முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொன்னமராவதி யுத்தம் மூன்றாம் இராஜராஜ சோழனை வென்று வாகை சூடிய மாறவர்மன் சுந்தரபாண்டியன்

பாண்டிய மன்னர்கள் தமிழுக்குச் செய்த தொண்டு அளப்பறியது. 

சோழர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாட்டையும்,பாண்டியர்களின் பெருமையையும் மீட்டெடுத்த மன்னர் மாறவர்மன் சுந்தரபாண்டியன். மூன்றாம் குலோத்துங்க சோழனால் பட்ட அவமானத்தைத் துடைக்க சோழ நாட்டின் மீது கடும்போர் நிகழ்த்தினான்.


“தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்தி..

மாடமு மாளிகையும் மண்டபமும் பலவிடித்து

கழுதைகொண் டுழுதி கவடி வித்தி”

என்று சோழ நாட்டில் நடைபெற்ற அவனது போர்ச்செயல்களை விவரிக்கிறது அவனது மெய்க்கீர்த்தி. சோழர்களால் கட்டப்பட்ட பல மாளிகைகளும் மண்டபங்களும் இடிக்கப்பட்டன.


உறையூரின் அருகிலுள்ள 16 கால் மண்டபம் ஒன்றையும் அவனது வீரர்கள் இடிக்க முனைந்த போது, அந்த மண்டபத்தின் வரலாறு அவனுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானைப் பாடிய சங்க இலக்கியமான பட்டினப்பாலையை அரங்கேறிய மண்டபம் தான் அது.




அதைப் பாடிய உருந்திரங்கண்ணனாருக்கு பதினோறாயிரம் பொற்காசுகளையும் அந்த மண்டபத்தையும் கரிகால் சோழன் அளித்திருந்தான்.  அதைக் கேள்விப்பட்ட மன்னர் மாறவர்மன் சுந்தரபாண்டியன் அந்த மண்டபத்தை இடிக்கக்கூடாதென்று ஆணையிட்டான். இந்த நிகழ்வைப் போற்றும் பாடலொன்று திருவெள்ளறைக் கோவிலில் கல்வெட்டாகவே உள்ளது.




"வெறியார் துவளத்தொடைச் செயமாறன் வெகுண்ட தொன்றும் அறியாத செம்பியன் காவிரி நாட்டிலரமியத்துப் பறியாத தூணில்லை-கண்ணன் செய் பட்டினப்பாலைக்கன்று நெறியால் விடுந்தூண் பதினாறுமேயங்கு நின்றனவே!"

காவிரிக் கரையில் சோழநாட்டில் படைநடத்திய பாண்டியன் பறிக்காத தூணில்லை. ஆனாலும் பதினாறுதூண்கள் மட்டும் மிஞ்சின என்கிறது தான் அந்தப் பாடல்.



பழிவாங்குவதற்காக நடந்த போரில், எதிரி நாட்டு மன்னனைப் புகழ்ந்து எழுதப்பட்ட நூல் என்றாலும், பழந்தமிழ்ப் பாடல் அரங்கேறிய இடம் என்பதால் தமிழுக்குத் தலைவணங்கி அந்த இடத்தைக் காக்கச் சொன்ன பாண்டியனின் தமிழ்ப் பற்று என்றும் வரலாறு பேசும்                          இந்தியத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் இருந்துவரும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பொன்னமராவதி சிவன் கோவில் இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இவ்வூரில் நட்டுக்கல்  என்பது  முக்கியமான இடமாக உள்ளது, மற்றும் ராஜா பொன்னனும் அமரனும் இறந்த இடம் பட்டமரத்தான் ஆலயம் மற்றும் அமரகண்டான் ஊருணி இன்று கூட அந்தக் நடுகல் பெருமை பேசுகிறது மற்றும் தமிழ் வீரர்கள் மற்றும் அவர்களின் வீரம் ஆதரவளிக்க மரியாதை சின்னம் உள்ளது. மேலும் கிடைத்த வரலாற்றுத் தரவு  தமிழகத்தில் முதல் முறையாக,



புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் கொன்னப்பட்டியில் உள்ள கொன்னைக் கண்மாயில் 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய வணிகக் குழுவினரின் 10 நினைவுத் தூண்களுடன் கூடிய கல்வெட்டுகள் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.



இக்கல்வெட்டுகள் 11-ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டவை. அதாவது, 1,000 ஆண்டுகளுக்கு முந்ததைய அதாவது, ராஜேந்திர சோழரின் 10-ஆம் ஆட்சி ஆண்டு முதல் முதலாம் குலோத்துங்க சோழனின் 8-வது ஆட்சி ஆண்டு வரை வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளில், குன்றன் சா(த்தன்) என்ற பெயரில் 2 பேருக்கும், மருதன் செட்டி, கங்கை கொண்ட சோழ செட்டி, முத்தங் கஞ்சாறன் எனும் மும்முடி சோழ சிதிலட்டி, (பூ)லாங்குள(த்)தான், சிறப்பன் எனும் பெயர்கள் கொண்டவர்களுக்கும் நினைவுத் தூண் வைக்கப்பட்டுள்ளது


இவை வணிகர்கள் மட்டுமின்றி வீரர்களின் நினைவாக நடப்பட்டிருப்பதை “ஸ்ரீ இராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு இருபத்து ஒன்பதாவது படை” என்று ஒரு கல்வெட்டு வெளிப்படுத்துகிறது. செட்டி, ஞெட்டி ஆகிய சொற்களும், ராஜேந்திர சோழரின் பெயரோடு கங்கை கொண்ட சோழ செட்டி, மும்முடி சோழ செட்டி என்று பெயர் சூட்டிக்கொண்டுள்ளதன் மூலமும் வணிகர்களோடு கொண்டிருந்த அவரது தொடர்பை அறியமுடிகிறது.

இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் இவ்வூர் சோழர் கால வணிகக்குழுவில் மிக முக்கியப் பங்காற்றியிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது''.பாண்டிய மன்னர் ஆண்ட நிலப்பரப்பு நாட்டுப் பிரிவுகள் பல வடக்கு பகுதி எல்லை 






பாண்டிய நாட்டில் மதுரோதய வளநாடு, வரகுண வளநாடு, கேரள சிங்க வளநாடு, திருவழுதி வளநாடு, சீவல்லப வளநாடு, பராந்தக வளநாடு போன்ற வளநாடுகள் இருந்தன. வளநாடுகட்கு உட்பட்டு இரணியமுட்டநாடு, களக்குடிநாடு, செவ்விருக்கைநாடு, பூங்குடிநாடு, கீரனூர்நாடு, களாந்திருக்கைநாடு, அளநாடு, துறையூர்நாடு, வெண்பைக்குடிநாடு, நேச்சுரநாடு, ஆசூர்நாடு, சூரன்குடிநாடு, முள்ளிநாடு முதலிய நாடுகளும், தும்பூர்க் கூற்றம், கீழ்க்களக் கூற்றம், மிழலைக் கூற்றம் முதலிய பல கூற்றங்களும் இருந்தன. ஒல்லையூர் நாடு என்று பழங்காலத்தில் வழங்கிய நாடு பிற்காலத்தில் ஒல்லையூர்க் கூற்றம் என்று வழங்கப் பெற்றதெனக் கல்வெட்டுகளால் அறிகின்றோம்  பாண்டிய நாடு, ஏழு வளநாடுகளையும், ஐம்பத்திரண்டு நாடுகளையும் கொண்டிருந்தது.சங்க காலத்திலும், இடைக்காலப் பாண்டியர் காலத்திலும் மதுரை பாண்டியர்களின் தலைநகரமாக விளங்கியது. 13 ஆம் நூற்றாண்டிலிருந்து பாண்டிய நாடு சிதருண்டு கிடந்த நிலையில் தமிழையும் ஆன்மீகமும் வளர்த்தது. 




மதுரைப் பாண்டியர்கள் சோழ மன்னர்களின் காலனித்துவ பகுதியாக விளங்கிய  பொன்னமராவதி நாடு புதுக்கோட்டை மாவட்டத்தில் (முன்பு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அதற்கு முன் புதுக்கோட்டை மாநிலம் அதற்கு முன்னர் சோழ நாட்டிற்கு ம் பாண்டிய நாட்டிற்கும் எல்லையாக பொன்னமராவதி நாடு அதற்கு முன்னர் கேரளசிங்கவளநாடு அருகில் அமைந்துள்ளது பொன்நாடு ) என விளங்கியது 37 கிமீ தொலைவிலுள்ள ஒரு புராதன வரலாறு கொண்ட ஊராகும். புதுக்கோட்டை மாவட்டத் தலைமையகத்தின் தென்மேற்கு. பாண்டிய நாட்டின் பாரம்பரிய வடக்கு எல்லையில் அமைந்துள்ள இந்த நகரம் அரசியல் மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் இடையே பல போர்கள் இந்த நகரத்திலும் சுற்றுப்புறத்திலும் நடந்தன. மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக, இப்பகுதி சோழர் ஆட்சியின் கீழ் இருந்தது (கி.பி. 910 ஆம் ஆண்டு முதல் கி.பி. 1216 ஆம் ஆண்டு வரை ). மதுரைகொண்ட பரகேசரி (பராந்தக I) மதுரையைக் கைப்பற்றி பாண்டிய ராஜ்ஜியத்தை சோழப் பேரரசுடன் ஒருங்கிணைத்த பிறகு, பொன்னமராவதி மத்திய சோழர் காலம் முடியும் வரை பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது.




முதலாம் பிற்கால சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கன், பேரரசின் வடகிழக்கு எல்லைகளில் போர்களில் ஈடுபட்டபோது, ​​பாண்டிய நாட்டில் மறுமலர்ச்சி தலைதூக்கத் தொடங்கியது, பாண்டியர்கள் சோழர்களின் பக்கத்தில் முள்ளாக மாறினர், குறிப்பாக குலோத்துங்க சோழன்- II. ஆட்சிக் காலத்தில் கடினமான சூழ்நிலை உருவாகி வருவதை முன்னறிவித்த குலோத்துங்க சோழன்-I ஆட்சியில் சோழநாட்டின் இராணுவக் காலனிகளை நிறுவினார், முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரன் செய்ததைப் போல் அல்லாமல். பொன்னனும் அமரனும் காலணி ஆதிக்கத்தின் வேளிர் அல்லது குறுநில மன்னர் ஆண பொன்னமராவதி அத்தகைய ஒரு அதிகாரப் பூர்வமாக சோழ நாட்டின் காலனியாக இருந்தது.




இரண்டாம் இராஜராஜன் மற்றும் அவரது வாரிசுகளின் ஆட்சிக் காலத்தில், இந்த பிராந்தியத்தின் மீதான கட்டுப்பாடு அதிகமான நிலையில் நிஷாதராஜன்கள் என அழைக்கப்படும் ஒரு அடிமைத் தலைவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. அவர்கள்  தற்போது பிரான்மலை பரம்புமலை அல்லது கொடுங்குன்றத்தை ஒட்டிய குறுநிலப் பகுதிகளை ஆட்சி செய்தனர், எனவே திருக்-கொடுங்குன்றம் உடையார் என்ற பட்டத்தை சத்திய மன்னர்களால் வழங்கப்பெற்றனர். இந்த நிஷாதராஜாக்கள் 13 ஆம் நூற்றாண்டு வரை பொன்னமராவதியிலிருந்து தொடர்ந்து ஆட்சி செய்தனர், அவர்களுக்குப் பதிலாக 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை இந்த பிராந்தியத்தை நிலப்பிரபுக்களாக ஆட்சி செய்த பனாஸ் அல்லது பனாதிராஜாக்கள் ஆட்சி செய்தனர்.


12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டியர்களின் மறுமலர்ச்சியின் போது  பாண்டிய மன்னர்களும் தங்களது வெற்றி நிலைநிறுத்திய போது உருவான காலனித்துவ நாடாக விளங்கியது தான் ஐந்து நிலை நாடு அதில் பொன்னமராவதி முக்கிய பங்கு வகித்தது. நிஷாதராஜாக்கள் இரண்டு ராட்சதர்களின் போர்களில் முக்கிய பங்கு வகித்தனர் மற்றும் இந்த செயல்பாட்டில் நகரம் அடிக்கடி பாதிக்கப்பட்டது. சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையிலான முதல் பெரிய மோதலில் அழிந்துபோன மூன்று மாடிகளைக் கொண்ட அரச அரண்மனையை மாகாணத் தலைநகரான பொன்னமராவதி விவரிக்கிறது. முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியருக்கு முன்பாக மூன்றாம் குலோத்துங்கன் சரணடைந்த காட்சியாக இந்தத் தலைநகரம் இருந்தது, இது பிந்தைய கல்வெட்டுகளின் பிரசாஸ்திகளில் சொற்பொழிவு வார்த்தைகளில் விவரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே குறிப்பிடப்பட்ட ஒரு விழாவில், சுந்தர பாண்டிய தலைநகரைத் திருப்பிக் கொடுத்து, சோழ ராஜ்யத்தின் அதிபதி (சோழப் பெருமான்) பட்டத்தை III குலோத்துங்கனிடமிருந்து மீட்டெடுத்தார்.மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழர்களின் இரண்டாம் தலைநகராகிய பழையாறை சென்று அங்குள்ள அரண்மனையில் வீராபிடேகம் செய்து கொண்டு, "சொனாடு கொண்டருளிய சுந்தரபாண்டிய தேவர்" எனும் விருதுபெயரை சூடிக்கொண்டார். பின்னர்ப் பாண்டிய நாடு திரும்பிச் செல்லும் வழியில், பொன்னமராவதியில் உள்ள தனது அரண்மனையில் தங்கி, நாட்டை இழந்த மூன்றாம் இராசராசனை அழைத்துவரச் செய்து அவருக்குச் சோழ நாட்டைத் திரும்ப அளித்து அவனைத் தனக்குத் திறை செலுத்தி ஆட்சி செய்து வருமாறு பணித்தார்.

அதுமுதல் "சோனாடு வழங்கியருளிய சுந்தரபாண்டியதேவர்" எனும் அடைமொழியை சூடினார்.


“.. .பாண்டிலாண்ட சொலபதி என்னும் நாமமும் தொன்னக-ரும் மிள வளங்கி விடைகொடுத்து விட்டருளி...”

அதே மெய்க்கீர்த்தி பொன்னமராவதியை பின்வரும் வார்த்தைகளில் விவரிக்கிறது:

“கோலமலர் மேல் அயனும் குளிம்துளை மாலும் அழிய மலர் சேவடி வணங்கி வாங்கு சிலை யன்னம் துயிலொலிய வந்தேழுப்பும் புங்கமல வல்விசுள் பொன்னா-மரபதியில்...”


இந்த ஊரில் சோழீஸ்வரர் கோவில் மற்றும் அழகிய பெருமாள் (சுந்தர்ராஜா) கோவிலென இரண்டு  உள்ளன. முந்தையது பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்தது, பிந்தையது பிற்கால பாண்டியர் ஆட்சியின் போது தோன்றியது.

சோழீஸ்வரர் (ராஜேந்திரசோளீஸ்வரம் உடையார்) கோவில்

இங்கு நான்கு சோழர் காலத்தில் பதிவுகள் உள்ளன, இரண்டு குலோத்துங்க சோழன் III ஆம் காலத்தைச் சேர்ந்தவை மற்றும் இரண்டு (ARE 4 மற்றும் 9 of 1909) திரிபுவனச்சக்கரவர்த்தி இராஜராஜதேவா காலத்தைச் சேர்ந்தவை. இந்தக் கோயிலில் உள்ள மற்ற கல்வெட்டுகள் ஜாதவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி. 1190 முதல் 1217 வரை) உள்ள காலத்தைச் சேர்ந்தவை.

சோழர்களின் பதிவுகள் ஸ்ரீவிமானம் கட்டியதையும், ராஜேந்திர சோளீஸ்வரம் உடைய மகாதேவர் என்ற சிவலிங்கத்தையும் விமானத்தையும் காலனி ஆதிக்கத்தில் உள்ள ராஜேந்திர சோழன் கேரளான் என்கிற நிஷாதராஜன் பிரதிஷ்டை செய்ததையும் குறிப்பிடுகிறது:


“ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீ ராஜராஜதேவர்க்கு யாண்டு எட்டாவது ராஜராஜ பாண்டி நாட்டு ராஜேந்திரசோழ வளநாட்டு புறமலை நாட்டு போ... நிஷாதராஜனர் சிவலிங்க-பிரதிஷ்-தைக்கும் விமானப் பிரதிஷ்டைக்கும்...”

பொன்னமராவதி ராஜராஜ பாண்டி நாட்டின் அங்கமான ராஜேந்திரசோழ வளநாட்டிலுள்ள பரம்புமலை நாட்டில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது, இதன் மூலம் முழு பாண்டிய மண்டலமும் (பாண்டிய இராச்சியத்தின் பாரம்பரிய பகுதி) அந்த ராஜ்யத்தை முதலாம் ராஜராஜன் மீண்டும் கைப்பற்றிய பின்னர் அறியப்பட்டது.



மூன்றாம் இராசராசன் (கி.பி. 1216 – 1256) மூன்றாம் குலோத்துங்கனுக்குப் பிறகு அவன் மகன் மூன்றாம் இராசராசன் சோழநாட்டின் அரியணை ஏறினான். இவனுடைய காலத்தில் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் பாண்டிய நாட்டு அரசனானான். தனது முன்னோர் சோழர்க்கு அடங்கித் திறை செலுத்தி வாழ்நாளைக் கழித்து வந்ததையும், தனது இளம்வயதில் மூன்றாம் குலோத்துங்கன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துவந்து மதுரையில் ஏற்படுத்திய அழிவுகளையும் இவன் நேரில் கண்டிருந்தான். சோழ நாட்டை வென்று பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்று எண்ணியிருந்தான். இந்நிலையில் மூன்றாம் குலோத்துங்கன் இறந்தான். அவன் மகன் மூன்றாம் இராசராசன் முடிசூடினான். மாறவர்மன் சுந்தரபாண்டியன் வலிமைமிக்க பெரும்படை திரட்டிச் சென்று சோழ மன்னன் மூன்றாம் இராசராசனைப் போரில் வென்று சோழ நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான்.


சோழநாட்டின் தலைநகர்களாக இருந்த தஞ்சையையும், உறையூரையும் தீக்கிரையாக்கினான். அங்கு உள்ள பல மணிமண்டபங்களையும், மாட மாளிகைகளையும் இடித்து மண்ணோடு மண்ணாக்கினான். போரில் தோல்வி அடைந்த மூன்றாம் இராசராசன் சுற்றத்தாருடன் ஒளிந்து வாழும் இழிநிலை எய்தினான். சுந்தர பாண்டியன், பழையாறை சென்று அங்குள்ள அரண்மனையில் முடி சூடிக்கொண்டான். பின்பு பாண்டிய நாடு திரும்பும்போது வழியில் பொன்னமராவதி என்னும் இடத்தில் உள்ள அரண்மனையில் தான் தங்கினான். இராசராசனைத் தூதுவர் வேண்டுகோளுக்கு இணங்க அங்கே அழைத்துவரச் செய்தான்.


அவனை ஆண்டுதோறும் திறை செலுத்திக்கொண்டு சோழநாட்டை ஆட்சி செய்து வருமாறு ஆணையிட்டான். இதன் விளைவாகச் சோழப் பேரரசு சிற்றரசாக மாறியது; பாண்டிய நாட்டிற்குத் திறை செலுத்தித் தாழ்வடைந்தது.மூன்றாம் இராசேந்திரன் (கி.பி. 1246 – 1279)


மூன்றாம் இராசராசன் தன் ஆட்சிக் காலத்திலேயே (கி.பி. 1246) தன் மகன் மூன்றாம் இராசேந்திரனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி, சோழநாட்டின் நிருவாகம் முழுவதையும் அவன் பொறுப்பில் தந்தான். கி.பி. 1256 இல் மூன்றாம் இராசராசன் மறைந்ததும், மூன்றாம் இராசேந்திரன் சோழநாட்டின் மணிமுடியைச் சூடிக்கொண்டான்.

இவன் தலைசிறந்த வீரனாக விளங்கினான். தன் தந்தை காலத்தில் வீழ்ச்சியுற்ற சோழ நாட்டின் ஆட்சியையும் பெருமையையும் தன் ஆற்றல் கொண்டு ஓரளவு உயர்த்தினான்.

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின்மீது போர் தொடுத்து நிகழ்த்திய கொடுஞ்செயல்கள் உண்டாக்கிய அவமானத்தைத் தன் இளமைக் காலத்திலேயே கண்டு மனம் வெதும்பியவன் மூன்றாம் இராசேந்திரன். எனவே, பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து இழந்த பெருமையைப் பெறத் தக்க காலத்தை எதிர்பார்த்திருந்தான். பாண்டிய நாட்டில் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் இறந்தான். அவனுக்குப் பின்பு இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் அரியணை ஏறினான். இப் பாண்டிய மன்னன் தன் முன்னோர் போல் ஆற்றல் பெற்றிருக்கவில்லை. இதுவே நல்ல தருணம் என்று எண்ணி மூன்றாம் இராசேந்திரன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்துச் சென்று போரிட்டுப் பாண்டியனை வென்றான். தனது ஆட்சியை ஏற்றுக்கொண்டு அவனைத் திறை செலுத்துமாறு செய்தான். இப்போர் இவனுடைய தந்தையினுடைய ஆட்சியின் இறுதிக்காலத்தில் (கி.பி. 1251) இவனே முழுப்பொறுப்பு ஏற்று நடத்தியதாகும்.



பாண்டிய நாட்டில் இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனை அடுத்து முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் என்பவன் அரியணை ஏறினான். இவன் கி.பி. 1257 இல் சோழநாட்டின் மீது படையெடுத்தான். போரில் மூன்றாம் இரசேந்திரனை வென்று தனக்குத் திறை செலுத்தும் சிற்றரசனாக்கிவிட்டான். அதற்குப் பிறகு மூன்றாம் இராசேந்திரன் தனது ஆட்சிக்காலம் முழுவதும் பாண்டியனுக்குத் திறை செலுத்தியே வாழ்ந்தான். ஆற்றலும் வீரமும் இருந்தும் சோழப் பேரரசின் வீழ்ச்சியை மூன்றாம் இராசேந்திரனால் தடுத்து நிறுத்த முடியாமல் போய்விட்டது.

மூன்றாம் இராசேந்திரனுக்குப் பின் சோழர் பரம்பரையே இல்லாது போயிற்று. சோழநாடு பாண்டிய நாட்டுடன் இணைந்தது. ஏறத்தாழ நானூறு ஆண்டு காலம் சோழநாடு என்ற பெயரில் தமிழகத்தை ஆட்சி செய்து வந்த பிற்காலச் சோழர்களின் ஆட்சி மறைந்தது. தமிழக வரலாற்றில் பிற்காலப் பாண்டியர் ஆட்சி மலரத் தொடங்கியது.


திரிபுவனச்சக்கரவர்த்தின் குலோத்துங்க சோழன் தேவரின் 12 வது ஆண்டில் (மூன்றாக இருக்கலாம்) நிஷாதராஜன் மற்றும் உடையார் திருப்புவனம் உடையார் தாச்சாச்சார்யன் உடையார் என்ற ஆதி ஆச்சார்யன் [புதுக்கோட்டை மாநிலத்தின் கல்வெட்டுகள், 147) இணைந்து வழங்கிய மானியம் உள்ளது. பிந்தையவர் கோயில் கட்டிடக் கலைஞர் என்பது தெளிவாகிறது.

தேதியிடப்படாத கல்வெட்டு ஒன்றில் (ARE 13 of 1909), சன்னதியைச் சுற்றியுள்ள படிகளும் வராந்தாவும் (திருநடை-மாளிகை) நிலைமை அழகியன் ஒருவரால் கட்டப்பட்டது என்பதைக் காண்கிறோம்; திரிபுவன-சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ தேவரின் (III) (ARE 5 of 1909) 18ஆம் ஆண்டு பதிவேட்டில் (கி.பி. 1196), திருக்-கொடுங்குன்றம் உடையான் அழகிய தேவன் என்ற நிஷாதராஜன் ஒரு மடத்திற்கு ஆதரவாக நிலத்தை பரிசாக அளித்ததைக் காண்கிறோம். நிலமை அழகிய திரு-மடம் என்று அழைக்கப்படும், நிலமை அழகியன் அல்லது அவர் சார்பாக அழகு நாச்சி அம்மன் கோயிலுக்குள் கட்டப்பட்ட ஒரு மடம். எனவே இந்த மடம் மற்றும் வராண்டா மற்றும் படிக்கட்டுகள் இரண்டாம் ராஜராஜன் காலத்தில் கட்டப்பட்டவை என்று நாம் யூகிக்கலாம்., சோழீஸ்வரம் (அதன் நவீன பெயர்) கோவிலை இரண்டாம் இராஜராஜன் தனது பெரியப்பாவான முதலாம் குலோத்துங்கன் (இவர் முன்பு இரண்டாம் ராஜேந்திர சோழன் என்று அழைக்கப்பட்டவர்) நினைவாகக் கட்டியதாகத் தோன்றலாம் என்று பலர் வாதிட்டாலும் இது கால சாத்தியமற்றது அல்ல என்றாலும், இது வெகு கால தொலைவில் இருப்பதாகத் தோன்றுகிறது, ஏனென்றால், தலைமுறை இடைவெளி இருந்தபோதிலும், முதலாம் குலோத்துங்கன் இறந்த 26 ஆண்டுகளுக்குள், இரண்டாம் ராஜராஜன் அரியணை ஏறினார். இருப்பினும், கோவில் கட்டப்பட்டது என்ற முடிவுக்கு வருவது நியாயமானது.  சோழர்கள் வழி காலனித்துவ வேளிர் நிஷாதராஜன் பெயரில்,  பார்த்தபடி, ராஜேந்திர சோழ கேரளன் என்ற பெயரைக் கொண்டிருந்தார்.


இக்கோயிலில் உள்ள அம்மன் சன்னதி எப்போது பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பதற்கு நேரடியான ஆதாரமில்லை: ஆனால், பிரதான சன்னதியில் இருந்து இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களுக்குள் அது நிச்சயமாக வந்திருக்க வேண்டும். இராஜேந்திர சோழகேரளனின்) ஜடவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி குலசேகரதேவரின் 23ஆம் ஆண்டு (கி.பி. 1213; 119090) இராஜேந்திரசோளீஸ்வரம் உடையார் கோயிலில் உள்ள திருக்காமக்கோட்டம்-உடைய-ஆளுடைய-நாச்சியாரின் சன்னதிக்கு சில காணிக்கைகளை வழங்குகிறார். மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆட்சி கடைசி நாட்களில் (கி.பி. 1178-1218) சோழர்களின் கட்டுப்பாட்டிலிருந்து இப்பகுதி பாண்டிய மன்னரால் கைப்பற்றப்பட்டது.




1279 ஆம் ஆண்டு– சோழநாடு மூன்றாம் இராசேந்திரனுக்குப் பிறகு அரசமரபு இல்லாது போயிற்று.

1251 ஆம் ஆண்டு முதல் 1271 -ஆம் ஆண்டு வரை முதலாம் சடைய வர்மன் சுந்தர பாண்டியன், தான் மூன்றாம் இராசேந்திரனை வென்றான். சோழனுக்குத் துணைநின்ற கண்ணனூர் போசளதையும் வென்றான்.

1268 ஆம் ஆண்டு முதல் 1310 – ஆம் ஆண்டு வரை முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் படைத்தலைவன் ‘ஆரிய சக்கரவர்த்தி’ என்பவன் இலங்கை மன்னனை வென்று அங்குப் பாதுகாக்கப்பட்டிருந்த புத்தர் பல்லைக் கைப்பற்றிக் கொண்டு தமிழகம் திரும்பினான். அப்போதைய இலங்கை அரசன் பராக்கிரம பாகு பாண்டியனோடு நட்பு கொண்டாடிப் புத்தர் பல்லைத் தன் நாட்டுக்கு மீட்டுக்கொண்டான்.


குலசேகர பாண்டியனின் மக்கள் இருவர். பட்டத்தரசி மகன் சுந்தர பாண்டியன். காமக்கிழத்தியின் மகன் வீரபாண்டியன்

1296 – ஆம் ஆண்டு குலசேகர பாண்டியன், வீரபாண்டியனுக்கு இளவரசு பட்டம் சூட்டினான்.

1310 – ஆம் ஆண்டு சுந்தர பாண்டியன், தன் தந்தையைக் கொன்று அரசனானான். ஆனால் 


அரசு நிலைக்கவில்லை. அடுத்த போரில் வீரபாண்டியன் வென்று நாட்டைத் தனதாக்கிக்கொண்டான். காரணம்.  மதுரையில் நடந்த முகமதியர் படையெடுப்பு 

(டில்லி அரசன் அல்லாவுதீன் கில்ஜியின் படைத்தலைவன் மாலிகாபூர் அப்போது தென்னாடு வந்திருந்தான்.


இராமேஸ்வரம் வரை வந்து 96 ஆயிரம் மணங்கு பொன் மற்றும் பெரும் செல்வம் கொள்ளையடித்துச் சென்றனர்) ஒரு மணங்கு பொன் ஒரு யானை சுமக்கும் பாரம்,




ஆகும் அதாவது வாராங்கல் ஆண்ட காக்காத்தியப் பேரரசையும், துவாரகசமுத்திரத்தை ஆண்ட ஹெய்சாலர்களையும், தேவகிரியில் ஆட்சி செய்த யாதவர்களையும் வென்ற பிறகு மதுரை வந்து செய்த அரசியல் சூழ்ச்சியால்  



சுந்தர பாண்டியன் கில்ஜி துணையுடன் வந்து வீரபாண்டியனை அழித்தான். கில்ஜி பின்னர் சுந்தர பாண்டியனையும்

அழித்தான்.

1330 -1378 – மதுரையில் முகமதியர் ஆட்சி ஏற்பட்டது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த