நீதிபதி உதய் உமேஷ் லலித், இந்தியாவின் 49-வது தலைமை நீதிபதியாக நியமனம்
அரசியல் சட்டப்பிரிவு 124(2)-ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, உச்சநீதிமன்ற நீதிபதி திரு உதய் உமேஷ் லலித் (யு யு லலித்), இந்தியாவின் 49-வது தலைமை நீதிபதியாக 27 ஆகஸ்ட் 2022 அன்று குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிபதி யு யு லலித், ஆகஸ்ட் 2014-ல், வழக்கறிஞரிலிருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்தியாவின் 13-வது தலைமை நீதிபதியாக 1971-ல் பணியாற்றிய நீதிபதி எஸ் எம் சிக்ரி-க்கு பிறகு, வழக்கறிஞரிலிருந்து நேரடியாக உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட நீதிபதி இவர் ஆவார்.
உச்சநீதிமன்ற சட்டப்பணிகள் ஆணையத்தின் உறுப்பினராக இவர் இரண்டு முறை பதவி வகித்துள்ளார்.
கருத்துகள்