முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜி எஸ் டி அனைத்து வரி விகித மாற்றங்களும் ஜூலை 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவது நடுத்தர மக்களை பாதிக்கும்

நிதி அமைச்சகம் 47-வது சரக்கு மற்றும் சேவைவரி குழும கூட்டம் பரிந்துரை செய்துள்ள அனைத்து வரி விகித மாற்றங்களும் ஜூலை 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.

 47-வது சரக்கு மற்றும் சேவை வரி குழும கூட்டம் மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் இன்று நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சௌத்ரி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை மாற்றியமைப்பதற்கு பரிந்துரைக்கப் பட்டது. அதன்படி, அச்சு மற்றும் எழுது பொருளுக்கான மை, வெட்டுபலகையுடன் கூடிய கத்தி, பென்சில், ஷார்ப்னர், பிளேடு, கரண்டி, கேக் வெட்டும் கத்தி, ஆழமான குழாய்-கிணறு ஆழ்துளை கிணற்றினுள் வைக்கும் பம்புகள், தண்ணீர் பம்புகள், சைக்கிள் பம்புகள், தூய்மைபடுத்தும் இயந்திரங்கள்


முட்டைகளை வரிசைப்படுத்துவதற்கான இயந்திரங்கள், பழங்கள் அல்லது பிற விவசாயப் பொருட்கள் மற்றும் அதன் பாகங்கள் பால் கறக்கும் இயந்திரங்கள் மற்றும் பால் இயந்திரங்களை சுத்தம் செய்வதற்கான இயந்திரங்கள், எல்இடி விளக்குகள், விளக்குகள் மற்றும் சாதனங்கள், அவற்றின் உலோக அச்சிடப்பட்ட சர்க்யூட் பலகை; வரைதல் மற்றும் குறிப்பதற்கான கருவிகள் ஆகியவற்றுக்கான சரக்கு மற்றும் சேவை வரி  12%-லிருந்து 18%- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

விதைகள், தானியங்கள் ஆகியவற்றை தூய்மைபடுத்தும் இயந்திரங்கள், தரம் பிரிப்பதற்கான இயந்திரங்கள்,  அரைக்கும் தொழிலில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், மாவு அரைக்கும் இயந்திரங்கள் (கிரைண்டர்கள்), சூரிய சக்தியால் இயங்கும் வாட்டர் ஹீட்டர்,  தயாரித்து முடிக்கப்பட்ட தோல்கள் பொருட்கள் ஆகிய பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 சேவை துறையை பொறுத்தவரை தோல் பதப்படுத்துதல் தொடர்பான வேலை, தோல் பொருட்கள் மற்றும் காலணி உற்பத்தி தொடர்பான வேலை, களிமண் செங்கல் உற்பத்தி தொடர்பான வேலை, மத்திய மற்றும் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு முக்கியமாக நிலவேலைகள் மற்றும் அதன் துணை ஒப்பந்தங்களை உள்ளடக்கிய பணி ஒப்பந்தங்கள் ஆகியவற்றுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  

சாலைகள், பாலங்கள், ரயில்வே, மெட்ரோ, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சுடுகாடு போன்றவற்றுக்கான பணி ஒப்பந்தம்.

மத்திய மற்றும் மாநில அரசுகள், வரலாற்று நினைவுச்சின்னங்கள், கால்வாய்கள், அணைகள், பைப்லைன்கள், நீர் விநியோகத்திற்கான ஆலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றுக்கான உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அதன் துணை ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஒப்பந்தம் ஆகிய பணிகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதத்தில் இருந்து  18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 எலும்பியல் சாதனம்- பிளவுகள் மற்றும் பிற எலும்பு முறிவு உபகரணங்கள், உடலின் செயற்கை பாகங்கள், குறைபாடு அல்லது இயலாமைக்கு ஈடுசெய்ய, அணிந்திருக்கும் அல்லது எடுத்துச் செல்லப்படும் அல்லது உடலில் பொருத்தப்படும் பிற உபகரணங்கள், உள்விழி லென்ஸ் ஆகியவற்றுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரிப்பு

சென்னை தெற்கு சரக்கு மற்றும் சேவை வரி (GST) ஆணையரகம், 2021-22 நிதியாண்டில் ரூ.5,412 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.  இது 2020-21 நிதியாண்டுடன் (ரூ.4321.47 கோடி) ஒப்பிடுகையில் ரூ.1,091 கோடி, அதாவது 25.24% அதிகமாகும்.

சரக்கு மற்றும் சேவை வரி ஆணையரகத்தின் தமிழ்நாடு மண்டலத்தின் 2021-22 வருவாயான ரூ. 41,090 கோடியில், சென்னை தெற்கு ஜிஎஸ்டி ஆணையரகத்தின் பங்களிப்பு 13.17% (ரூ.5,412 கோடி) ஆகும்.     

நடப்பு நிதியாண்டான 2022-23-ல் மே 2022 வரை சென்னை தெற்கு ஜிஎஸ்டி ஆணையரகம் ரூ.1626.49 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.  இது கடந்த நிதியாண்டின் இதே கால கட்டத்தைவிட ரூ.531.72 கோடி அதாவது, 48.56% அதிகமாகும்.

உரிய நேரத்தில் ஜிஎஸ்டி பதிவு, குறித்த நேரத்தில் திருப்பி வழங்குதல், பல்க் எஸ்எம்எஸ், மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகள், குறைதீர்ப்பு அமர்வுகள் குறிப்பாக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பெண் தொழில் முனைவோருக்கு சிறப்பு கவனம் செலுத்துவதன் வாயிலாக வரி செலுத்துவோருக்கு இந்த ஆணையரகம் பல்வேறு சேவைகளை வழங்கி வருவதாக சென்னை தெற்கு மண்டல ஜிஎஸ்டி இணை ஆணையர் திருமதி டி.ஜெயப்பிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொது நீதி யாதெனில் பூவுக்கும் நூலுக்கு , பூஜை பொருள்களுக்கு வரி விலக்கு எழுதும் பென்சிலுக்கும், அழிக்கும் இரப்பருக்கும் வரி விதிப்பு நமக்கு பாதிப்புகள் இப்போது தான் புரிகிறது சாமானிய மக்களுக்கு வரும் பாதிப்புகள் ஊழல்வாதிகளை விரைந்து தண்டிக்கும் லோக் ஆயுக்தா சட்டத் சீர்திருத்தம் இன்னும் வரவில்லை. வரி செலுத்தும் மக்களுக்கு அரசு ஊழியர்கள் தொல்லை இல்லாமல் மக்களுக்கு இலஞ்சம் இல்லாமல் அரசாங்கச் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குரல் ஒலித்து வருகின்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.