முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வேலூர் சர்வதேச பள்ளி (VIS) தொடக்க விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஆற்றிய உரை

வேலூர் சர்வதேச பள்ளி (VIS) தொடக்க விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஆற்றிய உரையின் சிறப்பு அம்சங்கள்

தமிழக குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் அவர்களே,

வி.ஐ.டி குழும கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஜி. விஸ்வநாதன் அவர்களே,

வேலூர் சர்வதேச பள்ளியின் தலைவர் மற்றும் வி.ஐ.டி துணைத்தலைவர் திரு. ஜி.வி.செல்வம் அவர்களே,

வி.ஐ.டி. துணைத் தலைவர்கள் திரு.சங்கர் விஸ்வநாதன், டாக்டர் சேகர் விஸ்வநாதன் அவர்களே,

சகோதரிகள் மற்றும் சகோதரர்களே,

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள வேலூர் சர்வதேச பள்ளியை திறந்துவைப்பதற்காக வந்திருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பறந்துவிரிந்த மற்றும் அமைதியான இந்த வளாகத்தை காணும்போது, பயில்வதற்கு உகந்த இடமாக தெரிகிறது, வி.ஐ.டி குழும கல்வி நிறுவனங்களின் கல்வி பயணத்தில் இதுபோன்ற முக்கிய மைல்கல்லை எட்டியிருப்பதற்காக இந்த நிர்வாகத்திற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆயிரம் கோவில்கள் அல்லது அன்ன சத்திரங்களை கட்டுவதைவிட ஒரு குழந்தைக்கு கல்வியறிவு புகட்டுவது மிகச்சிறந்தது என்ற மகாகவி பாரதியாரின் கவிதை வரிகளை நினைவுப்படுத்த விரும்புகிறேன். தனியார் துறையில் உயர்கல்வியை வலுப்படுத்த வி.ஐ.டி குழுமம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த கல்வி நிறுவனம் அவர்களது மகுடத்தில் மற்றுமொரு சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன்

சகோதரிகள் மற்றும் சகோதரர்களே

அறிவாற்றலின் பொக்கிஷமாகத் திகழும் இந்தியா, பண்டை காலத்திலிருந்தே கல்வியிலும் சிறப்புற்று விளங்குவதை நீங்கள் அறிவீர்கள்.  குருகுல முறையில், கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டதோடு, ஒரு தனிநபரின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்குத் தேவையான அறிவாற்றல் மற்றும் திறன்களை வழங்குவதிலும் கவனம் செலுத்தியது.  சரியாக சொல்ல வேண்டும் என்றால், தக்ச ஷீலா, புஷ்ப கிரி மற்றும் நாலந்தா போன்ற உலகத்தரம் வாய்ந்த சர்வதேச கல்வி நிறுவனங்களைக் கொண்டிருந்த இந்தியா, ஒரு காலத்தில் விஸ்வகுருவாக  கருதப்பட்டது. வெளிநாட்டு மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த மையங்களில் பல்வேறு பாடங்களை பயின்றனர்.  பண்டைக் காலத்திலிருந்தே அறிவியல், கணிதம், தத்துவம், மருத்துவம், வானவியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்தியா உலகிற்கு அளப்பரிய பங்காற்றியுள்ளது.


சகோதரிகள் மற்றும் சகோதரர்களே,

மாணவர்களிடையே கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை, புதிய கண்டுபிடிப்பு மற்றும் தலைசிறந்து விளங்குவதற்கான உணர்வை ஏற்படுத்த வேண்டும் என நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். தொழில்நுட்பம் சார்ந்த வேகமாக மாறிவரும் உலகில் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன.  அந்த வகையில், மாணவர்கள் எதையும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சிறந்தத் திறனை பள்ளிகளில் பயிற்றுவிக்க வேண்டும்.  மாணவர்கள் விரைவாக சிந்தித்து, சொந்தக் காலில் நிற்பதோடு, 21-ம் நூற்றாண்டின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, புதுமைகளை கண்டறிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

எதிர்காலத்திற்கு ஏற்ற மற்றும் புரிந்து படிப்பதற்கான கல்வித் திட்டத்தை வகுக்க வேண்டியது அவசியம்.  பாடத்திட்டம் மற்றும் பாடத்திட்டமல்லாதவற்றை செயற்கையாக தரம் பிரிக்கும் நடைமுறையை கைவிட்டு, கல்வியில் பன்னோக்கு கற்றலை ஊக்குவிக்க வேண்டும்.

பண்டைக்கால குருகுல முறையில், ஆசிரியர்கள் மாணவர்களுடன் நேரத்தை செலவிட்டு, அவர்களோடு இருந்ததுடன், அவர்களது நடத்தைகளை ஒழுங்குப்படுத்த அனுமதித்து, மாணவர்களை சரியாக மதிப்பிட முடிந்தது.  வேலூர் சர்வதேச பள்ளியில், குரு சிஷ்யா பரம்பரையின் ஆக்கப்பூர்வ அம்சங்களை  தற்கால கற்பித்தல் முறையோடு ஒருங்கிணைக்க, ‘வீட்டு பெற்றோர்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த முயற்சிப்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.   

சகோதரிகள் மற்றும் சகோதரர்களே,

பள்ளிக் கல்வியில் தாய்மொழியை பயன்படுத்துவதற்கும் நாம் உரிய கவனம் செலுத்த வேண்டும்.  எங்கெங்கு முடியுமோ, குறைந்தபட்சம் தொடக்க நிலை வரையிலாவது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தாய்மொழியிலேயே பயிற்றுவிக்க வேண்டும். 

மாணவர்கள் அவர்களது சமூக சூழல் – பள்ளி வளாகம், அனைத்து கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் வீடுகளில் தாய்மொழியிலேயே சுதந்திரமாகப் பேசுவதை நாம் ஊக்குவிக்க வேண்டும்.  தாய்மொழியில் சுதந்திரமாக பேசுவதோடு, அதனைப் பெருமையாகக் கருதினால் மட்டுமே, நமது கலாச்சார பாரம்பரியத்தை உண்மையிலேயே பாராட்ட முடியும்.

 நமது தாய்மொழி மீது கவனம் செலுத்துவது என்பது, ஒருவர் ஆங்கிலம் போன்ற பிற மொழிகளை கற்றுக்கொள்ளக் கூடாது என்பதற்காக அல்ல என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.  ஒருவர் தம்மால் எவ்வளவு முடியுமோ அத்தனை மொழிகளை கற்றாலும், தாய்மொழியில் வலுவான அடித்தளமிடுவது அவசியம் என்று நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். பல மொழிகளை பயில்வது குழந்தைகளிடையே மேம்பட்ட அறிவாற்றல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒருவர் தமது தாய்மொழியுடன், பிற மொழிகளிலும் புலமை பெற்றிருப்பது, கலாச்சார பிணைப்புகளை உருவாக்க உதவுவதோடு, புதிய உலக அனுபவங்களை அறிந்துகொள்ளவும் உதவும்.  

சகோதரிகள் மற்றும் சகோதரர்களே

மாணவர்களின் கல்வி மற்றும் பிற்காலத்தில் தொழில்சார்ந்த அறிவாற்றலை பெறுவதற்கு பள்ளிக் கல்வி மிகச்சிறந்த அடித்தளமிடும் என்பது முற்றிலும் சரியானதாகும். அதைவிட முக்கியமானது, ஒரு குழந்தை தனது வளரும் பருவத்தில் பள்ளியில் செலவிடுவது அவர்களது ஆளுமையை வடிவமைப்பதுடன், அவர்களது நடத்தையையும் ஒழுங்குப்படுத்துகிறது.  இது தனிப்படை அளவில் தனிநபரின் வெற்றியை தீர்மானிப்பதாக மட்டுமின்றி, முன்மாதிரி குடிமகனாக உருவாக்கி நாட்டை முன்னெடுத்துச் செல்லும்.

பள்ளிகள் நற்பண்பு சார்ந்த, ஒவ்வொரு மாணவனின் தலைசிறந்த திறமை மற்றும் பண்புகளை வெளிக்கொணரக் கூடிய முழுமையான கல்வி முறையில் கவனம் செலுத்த வேண்டும்.  நற்பண்புகள் இல்லாத கல்வி, எந்தக் காலத்திலும் கல்வியாக கருதப்பட மாட்டாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்த முயற்சிப்பதில், தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க கல்வி நிறுவனங்கள் பாடுபடுவதோடு, மாணவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாகக் கொள்வதையும் ஊக்குவிக்க வேண்டும்.  மாணவர்கள் உற்சாகத்துடன் விளையாட்டு அல்லது உடற்பயிற்சியை மேற்கொண்டால், அவர்களது வாழ்க்கை முறை ஆரோக்கியமானதாக இருக்கும்.

படிப்பு என்ற பெயரில் மாணவர்களை நான்கு சுவர்களுக்குள் அடைத்துவைக்கும் நவீன போட்டிக் கல்வி ஒரு நஞ்சு போன்றதாகும்.  அவர்கள் வெளி உலகை அனுபவிப்பதோடு – இயற்கையுடன் நேரத்தை செலவிடுவதுடன், சமுதாயத்தின் அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி பல்வேறு கலை மற்றும் வர்த்தக நுட்பங்களை அறிந்துகொள்ள வேண்டும். வகுப்பறை பாடங்களுடன், களப்பயிற்சி, சமூக விழிப்புணர்வு மற்றும் சமுதாய சேவையாற்றுவதும் அவசியம். இளமைப் பருவத்திலிருந்தே மாணவர்களிடம் சேவை மனப்பான்மையை உருவாக்குவதும் மிகுந்த அவசியம்.

இன்று இந்தப் பள்ளிக்கூடத்தை திறந்துவைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. குழந்தைகளை வளர்த்தெடுத்து பக்குவப்படுத்தும் இந்த முக்கிய பணியை மேற்கொள்வதற்காக,   டாக்டர் விஸ்வநாதன், திரு.செல்வம் மற்றும் வி.ஐ.டி. குழும நிர்வாகம் மற்றும் ஊழியர்களுக்கும் எனது பாராட்டுகளை உரித்தாக்குகிறேன்.

     “அறிவாற்றலே ஒருவருக்கு அழியா சொத்து” என்ற பொருள்படும்

     “கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

 மாடல்ல மற்றை யவை” என்ற திருக்குறளுடன் எனது உரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி வணக்கம்,

ஜெய்ஹிந்த்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த