரை அம்மானு சொல்கிற மக்கள் வாழ்கிற சமூகத்தில் இந்த அடுத்த ஆண்கள் தொடர்பான ஆன்ட்டியை!  அதாவது பூரணியைக் கொண்டாடுவதில் என்ன தவறு.? எனக் கேட்பவர்கள் உண்டு.  நடிகை குஷ்புவுக்கு கோவில் கட்டிய  மக்கள் தானே ?      அண்ணபூரனி ஆன்ட்டி சாமியார் ஆனதும் இப்படித்தான்..?. நித்தியை விட இந்தச் சித்தியானவர் அவசர கதியில் புகழ்?ஆயிட்டாங்க போல! இது மருவத்தூருக்கு ஆண் அம்மாவுக்கு வந்த சோதனையா என்ற வினா எழுகிறது. எங்கிருந்தோ ஒரு தேவ கானம் இப்போது கேட்கிறது வேதனை வேதனை.! உடனே எங்கிருந்து வந்தது இந்த சுருட்டிகளும்,செஞ்சுருட்டிளும்..


அம்மாவின் திவ்ய தரிசனம் தரிசன நாள்: 01-01-22 - சனிக்கிழமை  தரிசன நேரம் : காலை 9.00 மணி முதல்  தரிசன இடம் : வாசுகி மஹால் , 228, நேரு நகர், வல்லம், செங்கல்பட்டு

PH :....../........!

(தரிசனத்திற்கு அனுமதி இலவசம்).   இப்படி விளம்பரங்கள் செய்ய இவர் யார் மூல கர்த்தா யார்? .               


                         இயற்கை மனிதனைப் படைத்தது. 

மனிதன் தனக்கு தோன்றியதையெல்லம் படைத்தான், பணத்தையும் மதங்களையும் சேர்த்து. 

மதங்கள் கடவுளைப் படைத்தன.

மனிதனை மரணம் என இயற்கை திரும்ப அழைக்கிறது..



மனிதன் படைத்த எதுவுமே அவனைக் காப்பாற்றி இந்த பூமியில் நிரந்தரமாக தங்க வைக்க முடியவில்லை.

இந்த உலகின் மனித குலத்தில் மிக நீண்ட நெடிய போரும், மிகச்சிறிய அக்கப்போரும் ஒரு  ஆணுக்கும் பெண்ணுக்குமிடையேதான் நடைபெறுகின்றன. இதுமட்டுமே உண்மை சிலர் ஆன்மீகம் பேசி திரைப் பாடல் வரிகளில்         





                                        "சத்தியம் தவறாத

உத்தமர் போலவே நடிக்கிறார்.

சமயம் பார்த்து பல வகையிலும்

கொள்ளை அடிக்கிறார்.

பக்தனை போலவே

பகல் வேஷம் காட்டி

பாமர மக்களை

வலையினில் மாட்டி

இன்னும் எத்தனை காலம்தான்

ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!

சொந்த நாட்டிலே! நம் நாட்டிலே...."




எனப் பாடும் வரிகளில் அர்த்தம் தெரிகிறது. ஏற்கனவே திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகளுக்குத் தந்தையான அரசு என்ற நபருக்கும் அன்னபூரணிக்கும் பழக்கம் ஏற்பட்டு லிவிங் டூ கெதராக  வாழ்ந்து வந்துள்ளனர். இது தெரிந்த அரசின் மனைவியும் அவரது குடும்பம் அன்னபூரணியை அடித்துத் தாக்கி விரட்டிய நிலையில்.






எதிர்ப்புத் தெரிவித்த அரசு, வாழ்ந்தால் அன்னபூரணியுடன் தான் வாழ்வேன் என்றும், முதல் மனைவியை விவாகரத்து செய்துகொள்கிறேன் என்று கூறவே, இந்த விவகாரம் வெளிவந்த பிறகு ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய லட்சுமி ராமகிருஷ்ணன் பங்களிப்பு  நடத்திய  'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சிக்கு வரவைத்து நேரடி ஒளிபரப்பு. அந்த எப்பிசோடும் வைரலானது. பின்னர் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு அன்னபூரணி ஆன்மிகத்திலிறங்கி அவரது பக்தர்களின் மனதில் ஆதிபராசக்தியாக மாற்றமாகி குடியேறிவிட்டார். நான் கடவுளின் அவதாரம் எனச் சொல்லிக் கொண்டு வருபவர்களை மக்கள் நம்பக் கூடாது. சிந்தித்து கண் விழித்துக் கொள்ள வேண்டும். அதுதான் முக்கியமானது. நிகழ்ச்சிக்கு வந்த போது அந்தப் பெண்ணுக்கு சட்டவிரோதமாக இன்னொருவரின் கணவருடன் குடும்பம் நடத்துவது தவறு என அறிவுரை வழங்கினேன். ஆனாலும் அவருடன் தான் வாழ்வேன் என அன்னபூரணி கூறினார். பெற்றோரைத் தவிர வேறு யார் காலிலும் விழாதீர்கள் என லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்         மக்களிடையே கலி முற்றியதால் அதை விரட்ட ஒரு ஒளியாக வந்துள்ளேன் எனக்கூறி  தான் செய்த விளம்பரங்களில் தமிழகத்தில் ஆதி_ பராசக்தி_  அம்மா உருவெடுத்துள்ளார். கடந்த 2020  ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலமான அன்னபூரணி 2021 ஆம் ஆண்டு ஆதிபராசக்தி அம்மா அன்னபூரணியாக அவதாரம்?  எடுத்துள்ளார். அவர்கள் கணவனை விட்டுப்  பிரிந்து தற்போது வேறு ஒரு பெண்ணின் கணவருடன் வாழ்ந்து வருகிறார். ஆதி பராசக்தி அம்மாவாக உருவெடுத்துள்ள காணொளிக் காட்சி சமீபத்திய சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக


இந்த நிலையில்தான் அன்னபூரணி அம்மா அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு நேற்று  தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி செங்கல்பட்டில் உள்ள  வாசுகி மஹால் மண்டபத்தில் நடைபெற இருந்த அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என மண்டப உரிமையாளருக்கு காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுத்த நிலையில். இது தொடர்பாக செய்தியாளர்கள் இந்த அருள்வாக்கு தொடர்பாக அன்னபூரணி தரப்பில் விசாரிக்கப் போன் செய்தால் அவர் மற்றும் அவரின் சீடர்கள் நிர்வாகிகள் போன் அனைத்தும் அனைத்து வைக்கப்பட்டது. இதனால் அவர் தலைமறைவாகிவிட்டாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. காவல்துறையினர் தரப்பில் விசாரித்ததில், அவரைத் தேடி வருகிறோம். விரைவில் அவரிடம் விசாரணை நடத்துவோம். தேவைப்பட்டால் நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளனர். அதில், இங்கே நிறைய பேர் புரளிகளைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. நான் இங்கு தான் இருப்பேன். ஆன்மிகம் என்பது சொன்னால் புரியக் கூடிய விஷயம் இல்லை. 2009 ஆம் ஆண்டு எனது கணவர்? அரசுவுடன் திருமணம் நடைபெற்றது. 2013 ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வந்தேன்.நான் சொல்ல வருவதை சாதாரண மக்களுக்கு புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லை என்றார். அப்போது ஆன்மீக வாழ்விற்கு முந்தைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நெறியாளர் அந்த நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பினார். அதற்கு கொந்தளித்த அன்னபூரணி, கோபமடைந்து என்னை சாதாரணமாக நினைத்துவிட்டீர்கள். இல்லை என்னை பற்றி உங்களுக்குப் புரியவில்லை என கோபமாக கத்தியதில் அவருக்கு மூச்சு வாங்கியது.பின்னர் தண்ணீரைக் குடித்த அன்னபூரணி (அரசு) பேட்டியைத் தொடர்ந்தார். அவர் மேலும் கூறுகையில் நான் எந்தத் தவறையும் செய்யவில்லை. என் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. என்னைப் பற்றி நிறைய வதந்திகள் பரவுகின்றன. இந்த முகவரியைக் கொடுத்து காவல்துறையினருக்குப் போன் செய்யுங்கள் என்றார்.ஜனவரி 1 ஆம் தேதி செங்கல்பட்டில் ஒரு தனியார் மண்டபத்தில் அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அனுமதியின்றி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக அன்னபூரணி அரசு  மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த பின்னர் பிஹைண்ட்வுட்ஸ் காணொளிகாட்சி நிறுவனத்திற்காக அன்னபூரணி (அரசு)  பேட்டி அளித்திருந்தார். இந்த போலி வேடதாரிகள் உருவாக யார் மூல கர்த்தா வினா விடை காணும் முன்.கண்ணீரும்,கம்பளையுமாக தான் அலைந்து நியாயம் கேட்டு வந்த பெண்மணி காலில் விழும் மக்களின் முன் நாம் கூறும் பதில் பராசக்தி திரைப்படம்  கூறும் வசனம் தான்...

. எப்போது பேசினார் பராசக்தி...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...