முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சீனியர் கௌன்சிலும் ஆறு சீக்ரெட் பாயின்ட்களும் அதிமுக பொதுக்குழு விடை நீதிமன்றத்தில்

சீனியர் கௌன்சிலும் ஆறு சீக்ரெட் பாயின்ட்களும் !


சட்டம் தெரியாத எடப்பாடி கே.பழனிச்சாமியும் தொண்டர்கள் பலமில்லாத ஓ.பன்னீர்சொல்வமும்  ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடந்த அஇஅதிமுக பொதுக்குழுவில் சட்ட விதிகள் மீறப்பட்டதாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு படி அவமதிப்பு வழக்கும் மற்றும் உச்சநீதிமன்றத்தில் கேவியட்ர் மனுவும் எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பில் அதற்கு பதிலாக மேல்முறையீட்டு வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார்.

இது போக அவைக்குழு, பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளரை தவிர யாருக்கும் அதிகாரம் இல்லை என்று கூறி தேர்தல் ஆணையத்தில் உரிமை மசோதாவும் தாக்கல் செய்துள்ளார் ஓ பன்னீர்செல்வம். இது போக எடப்பாடி பழனிசாமி தரப்பு கடந்த வாரத்தில் வந்த உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டில் தன்னுடைய வாதத்தைக் கேட்காமல் தடையுத்தரவு எதுவும் வழங்கக்கூடாதென்று கேவியட் மனுவும் ஓ.பன்னீர்செல்வம்  தரப்பில் தாக்கல் செய்துள்ளார்


ஓ.பன்னீர்செல்வம் முறையாக சட்ட ஆலோசனைகளைப் பெற்று செயல்படுகிறார். இதன் உள் அர்த்தம் ஓ.பன்னீர்செல்வம் பெரிய சட்ட போராட்டத்திற்குத் தயாராகிவிட்டார் என்பதே.மற்றொரு பக்கம் எடப்பாடி கே.பழனிசாமி  10 மணி நேரத்திற்கு மேல் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். முதல் நாள் 5 மணி நேரமும், நேற்று 5 மணி நேரமும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதிலுள்ள சாதக மற்றும் பாதக நிலை ஓ.பன்னீர்செல்வம் அனுமதியில்லாமல் எப்படி பொதுக்குழுவைக் கூட்டுவது, எப்படி பொதுச்செயலாளர் மசோதாவைக் கொண்டு வருவது என்பது உள்ளிட்ட விதிகளை ஆலோசனை செய்துள்ளார்.


ஓ.பன்னீர்செல்வம் எந்த விதமான வழக்குகளைத் தொடுப்பார், அதை எப்படிச் சமாளிப்பது எனவும் ஆலோசனை செய்துள்ளார். உயர் நீதிமன்ற வழக்கில் கடைசி நேர்தத்தில் அஇஅதிமுகவின் ஒற்றைத் தலைமைத் தீர்மானத்திற்கு எதிராக தீர்ப்பு வந்தது. என்ன நடந்தாலும் வரைவு தீர்மானத்தை ஒருங்கிணைப்பாளரிடம் கொடுக்க வேண்டுமென்று உயர் நீதிமன்றம் கூறியது. இதுதான் தற்போது எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு முன்னால் இருக்கும் சட்ட சிக்கல். கடந்த முறை உயர் நீதிமன்றத்தில் வந்த இந்த தீர்ப்பால் தனது சட்ட ஆலோசனை குழுவிடம் எடப்பாடி கே.பழனிச்சாமி கோபமாக உள்ள தகவல் வருகிறது..   பொதுக்குழுவில் அவசரப்பட்டு எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பு 23 தீர்மானங்களையும் நிராகரித்ததனால் பொதுக்குழு உறுப்பினர்கள் நியமனத் தீர்மானமும் நிராகரிக்கப்பட்டது.


இதன் அர்த்தம் பொதுக்குழு காலாவதியாகி விட்டது. அதாவது சட்டப்படி பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் இல்லை.. அதனால் பொதுக்குழுவும் இல்லை. நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மட்டும் இந்தக் குறிப்பு  வைத்தால்.. ஜூலை மாதம் 11 ஆம் தேதி பொதுக்குழுவே கூட முடியாத நிலை ஏற்படும்.அவசரப்பட்டு அவைத்தலைவர் தேர்வு செய்தது. இந்தத் தீர்மானங்கள் 23 ல் ஒன்றாக இல்லாத நேரத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது நீதிமன்றத்தின் முழுமையாக அவமதிப்பாகும். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இந்தக் குறிப்பை வைத்து வழக்கும் தொடுத்துள்ளார்.

 எடப்பாடி கே.பழனிச்சாமி  தரப்பு உயர் நீதிமன்ற விதிகளை மதிக்காமல் இப்படிச் செயல்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம்  தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சின்ன தவறு எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு எதிராக வேறு விதமாகவும் திரும்பியுள்ளது. எடப்பாடி கே.பழனிச்சாமி, சிவி சண்முகம், டி.ஜெயக்குமார் உள்ளிட்ட ஆறு நபர்களின் பொதுக்குழுப் பதவிகளைப் பறிக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் அவமதிப்பு வழக்கில் குறிப்பிட்டுள்ளது. இதுவும் எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பிற்கு எதிராகியுள்ளது. ஒருங்கிணைப்பாளராக இருக்கும் போதே.. தலைமைக் கழக செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தலைமைக் கழகத்தின் கூட்டத்தைக் கூட்டியது எப்படி என்ற வினா எழுந்துள்ளது. இதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையம் சென்றுள்ளது. இதனால் கடந்த நாட்களில் நடந்த தலைமைக் கழகக் கூட்டத்திற்கும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

கடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றவே தடை விதிக்கப்பட்டது. ஆனால் வாக்கெடுப்பு நடத்தத் தடை இல்லை. இதனால் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்கெடுப்பு நடத்தி அதை நீதிமன்றத்தில் காட்டி தீர்மானத்திற்கு அனுமதி பெற்றிருக்கலாம். ஆனால் எடப்பாடி கே.பழனிச்சாமி அந்த நல்ல வாய்ப்பை நழுவவிட்டுவிட்டார்.   ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் போது.. எப்படி அவைத்தலைவர் பொதுக்குழுவை கூட்ட முடியும். என்ன அதிகாரம் உள்ளது. ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாகிவிட்டால். கூடவே பொதுக்குழுவில்  பதவியும் காலியாகிறது என்று தானே அர்த்தம் (எல்லாம் ஒரே தீர்மானம் என்பதால்) .



ஜூலை மாதம் 11 ஆம் தேதி பொதுக்குழு நடக்குமென்ற அறிவிப்பே சட்ட ரீதியாகச் செல்லுபடியாகாத நிலையில்.   எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு கண்டிப்பாகத் தொண்டர்கள் ஆதரவு மட்டுமே இருக்கிறது.



ஆனால் அமைப்புச் சட்டம்  துணை விதிகள் மற்றும் நீதிமன்றத்தில் வழங்கிய உத்தரவு என அணைத்தும் என்னவோ ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் பக்கம் சாதகமான நிலையில் இருக்கிறது.



இதுவே தற்போதைய நிலையில் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு. பணம் செலவு செய்தாலும்



ஓத்தைத் தலை பதவி பெறுவது என்பது நடக்குமா என்பதே நமது எழுவினா அதை வரும் நாட்களில் உணரலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.