முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சீனியர் கௌன்சிலும் ஆறு சீக்ரெட் பாயின்ட்களும் அதிமுக பொதுக்குழு விடை நீதிமன்றத்தில்

சீனியர் கௌன்சிலும் ஆறு சீக்ரெட் பாயின்ட்களும் !


சட்டம் தெரியாத எடப்பாடி கே.பழனிச்சாமியும் தொண்டர்கள் பலமில்லாத ஓ.பன்னீர்சொல்வமும்  ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடந்த அஇஅதிமுக பொதுக்குழுவில் சட்ட விதிகள் மீறப்பட்டதாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு படி அவமதிப்பு வழக்கும் மற்றும் உச்சநீதிமன்றத்தில் கேவியட்ர் மனுவும் எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பில் அதற்கு பதிலாக மேல்முறையீட்டு வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார்.

இது போக அவைக்குழு, பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளரை தவிர யாருக்கும் அதிகாரம் இல்லை என்று கூறி தேர்தல் ஆணையத்தில் உரிமை மசோதாவும் தாக்கல் செய்துள்ளார் ஓ பன்னீர்செல்வம். இது போக எடப்பாடி பழனிசாமி தரப்பு கடந்த வாரத்தில் வந்த உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டில் தன்னுடைய வாதத்தைக் கேட்காமல் தடையுத்தரவு எதுவும் வழங்கக்கூடாதென்று கேவியட் மனுவும் ஓ.பன்னீர்செல்வம்  தரப்பில் தாக்கல் செய்துள்ளார்


ஓ.பன்னீர்செல்வம் முறையாக சட்ட ஆலோசனைகளைப் பெற்று செயல்படுகிறார். இதன் உள் அர்த்தம் ஓ.பன்னீர்செல்வம் பெரிய சட்ட போராட்டத்திற்குத் தயாராகிவிட்டார் என்பதே.மற்றொரு பக்கம் எடப்பாடி கே.பழனிசாமி  10 மணி நேரத்திற்கு மேல் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். முதல் நாள் 5 மணி நேரமும், நேற்று 5 மணி நேரமும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதிலுள்ள சாதக மற்றும் பாதக நிலை ஓ.பன்னீர்செல்வம் அனுமதியில்லாமல் எப்படி பொதுக்குழுவைக் கூட்டுவது, எப்படி பொதுச்செயலாளர் மசோதாவைக் கொண்டு வருவது என்பது உள்ளிட்ட விதிகளை ஆலோசனை செய்துள்ளார்.


ஓ.பன்னீர்செல்வம் எந்த விதமான வழக்குகளைத் தொடுப்பார், அதை எப்படிச் சமாளிப்பது எனவும் ஆலோசனை செய்துள்ளார். உயர் நீதிமன்ற வழக்கில் கடைசி நேர்தத்தில் அஇஅதிமுகவின் ஒற்றைத் தலைமைத் தீர்மானத்திற்கு எதிராக தீர்ப்பு வந்தது. என்ன நடந்தாலும் வரைவு தீர்மானத்தை ஒருங்கிணைப்பாளரிடம் கொடுக்க வேண்டுமென்று உயர் நீதிமன்றம் கூறியது. இதுதான் தற்போது எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு முன்னால் இருக்கும் சட்ட சிக்கல். கடந்த முறை உயர் நீதிமன்றத்தில் வந்த இந்த தீர்ப்பால் தனது சட்ட ஆலோசனை குழுவிடம் எடப்பாடி கே.பழனிச்சாமி கோபமாக உள்ள தகவல் வருகிறது..   பொதுக்குழுவில் அவசரப்பட்டு எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பு 23 தீர்மானங்களையும் நிராகரித்ததனால் பொதுக்குழு உறுப்பினர்கள் நியமனத் தீர்மானமும் நிராகரிக்கப்பட்டது.


இதன் அர்த்தம் பொதுக்குழு காலாவதியாகி விட்டது. அதாவது சட்டப்படி பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் இல்லை.. அதனால் பொதுக்குழுவும் இல்லை. நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மட்டும் இந்தக் குறிப்பு  வைத்தால்.. ஜூலை மாதம் 11 ஆம் தேதி பொதுக்குழுவே கூட முடியாத நிலை ஏற்படும்.அவசரப்பட்டு அவைத்தலைவர் தேர்வு செய்தது. இந்தத் தீர்மானங்கள் 23 ல் ஒன்றாக இல்லாத நேரத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது நீதிமன்றத்தின் முழுமையாக அவமதிப்பாகும். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இந்தக் குறிப்பை வைத்து வழக்கும் தொடுத்துள்ளார்.

 எடப்பாடி கே.பழனிச்சாமி  தரப்பு உயர் நீதிமன்ற விதிகளை மதிக்காமல் இப்படிச் செயல்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம்  தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சின்ன தவறு எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு எதிராக வேறு விதமாகவும் திரும்பியுள்ளது. எடப்பாடி கே.பழனிச்சாமி, சிவி சண்முகம், டி.ஜெயக்குமார் உள்ளிட்ட ஆறு நபர்களின் பொதுக்குழுப் பதவிகளைப் பறிக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் அவமதிப்பு வழக்கில் குறிப்பிட்டுள்ளது. இதுவும் எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பிற்கு எதிராகியுள்ளது. ஒருங்கிணைப்பாளராக இருக்கும் போதே.. தலைமைக் கழக செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தலைமைக் கழகத்தின் கூட்டத்தைக் கூட்டியது எப்படி என்ற வினா எழுந்துள்ளது. இதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையம் சென்றுள்ளது. இதனால் கடந்த நாட்களில் நடந்த தலைமைக் கழகக் கூட்டத்திற்கும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

கடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றவே தடை விதிக்கப்பட்டது. ஆனால் வாக்கெடுப்பு நடத்தத் தடை இல்லை. இதனால் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்கெடுப்பு நடத்தி அதை நீதிமன்றத்தில் காட்டி தீர்மானத்திற்கு அனுமதி பெற்றிருக்கலாம். ஆனால் எடப்பாடி கே.பழனிச்சாமி அந்த நல்ல வாய்ப்பை நழுவவிட்டுவிட்டார்.   ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் போது.. எப்படி அவைத்தலைவர் பொதுக்குழுவை கூட்ட முடியும். என்ன அதிகாரம் உள்ளது. ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாகிவிட்டால். கூடவே பொதுக்குழுவில்  பதவியும் காலியாகிறது என்று தானே அர்த்தம் (எல்லாம் ஒரே தீர்மானம் என்பதால்) .



ஜூலை மாதம் 11 ஆம் தேதி பொதுக்குழு நடக்குமென்ற அறிவிப்பே சட்ட ரீதியாகச் செல்லுபடியாகாத நிலையில்.   எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு கண்டிப்பாகத் தொண்டர்கள் ஆதரவு மட்டுமே இருக்கிறது.



ஆனால் அமைப்புச் சட்டம்  துணை விதிகள் மற்றும் நீதிமன்றத்தில் வழங்கிய உத்தரவு என அணைத்தும் என்னவோ ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் பக்கம் சாதகமான நிலையில் இருக்கிறது.



இதுவே தற்போதைய நிலையில் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு. பணம் செலவு செய்தாலும்



ஓத்தைத் தலை பதவி பெறுவது என்பது நடக்குமா என்பதே நமது எழுவினா அதை வரும் நாட்களில் உணரலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...