முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உனக்கு அநீதி இழைக்கப்படும் போது கடவுளிடம் முறையிடாதே, நீயே கடவுளாக மாறு. இதுவே .அன்னபூரணி (அரசு) க்கு சொல்லிக் கொடுத்தவர்களின் தாரக மந்திரம்

என்னமா? இப்படிப் பண்றீங்களேம்மா!    உனக்கு அநீதி இழைக்கப்படும் போது கடவுளிடம் முறையிடாதே, நீயே கடவுளாக மாறு. இதுவே .அன்னபூரணி (அரசு) க்கு சொல்லிக் கொடுத்தவர்களின் தாரக மந்திரம்


அம்மாவென்றும் பூரணி என்றும் கூறும் ஆன்ட்டிகளையெல்லாம் சாமியாரென ஏற்றுக் கொள்ள மக்கள் மனதில் உள்ள அவ்வளவு பாதிப்புகள். அது தீராதா எனும் ஆதங்கம் தான்.

நியாயம்னு ஒன்னு இருக்கு  ஆண் சாமியார் பங்காரு அடிகளாரை அம்மானு சொல்கிற மக்கள் வாழ்கிற சமூகத்தில் இந்த அடுத்த ஆண்கள் தொடர்பான ஆன்ட்டியை!  அதாவது பூரணியைக் கொண்டாடுவதில் என்ன தவறு.? எனக் கேட்பவர்கள் உண்டு.  நடிகை குஷ்புவுக்கு கோவில் கட்டிய  மக்கள் தானே ?      அண்ணபூரனி ஆன்ட்டி சாமியார் ஆனதும் இப்படித்தான்..?. நித்தியை விட இந்தச் சித்தியானவர் அவசர கதியில் புகழ்?ஆயிட்டாங்க போல! இது மருவத்தூருக்கு ஆண் அம்மாவுக்கு வந்த சோதனையா என்ற வினா எழுகிறது. எங்கிருந்தோ ஒரு தேவ கானம் இப்போது கேட்கிறது வேதனை வேதனை.! உடனே எங்கிருந்து வந்தது இந்த சுருட்டிகளும்,செஞ்சுருட்டிளும்..


அம்மாவின் திவ்ய தரிசனம் தரிசன நாள்: 01-01-22 - சனிக்கிழமை  தரிசன நேரம் : காலை 9.00 மணி முதல்  தரிசன இடம் : வாசுகி மஹால் , 228, நேரு நகர், வல்லம், செங்கல்பட்டு

PH :....../........!

(தரிசனத்திற்கு அனுமதி இலவசம்).   இப்படி விளம்பரங்கள் செய்ய இவர் யார் மூல கர்த்தா யார்? .               


                         இயற்கை மனிதனைப் படைத்தது. 

மனிதன் தனக்கு தோன்றியதையெல்லம் படைத்தான், பணத்தையும் மதங்களையும் சேர்த்து. 

மதங்கள் கடவுளைப் படைத்தன.

மனிதனை மரணம் என இயற்கை திரும்ப அழைக்கிறது..



மனிதன் படைத்த எதுவுமே அவனைக் காப்பாற்றி இந்த பூமியில் நிரந்தரமாக தங்க வைக்க முடியவில்லை.

இந்த உலகின் மனித குலத்தில் மிக நீண்ட நெடிய போரும், மிகச்சிறிய அக்கப்போரும் ஒரு  ஆணுக்கும் பெண்ணுக்குமிடையேதான் நடைபெறுகின்றன. இதுமட்டுமே உண்மை சிலர் ஆன்மீகம் பேசி திரைப் பாடல் வரிகளில்         





                                        "சத்தியம் தவறாத

உத்தமர் போலவே நடிக்கிறார்.

சமயம் பார்த்து பல வகையிலும்

கொள்ளை அடிக்கிறார்.

பக்தனை போலவே

பகல் வேஷம் காட்டி

பாமர மக்களை

வலையினில் மாட்டி

இன்னும் எத்தனை காலம்தான்

ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!

சொந்த நாட்டிலே! நம் நாட்டிலே...."




எனப் பாடும் வரிகளில் அர்த்தம் தெரிகிறது. ஏற்கனவே திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகளுக்குத் தந்தையான அரசு என்ற நபருக்கும் அன்னபூரணிக்கும் பழக்கம் ஏற்பட்டு லிவிங் டூ கெதராக  வாழ்ந்து வந்துள்ளனர். இது தெரிந்த அரசின் மனைவியும் அவரது குடும்பம் அன்னபூரணியை அடித்துத் தாக்கி விரட்டிய நிலையில்.






எதிர்ப்புத் தெரிவித்த அரசு, வாழ்ந்தால் அன்னபூரணியுடன் தான் வாழ்வேன் என்றும், முதல் மனைவியை விவாகரத்து செய்துகொள்கிறேன் என்று கூறவே, இந்த விவகாரம் வெளிவந்த பிறகு ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய லட்சுமி ராமகிருஷ்ணன் பங்களிப்பு  நடத்திய  'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சிக்கு வரவைத்து நேரடி ஒளிபரப்பு. அந்த எப்பிசோடும் வைரலானது. பின்னர் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு அன்னபூரணி ஆன்மிகத்திலிறங்கி அவரது பக்தர்களின் மனதில் ஆதிபராசக்தியாக மாற்றமாகி குடியேறிவிட்டார். நான் கடவுளின் அவதாரம் எனச் சொல்லிக் கொண்டு வருபவர்களை மக்கள் நம்பக் கூடாது. சிந்தித்து கண் விழித்துக் கொள்ள வேண்டும். அதுதான் முக்கியமானது. நிகழ்ச்சிக்கு வந்த போது அந்தப் பெண்ணுக்கு சட்டவிரோதமாக இன்னொருவரின் கணவருடன் குடும்பம் நடத்துவது தவறு என அறிவுரை வழங்கினேன். ஆனாலும் அவருடன் தான் வாழ்வேன் என அன்னபூரணி கூறினார். பெற்றோரைத் தவிர வேறு யார் காலிலும் விழாதீர்கள் என லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்         மக்களிடையே கலி முற்றியதால் அதை விரட்ட ஒரு ஒளியாக வந்துள்ளேன் எனக்கூறி  தான் செய்த விளம்பரங்களில் தமிழகத்தில் ஆதி_ பராசக்தி_  அம்மா உருவெடுத்துள்ளார். கடந்த 2020  ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலமான அன்னபூரணி 2021 ஆம் ஆண்டு ஆதிபராசக்தி அம்மா அன்னபூரணியாக அவதாரம்?  எடுத்துள்ளார். அவர்கள் கணவனை விட்டுப்  பிரிந்து தற்போது வேறு ஒரு பெண்ணின் கணவருடன் வாழ்ந்து வருகிறார். ஆதி பராசக்தி அம்மாவாக உருவெடுத்துள்ள காணொளிக் காட்சி சமீபத்திய சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக


இந்த நிலையில்தான் அன்னபூரணி அம்மா அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு நேற்று  தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி செங்கல்பட்டில் உள்ள  வாசுகி மஹால் மண்டபத்தில் நடைபெற இருந்த அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என மண்டப உரிமையாளருக்கு காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுத்த நிலையில். இது தொடர்பாக செய்தியாளர்கள் இந்த அருள்வாக்கு தொடர்பாக அன்னபூரணி தரப்பில் விசாரிக்கப் போன் செய்தால் அவர் மற்றும் அவரின் சீடர்கள் நிர்வாகிகள் போன் அனைத்தும் அனைத்து வைக்கப்பட்டது. இதனால் அவர் தலைமறைவாகிவிட்டாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. காவல்துறையினர் தரப்பில் விசாரித்ததில், அவரைத் தேடி வருகிறோம். விரைவில் அவரிடம் விசாரணை நடத்துவோம். தேவைப்பட்டால் நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளனர். அதில், இங்கே நிறைய பேர் புரளிகளைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. நான் இங்கு தான் இருப்பேன். ஆன்மிகம் என்பது சொன்னால் புரியக் கூடிய விஷயம் இல்லை. 2009 ஆம் ஆண்டு எனது கணவர்? அரசுவுடன் திருமணம் நடைபெற்றது. 2013 ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வந்தேன்.நான் சொல்ல வருவதை சாதாரண மக்களுக்கு புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லை என்றார். அப்போது ஆன்மீக வாழ்விற்கு முந்தைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நெறியாளர் அந்த நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பினார். அதற்கு கொந்தளித்த அன்னபூரணி, கோபமடைந்து என்னை சாதாரணமாக நினைத்துவிட்டீர்கள். இல்லை என்னை பற்றி உங்களுக்குப் புரியவில்லை என கோபமாக கத்தியதில் அவருக்கு மூச்சு வாங்கியது.பின்னர் தண்ணீரைக் குடித்த அன்னபூரணி (அரசு) பேட்டியைத் தொடர்ந்தார். அவர் மேலும் கூறுகையில் நான் எந்தத் தவறையும் செய்யவில்லை. என் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. என்னைப் பற்றி நிறைய வதந்திகள் பரவுகின்றன. இந்த முகவரியைக் கொடுத்து காவல்துறையினருக்குப் போன் செய்யுங்கள் என்றார்.ஜனவரி 1 ஆம் தேதி செங்கல்பட்டில் ஒரு தனியார் மண்டபத்தில் அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அனுமதியின்றி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக அன்னபூரணி அரசு  மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த பின்னர் பிஹைண்ட்வுட்ஸ் காணொளிகாட்சி நிறுவனத்திற்காக அன்னபூரணி (அரசு)  பேட்டி அளித்திருந்தார். இந்த போலி வேடதாரிகள் உருவாக யார் மூல கர்த்தா வினா விடை காணும் முன்.கண்ணீரும்,கம்பளையுமாக தான் அலைந்து நியாயம் கேட்டு வந்த பெண்மணி காலில் விழும் மக்களின் முன் நாம் கூறும் பதில் பராசக்தி திரைப்படம்  கூறும் வசனம் தான்...

. எப்போது பேசினார் பராசக்தி...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.