முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிஓபி மாநாட்டின் 27 வது அமர்வில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ்,

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

COP 27 இல் இந்திய அரங்கை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் திறந்து வைத்தார்

எகிப்தில் உள்ள) ஷர்ம் எல்-ஷேக்கின் சிஓபி மாநாட்டின் 27 வது அமர்வில் ( சிஓபி27) மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை  அமைச்சர், திரு பூபேந்தர் யாதவ், இன்று இந்தியா அரங்கை திறந்து வைத்தார். இந்த  மாநாடு (சிஓபி27) நவம்பர் 6 ந்தேதி முதல் 18 வரை நடைபெறவுள்ளது.

அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளை இந்தியா அரங்குக்கு  வரவேற்ற திரு யாதவ், சிக்கலான பருவநிலை மாற்ற பிரச்சனைக்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி எளிய தீர்வை வழங்கியுள்ளார் என்று கூறினார். பருவ நிலை நடவடிக்கை அடிமட்ட, தனிநபர் மட்டத்தில் இருந்து தொடங்குகிறது என்று இந்தியா நம்புவதாகவும், எனவே வாழ்க்கை - சூழலுக்கான வாழ்க்கை முறை என்ற கருப்பொருளுடன் இந்தியா அரங்கை வடிவமைத்ததாகவும் அவர் கூறினார். இந்தச் சந்தர்ப்பத்தில், நேர்மறையான பருவநிலை மாற்றத் தீர்வுகளை நோக்கிப் பணியாற்றிய இந்தியாவைச் சேர்ந்த சிஓபி இளம் அறிஞர்களை திரு யாதவ் பாராட்டினார். பல்வேறு ஆடியோ காட்சிகள், லோகோ, 3டி மாதிரிகள், அமைப்பு, அலங்காரம் மற்றும் பல நிகழ்வுகள் மூலம் லைஃப் செய்தியை அனுப்பும் வகையில் அரங்கு  வடிவமைக்கப்பட்டுள்ளது.

"சிஓபியின் காலம் முழுவதும், இந்தியா அரங்கு , எளிய வாழ்க்கை முறை மற்றும் இயற்கையில் நிலையான தனிப்பட்ட நடைமுறைகள் அன்னை பூமியைப் பாதுகாக்க உதவும் என்பதை பிரதிநிதிகளுக்கு நினைவூட்டும் என்று நான் நம்புகிறேன்" என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திரு யாதவ் கூறினார்.

“பருவநிலை நிதி தொடர்பான விவாதங்களில் கணிசமான முன்னேற்றத்தை இந்தியா எதிர்பார்க்கிறது. புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதையும், தொழில்நுட்ப பரிமாற்றங்களை எளிதாக்கும் புதிய ஒத்துழைப்புகளையும் எதிர்பார்க்கிறோம்,” என்று திரு. யாதவ் கூறினார்.

"மிஷன் லைஃப் இந்த பூமியின் பாதுகாப்பிற்காக மக்களின் அதிகாரங்களை இணைத்து, அதை சிறந்த முறையில் பயன்படுத்த அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறது. மிஷன் லைஃப் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை ஜனநாயகப் பூர்வமானதாக ஆக்குகிறது, அதில் ஒவ்வொருவரும் அவரவர் திறனுக்கு ஏற்ப பங்களிக்க முடியும். சிறிய முயற்சிகள் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மிஷன் லைஃப் நம்புகிறது” என்று  பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியிருந்தார். .

பல நூற்றாண்டுகளாக, இந்திய நாகரிகங்கள் நிலையான வாழ்க்கை முறையை கடைப்பிடித்து வழிவகுத்துள்ளன என்பதே அரங்கின் வடிவமைப்பில் உள்ள வழிகாட்டும் சிந்தனையாகும். சுற்றுச்சூழலுக்கு உகந்த  பழக்கவழக்கங்கள் இந்திய கலாச்சாரத்தில் குறியிடப்பட்டுள்ளன. இயற்கை சூழலுக்கு மரியாதை காட்டும் பல நடைமுறைகள் அன்றாட வாழ்வில் வேரூன்றியுள்ளன. காலநிலை மாற்றத்திற்கு எதிரான நமது போராட்டத்தில் அவை விலைமதிப்பற்றவை என்பதை நிரூபிக்க முடியும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்ட நிலைத்தன்மை பற்றிய இந்த ஆழமான அறிவு, இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியை உலகிற்கு வாழ்க்கை மந்திரத்தை வழங்க வழிவகுத்தது - இது கிரகத்தின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். உலகளாவிய காலநிலை நெருக்கடியைக் கையாள்வதில் லைஃப் இயக்கம் இந்தியாவின் பங்களிப்பாகும். லைஃப் இயக்கம், நவீன உலகில் நிலையான வாழ்க்கை முறையைப் பின்பற்றும் நபர்களை 'கோள் சார்பு மக்களாக' மாற்ற முயல்கிறது. இங்கிலாந்தில் இருந்து சிஓபி தலைமைப் பதவியை எகிப்து ஏற்றுக்கொண்ட விழாவில் திரு பூபேந்தர் யாதவ் கலந்து கொண்டார்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...