கல் யானைக்குக் கரும்பு தந்த படலம் என்பது பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணம்
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 21-ஆவது படலமாகும். (செய்யுள் பத்திகள்: 1357-முதல் 1385 வரை) இப்படலம் எல்லாம் வல்ல சித்தரான படலம் என்பதன் தொடர்ச்சியாகும். தை மாதம் முதல் தினம் பொங்கல் பண்டிகை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்த மன்னர் அபிஷேகப் பாண்டியன். இறைவனை வணங்கி
கோவிலை வலம் வரும் போது சித்தர் வழியிலிருந்தார். "நீ யார்? என்று கேட்ட பாண்டியனுக்குத் தம்மை பற்றிய பெருமைகளைக் கூறிய படி சித்தர் சிரிக்க பாண்டியன். தற்பெருமை என்று கருதி. அங்கு வேளாளர் ஒருவன் செழித்து வளர்ந்த கரும்புக் கட்டு ஒன்றைக் கொண்டு வந்து மன்னரிடம் தந்து வணங்க. அதைப் பெற்ற அரசன் சித்தரைச் சோதிக்க நினைத்து சித்தரே
இந்தக் கரும்பை இங்குள்ள கல் யானை உண்ணுமாறு செய்வீரா? என்று கேட்க. இதோ என்று கூறிய சித்தர் அங்கிருந்த கல்லில் செதுக்கிய யானையின் சிற்பத்தை நோக்கினார். நோக்கிய கணமே. கல் யானை அசைந்தது. பிளிறியது. துதிக்கையை நீட்டியது. அரசனிடமிருந்த கரும்பைப் பற்றி வாயில் இட்டுச் சாறு வழிய உண்டது. சித்தர் மீண்டும் கல் யானையின் மீது கடைக்கண் பார்வையைச் செலுத்தினார். யானை துதிக்கையால் அரசரின் கழுத்தில் இருந்த முத்து மாலையைப் பற்றி இழுத்து வாயில் போட்டுக் கொண்டது. கோபம் கொண்ட அரசரின் மெய்க்காவலர் சித்தரை அடிக்கக் கை ஓங்கினார். நில்! என்று குரல் கொடுத்தார் சித்தர். காவலர் நின்றனர் சிலைகளாய்!
பாண்டியன் அறியாமை நீங்கியவனாய் சித்தராக தோன்றும் சிவனடி பனிந்து மன்னிப்பு வேண்டினான். வேண்டும் வரம் கேள்! என்றார் சித்தர். புத்திர பாக்கியம் வேண்டினார் மன்னர். சித்தர் அருளினார். யானையின் மீது கை வைத்தார். உடனே யானை தன் விழுங்கிய முத்து மாலையை கக்கி துதிக்கையால் பாண்டியனிடம் நீட்டியது. அவன் அதைப் பெற்றதும் யானை கற் சிலையாய் மாறிற்று. சித்தரும் மறைந்தார். இறைவனின் திருவிளையாடலை உணர்ந்த மன்னர். பின் சித்தரின் அருளால் பாண்டியனுக்கு மகன் பிறந்த வரலாறு புராணம் கூறுகிறது. குழந்தைக்கு விக்கிரமன் எனப் பெயரிட்டு வளர்த்து பருவத்தில் முடி சூட்டி இறைவன் திருவடியில் இரண்டறக் கலந்தான்.
இறைவன் அபிசேகப் பாண்டியனுக்கு முக்தி அளிக்க எண்ணி மதுரைக்கு எல்லாம் வல்ல சித்தராக உருமாறி வந்தார். மக்களுக்கு அவர் செய்யும் சித்துகளைக் கேள்வியுற்ற மன்னன் சித்தரை அழைத்துவர மந்திரிமார்களை அனுப்பினார். ஆனால் அரசனே தன்னை வந்து காண வேண்டும் என்று சித்தர் மந்திரிகளை திருப்பி அனுப்பிவிட்டார்.
மந்திரிகள் வந்து சித்தர் கூறியதை தெரிவித்தும், அரசனே சித்தரைக் காண சென்றார். அங்கு கூடியிருந்த மக்கள் அரசனுக்கு வணக்கத்தினைத் தெரிவித்து விலகி நின்றனர். அரசன் ஏன் சித்துகளை மதுரையில் வாழும் மக்களிடம் செய்து காட்டுகின்றார்கள். தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். அதற்கு சித்தர், தான் காசியிலிருந்து வருவதாகவும், தனக்கு ஒன்றும் தேவையில்லை என்றும், வேண்டுமானால் அரசன் வேண்டுவதைக் கேட்டுப் பெறலாம் என்றும் கூறினார்.
அரசன் சித்தரைச் சோதிக்க அருகில் கரும்பு வைத்திருந்த ஒருவரிடம் வாங்கி, இக்கரும்பினை இந்திர விமானத்தை தாங்கும் கல்யானை உண்ணும் படி செய்ய வேண்டும் என்றார். அதனை ஏற்ற சித்தர் கல்யானையை பார்க்க அக்கல்யானைக்கு உயிர்வந்து மன்னன் தந்த கரும்பினை தின்றது. அது இந்த தைத்திருநாளில் நடந்த நிகழ்வு இந்த நிகழ்வு நமக்கு பல ஆண்டுகள் நினைவூட்டல் செய்கிறது ஆண்டு தோறும் நாம் கரும்பு வழங்கும் திருப்புத்தூர் திருத்தளிநாதர் ஆலயத்தில் யானை சிவகாமி கடந்த ஆண்டு காலமான நிலையில் நம் கண்களுக்கு கரும்புக்கட்டுடன் மன்னார்குடி இராஜகோபால சுவாமி ஆலய யானை செங்கமலம் காட்சி தரும் நிகழ்வு பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தை எழுதியவரது தந்தை மீனாட்சி சுந்தர தேசிகர் எனத் தெரிகிறது. பரஞ்சோதி முனிவர் என நான்கு முனிவர்கள் இருந்துள்ளனர். திருவிளையாடல் புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர் வேதாரணியம் எனப்படும் திருமறைக்காட்டில் பிறந்தவர். தந்தையே குருவாக இருந்து, மகனுக்கு சைவ சித்தாந்த கருத்துக்களைப் பயிற்றுவித்தார். திருமறைக்காட்டில் கோவில் கொண்டுள்ள சிவனைத் துதித்து வந்த பரஞ்சோதி முனிவர், தமிழகத்திலுள்ள பிறகோவில்களையும் பார்க்க ஆவல் கொண்டு மதுரைக்கு வந்தவர், மண்டபம் ஒன்றில் தங்கியிருந்த போது, அவரது கனவில் தோன்றிய மீனாட்சியம்மன், அந்நகரில் சிவன் நிகழ்த்திய திருவிளையாடல்களை அழகு தமிழில் பாடும்படி உத்தரவிட்டதற்கிணங்கி பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தை எழுதினார். திருவிளையாடற் கதைகள் சிலப்பதிகாரம் முதற்கொண்டு கூறப்பட்டு வந்தாலும் பரஞ்சோதி முனிவர் இயற்றிய புராணமே விரிவும் சிறப்பும் கொண்டது.இவர் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சிவ பக்தியில் சிறந்து விளங்கியவர்களுள் ஒருவராக வாழ்ந்தவர்.இவர் திருமறைக்கட்டுக்கு வடமேற்க்கே புன்னையகாணல் என்ற இடத்தில் இயற்கை எய்தினார்.
கருத்துகள்