முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிஓபி மாநாட்டின் 27 வது அமர்வில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ்,

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

COP 27 இல் இந்திய அரங்கை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் திறந்து வைத்தார்

எகிப்தில் உள்ள) ஷர்ம் எல்-ஷேக்கின் சிஓபி மாநாட்டின் 27 வது அமர்வில் ( சிஓபி27) மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை  அமைச்சர், திரு பூபேந்தர் யாதவ், இன்று இந்தியா அரங்கை திறந்து வைத்தார். இந்த  மாநாடு (சிஓபி27) நவம்பர் 6 ந்தேதி முதல் 18 வரை நடைபெறவுள்ளது.

அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளை இந்தியா அரங்குக்கு  வரவேற்ற திரு யாதவ், சிக்கலான பருவநிலை மாற்ற பிரச்சனைக்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி எளிய தீர்வை வழங்கியுள்ளார் என்று கூறினார். பருவ நிலை நடவடிக்கை அடிமட்ட, தனிநபர் மட்டத்தில் இருந்து தொடங்குகிறது என்று இந்தியா நம்புவதாகவும், எனவே வாழ்க்கை - சூழலுக்கான வாழ்க்கை முறை என்ற கருப்பொருளுடன் இந்தியா அரங்கை வடிவமைத்ததாகவும் அவர் கூறினார். இந்தச் சந்தர்ப்பத்தில், நேர்மறையான பருவநிலை மாற்றத் தீர்வுகளை நோக்கிப் பணியாற்றிய இந்தியாவைச் சேர்ந்த சிஓபி இளம் அறிஞர்களை திரு யாதவ் பாராட்டினார். பல்வேறு ஆடியோ காட்சிகள், லோகோ, 3டி மாதிரிகள், அமைப்பு, அலங்காரம் மற்றும் பல நிகழ்வுகள் மூலம் லைஃப் செய்தியை அனுப்பும் வகையில் அரங்கு  வடிவமைக்கப்பட்டுள்ளது.

"சிஓபியின் காலம் முழுவதும், இந்தியா அரங்கு , எளிய வாழ்க்கை முறை மற்றும் இயற்கையில் நிலையான தனிப்பட்ட நடைமுறைகள் அன்னை பூமியைப் பாதுகாக்க உதவும் என்பதை பிரதிநிதிகளுக்கு நினைவூட்டும் என்று நான் நம்புகிறேன்" என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திரு யாதவ் கூறினார்.

“பருவநிலை நிதி தொடர்பான விவாதங்களில் கணிசமான முன்னேற்றத்தை இந்தியா எதிர்பார்க்கிறது. புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதையும், தொழில்நுட்ப பரிமாற்றங்களை எளிதாக்கும் புதிய ஒத்துழைப்புகளையும் எதிர்பார்க்கிறோம்,” என்று திரு. யாதவ் கூறினார்.

"மிஷன் லைஃப் இந்த பூமியின் பாதுகாப்பிற்காக மக்களின் அதிகாரங்களை இணைத்து, அதை சிறந்த முறையில் பயன்படுத்த அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறது. மிஷன் லைஃப் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை ஜனநாயகப் பூர்வமானதாக ஆக்குகிறது, அதில் ஒவ்வொருவரும் அவரவர் திறனுக்கு ஏற்ப பங்களிக்க முடியும். சிறிய முயற்சிகள் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மிஷன் லைஃப் நம்புகிறது” என்று  பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியிருந்தார். .

பல நூற்றாண்டுகளாக, இந்திய நாகரிகங்கள் நிலையான வாழ்க்கை முறையை கடைப்பிடித்து வழிவகுத்துள்ளன என்பதே அரங்கின் வடிவமைப்பில் உள்ள வழிகாட்டும் சிந்தனையாகும். சுற்றுச்சூழலுக்கு உகந்த  பழக்கவழக்கங்கள் இந்திய கலாச்சாரத்தில் குறியிடப்பட்டுள்ளன. இயற்கை சூழலுக்கு மரியாதை காட்டும் பல நடைமுறைகள் அன்றாட வாழ்வில் வேரூன்றியுள்ளன. காலநிலை மாற்றத்திற்கு எதிரான நமது போராட்டத்தில் அவை விலைமதிப்பற்றவை என்பதை நிரூபிக்க முடியும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்ட நிலைத்தன்மை பற்றிய இந்த ஆழமான அறிவு, இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியை உலகிற்கு வாழ்க்கை மந்திரத்தை வழங்க வழிவகுத்தது - இது கிரகத்தின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். உலகளாவிய காலநிலை நெருக்கடியைக் கையாள்வதில் லைஃப் இயக்கம் இந்தியாவின் பங்களிப்பாகும். லைஃப் இயக்கம், நவீன உலகில் நிலையான வாழ்க்கை முறையைப் பின்பற்றும் நபர்களை 'கோள் சார்பு மக்களாக' மாற்ற முயல்கிறது. இங்கிலாந்தில் இருந்து சிஓபி தலைமைப் பதவியை எகிப்து ஏற்றுக்கொண்ட விழாவில் திரு பூபேந்தர் யாதவ் கலந்து கொண்டார்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த