முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரைப்படத் தொழிலுக்கு உதவக் கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்: மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலாளர் அபூர்வ சந்திரா

 

திரைப்படத் தொழிலுக்கு உதவக் கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்: மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலாளர் அபூர்வ சந்திரா
திரைப்படத் தொழிலுக்கு உதவக்கூடிய அனைத்துநடவடிக்கைகளையும் மத்திய அரசுமேற்கொள்ளும் என மத்தியதகவல் ஒலிபரப்புத் துறைசெயலாளர் அபூர்வ சந்திரா தெரிவித்துள்ளார். ஒளிப்பதிவுச் சட்டம்-1952-ல் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் மற்றும் திரைப்படத்துறை சார்ந்த பிற பிரச்சனைகள் குறித்து திரைப்படத்துறை சங்கங்களின் பிரதிநிதிகளுடன்  காணொலி வாயிலாக அவர் உரையாற்றினார். சென்னையில் நடைபெற்ற  இந்தக் கூட்டத்தில் தென்னிந்திய திரைப்படத் துறை சார்ந்த பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய அவர், திரைப்படத்துறை செழித்து விளங்குவதை உறுதி செய்யவும், இந்திய திரைப்படங்கள், சர்வதேச அளவில் சென்றடைவதை உறுதி செய்யவும் இதுபோன்ற கலந்துரையாடல்களை தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நடத்தி வருவதாக கூறினார்.

திரைப்படத்துறையின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் ஒரு பகுதியாக திரைப்படத்துறை சார்ந்த பல்வேறு பிரிவுகளை தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துடன் ஏற்கனவே இணைத்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒளிப்பட சட்டத்திருத்த வரைவு மசோதாவில் இடம் பெற உள்ள அம்சங்கள் மற்றும் திருட்டு வீடியோ பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான அம்சங்களுக்கு, திரைப்படத்துறையைச் சார்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தி தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி நீர்ஜா சேகர், தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மேற்கொண்டு வரும் பல்வேறு முன் முயற்சிகள்  குறித்து திரைப்படத்துறையினருடன் விவாதித்தார். மேலும் வெளிநாட்டுத் திரைப்படங்களை இந்தியாவில் படம் பிடிப்பதற்கான ஊக்கத்தொகை மற்றும் சர்வதேச ஊடக & பொழுதுபோக்கு மாநாட்டிற்கு ஏற்பாடு செய்வது உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் எடுத்துரைத்தார்.

மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கல்கள், திரை அடர்த்தி விவகாரங்கள், விலங்குகள் நல வாரியத்தின் அனுமதி மற்றும் படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களுக்கு அனுமதி பெறுவதில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் இந்த கலந்துரையாடலின் போது விவாதிக்கப்பட்டது.

 தென்னிந்திய திரைப்பட தொழில்துறையைச் சேர்ந்த சுமார் 50 பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவர் திரு பிரசூன் ஜோஷி, தலைமைச் செயல் அதிகாரி திரு ரவீந்தர் பாக்கர், தேசிய திரைப்பட ஆவண காப்பகத்தின் இயக்குனர் திரு பிரகாஷ் மகதம், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இயக்குனர் (திரைப்படங்கள்) திருமதி தன்ப்ரீத் கவுர் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...