முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளில் அவருக்கு அரசு மரியாதை

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளில் அவருக்கு மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் மரியாதை


ஒற்றுமையின் சின்னமாக விளங்கும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளில், அவரை நினைவு கூர்ந்து, வலிமையான இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம் என மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கூறியுள்ளார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள், ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து டாக்டர் எல். முருகன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

‘’பல சமஸ்தானங்களை ஒன்றிணைத்து ஒரே இந்தியாவாக அமைய வழிவகுத்த பாரத ரத்னா  #சர்தார்வல்லபாய்பட்டேல் ஜெயந்தியில் ஒற்றுமைக்கான சின்னமாய் விளங்கும் அவரை நினைவு கூர்ந்து, பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களின் ஆட்சியில் வலிமையான இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம்’’.இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு புது தில்லியில் குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு புது தில்லியில் குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, தில்லி துணைநிலை ஆளுநர் திரு வினய் குமார் சக்சேனா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் மைதானத்தில் ஒற்றுமைக்கான ஓட்டத்தை உள்துறை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வெளியுறவு அமைச்சர் திரு ஜெய்சங்கர், வெளியுறவு இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி, உள்துறை இணை அமைச்சர் திரு நிஷித் பிரமானிக் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழியை திரு அமித் ஷா செய்து வைத்தார்.



குஜராத்தின் மோர்பியில் நேற்று பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

விடுதலையின் அமிர்தப் பெருவிழா கொண்டாடப்படுவதால் இன்றைய நிகழ்ச்சி சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். சுதந்திரத்திற்குப் பிறகு நவீன இந்தியாவிற்கு அடித்தளமிட்டு, அதன் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த ஒரு தலைவரின் பிறந்தநாளில் தேசிய ஒருமைப்பாட்டின் முக்கியமான செய்தியை முன்னெடுத்துச் செல்கிறோம் என்று அவர் கூறினார். சர்தார் வல்லபாய் படேலின் பெயரைச் சொன்னவுடனேயே இன்றைய

ஐக்கிய இந்தியாவின் வரைபடம் நினைவுக்கு வருகிறது என்றும், சர்தார் சாஹேப் இல்லையென்றால், இன்றைய பரந்த, உறுதியான, சக்தி வாய்ந்த இந்தியா சாத்தியமாகியிருக்காது என்றும் திரு ஷா கூறினார்.

சுதந்திரத்திற்குப் பிறகு, 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைத்து இந்திய யூனியனை உருவாக்குவதுதான் நாடு எதிர்கொண்ட மிகப்பெரிய பிரச்சனை என்றும், அதை உருவாக்குவதில் நாட்டின் முதல் உள்துறை அமைச்சரும் துணைப் பிரதமருமான சர்தார் சாஹேப் முக்கியப் பங்காற்றினார் என்றும் திரு அமித் ஷா கூறினார். தனது திறமையான மற்றும் தனித்துவமான அரசியல் புத்திசாலித்தனத்தால் முழு நாட்டையும் ஒருங்கிணைத்தவர் பட்டேல் என்று அவர் கூறினார். அந்த நேரத்தில் கூட தேசவிரோத சக்திகள் நாட்டைப் பிளவுபடுத்துவதில் ஈடுபட்ட போதிலும், சர்தார் சாஹிப்பின் முயற்சியால்தான், இந்தியாவின் ஒருங்கிணைந்த வரைபடத்தை நாம் இன்று பார்க்கிறோம் என்று  கூறினார்.

2047 ஆம் ஆண்டில் இந்தியா எந்த இடத்தில் இருக்கும் என்று கூட்டாக உறுதிமொழி எடுப்பதை இலக்காகக் கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் இன்று இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார்.

2047ல் சர்தார் சாகேப்பின் கற்பனை இந்தியாவை உருவாக்குவதில் 130 கோடி மக்கள் மற்றும் நாட்டின் மாநிலங்களின் கூட்டுத் தீர்மானம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார் அவர். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு பல மைல்கற்களை எட்டியுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளாக, அடிமைத்தனத்தின் அனைத்து வெளிப்பாடுகளிலிருந்தும் விடுபட்டு சுயமரியாதை, வளமான, வலிமையான மற்றும் பாதுகாப்பான இந்தியாவைக் கட்டியெழுப்புவதை நோக்கி நாடு நகர்ந்துள்ளது என்றார் அவர்.

நாட்டை ஒன்றிணைக்கும் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கியதன் மூலம், நாடுகளின் கூட்டுறவில் இந்தியா இன்று பெருமையுடன் நிற்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். பல ஆண்டுகளாக சர்தார் படேலின் பாரம்பரியத்தை புறக்கணிக்க முயற்சித்த போதிலும், அவர் தனது குணங்களால் அழியாமல் இருந்தார் என்றும், இன்று சர்தார் படேல் தேசத்தின் இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கிறார் என்றும் கூறிய அவர், சர்தார் வல்லபாய்

படேலின் பாதையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு இன்று நாடு முழுவதும் ஒற்றுமை ஓட்டங்கள் நடத்தப்படுகின்றன என்றார். இரும்பு மனிதர் சர்தார் பட்டேலின் மகத்தான செயல்களை நினைவுகூர்ந்த திரு அமித் ஷா, சர்தார் படேல் காட்டிய பாதையை பின்பற்றி 2047க்குள் அவரது கனவை நிறைவேற்ற நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...